பள்ளிக்கரணை
| பள்ளிக்கரணை | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | எல். சித்திரசேனன் [3] |
| மக்கள் தொகை | 22 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
பள்ளிக்கரணை (ஆங்கிலம்:Pallikaranai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்த பேரூராட்சி பள்ளிக்கரணை பேரூராட்சி. 2012ல் பள்ளிக்கரணை சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுவிட்டது. பள்ளிக்கரணை சென்னை மாநகராட்சியில் 189வது வார்டு, 14வது மண்டலத்தில் உள்ளது.
மக்கள் வகைப்பாடு [தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,503 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். பள்ளிக்கரணை மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பள்ளிக்கரணை மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
இயற்கை வளம் [தொகு]
இப்பகுதி வங்கக்கடலை ஒட்டியுள்ளது. இங்கு சதுப்புநிலக்காடுகள் காணப்படுகின்றன. இக்காடுகள் உயிரியல் சிறப்பு வாய்ந்தவை. இக்காடுகளை பல பறவைகள், நிலநீர் வாழிகள் போன்றவை வாழிடமாகக் கொண்டுள்ளன.
ஆதாரங்கள் [தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
சென்னை மாநகராட்சி இணையதளம் [[1]]
[[பகுப்பு:சென்னை மாநகராட்சி