ஜெயந்த பட்டர்
ஜெய்ந்த பட்டர் | |
---|---|
பிறப்பு | ஏறத்தாழ கிபி 820[1] |
இறப்பு | ஏறத்தாழ கிபி 900 [1] |
சமயம் | இந்து சமயம் |
தத்துவம் | நியாய தத்துவம் |
ஜெயந்த பட்டர் (Jayanta Bhatta) (பிறப்பு:கிபி 820 – இறப்பு:கிபி 900)[1]) இந்தியாவின் காஷ்மீர் கவிஞரும், நியாய தத்துவ ஆசிரியரும்[2][3], காஷ்மீர உத்பால வம்ச மன்னர் சங்கரவர்மனின் ஆலோசகரும் ஆவார்.இவர் நியாய தத்துவம் குறித்து மூன்று நூல்களை எழுதியுள்ளார். அவைகல் தற்போது கிடைக்கவில்லை. இவர் பாணினி எழுதிய சமசுகிருத மொழி இலக்கண நூலான அஷ்டாத்தியாயீக்கு விளக்க உரை எழுதியுள்ளார்.[1]
படைப்புகள்[தொகு]
- நியாயமஞ்சரி (நியாய தத்துவ நூல்)
- நியாயமாலிகா (நியாய தத்துவ நூல்)
- ஆகமதாம்பரா (நாடக நூல்)
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 Hegde, R. D. (1983). "BHAṬṬA JAYANTA." Annals of the Bhandarkar Oriental Research Institute, vol. 64, no. 1/4. பக். 1–15. http://www.jstor.org/stable/41693038.
- ↑ Francis Clooney (2010). Hindu God, Christian God: How Reason Helps Break Down the Boundaries Between Religions. Oxford University Press. பக். 39–40. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-973872-4. https://books.google.com/books?id=ub0VDAAAQBAJ&pg=PA39.
- ↑ Bhatta Jayanta; Csaba Dezsö (2005). Much Ado about Religion. New York University Press. பக். 15–17. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8147-1979-4. https://books.google.com/books?id=kigTCgAAQBAJ.