பன்னாட்டு மன்னிப்பு அவை
உருவாக்கம் | சூலை1961 பீட்டர் பெனன்சன் என்பவரால் ஐக்கிய இராச்சியத்தில் |
---|---|
வகை | இலாப நோக்கற்றது |
தலைமையகம் | இலண்டன், ஐக்கிய இராச்சியம் |
தலைமையகம் |
|
சேவைகள் | மனித உரிமைகளைப் பாதுகாத்தல் |
துறைகள் | சட்ட ஆலோசனை, ஊடக அறிவிப்பு, நேரடி முறையீட்டு செயற்பாடுகள், ஆய்வு, lobbying |
உறுப்பினர் | 7 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களும் ஆதரவாளர்களும்[1] |
சலில் செட்டி | |
வலைத்தளம் | www |
ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டவாறும் அது போன்ற பிற சாசனங்களில் வெளிப்படுத்தவாறும் மனித உரிமைகளை உலகெங்கும் வலியுறுத்தவும் பாதுகாக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஒர் இலாப நோக்கற்ற அமைப்பே சர்வதேச மன்னிப்பு சபை அல்லது பன்னாட்டு மன்னிப்பு அவை (Amnesty International) ஆகும். இவ்வமைப்பானது ஐக்கிய இராச்சியத்தில் 1961 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பன்னாட்டு மன்னிப்பு அவை உலகளாவிய ரீதியில் நடைமுறையில் இருக்கும் மனித உரிமைகளையும் உலகில் பன்னாட்டு ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளையும் ஒப்பிட்டு அவ்வாறு மனித உரிமைகள் மதிக்கப்படா இடங்களில் அதை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்படும். மனித உரிமைகளை மீறுபவர்களுக்கு மக்களூடாக இக்கருத்துக்களை முன்னெடுத்துச் சென்று அழுத்தம் கொடுக்கப்படும்.
1977 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இவ்வமைப்பிற்கு வழங்கப்பட்டது[2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Who we are". Amnesty International. Retrieved 16 March 2015.
- ↑ ""Amnesty International – Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. Retrieved 19 சூலை 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help)