இரமானுசாரிய திவ்விய சரிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரமானுசாரிய திவ்விய சரிதம் [1] என்னும் நூலை இயற்றியவர் பிள்ளை லோகாசாரியார்.
இவர் வைணவ குருபரம்பரையில் ஒருவர்.[2]
301 பக்கங்கள் கொண்ட நூல் இது.
இதில் 76 பக்கங்களில் வடமொழி சுலோகங்கள் கிரந்த எழுத்திதும், தெலுங்கு எழுத்திலும் உள்ளன.
தமிழ்ப் பகுதியில் இராமானுசர் வரலாறு கூறும் பாடல்கள் உள்ளன.
இந்த நூலில் பிற்கால இடைச்செருகல்கள் உள்ளன எனக் கூறுகின்றனர்.

  • இந்த நூல் தோன்றிய காலம் 11ஆம் நூற்றாண்டு.

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. 
  2. இந்த நூலை அச்சேற்றி வெளியிட்டவர் கந்தாடை – திருவேங்கடாசாரியர். 1886.