துறைமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னை துறைமுகம்.

துறைமுகம் (port) என்பது கப்பல்கள் மற்றும் படகுகள் வந்து தங்கி செல்வதற்குரிய இடம் ஆகும். இங்கே கப்பல்களுக்கு வேண்டிய பொருட்கள், தொழிலாளருக்கு இருப்பிடம் போன்றவை வழங்கப்படும். துறைமுகங்களை இயற்கைத் துறைமுகங்கள், செயற்கைத் துறைமுகங்கள் என இருவகைப்படுத்தலாம். இயற்கைத் துறைமுகங்கள் இராணுவ, பொருளாதாரக் காரணங்களால் முக்கியத்துவமுடையவையாக இருந்துவருகின்றன. துறைமுகங்கள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை பறைசாற்றும் முக்கிய அம்சமாக உள்ளது. இது மிகப் பெரும் சரக்குகள், பொருட்களை ஒரு நாட்டில் இருந்து மற்ற நாடுகளுக்கு கடல்வழிப் போக்குவரத்தின் மூலம் எடுத்துச் செல்லவும் உதவுகின்றன.

  • செயற்கைத் துறைமுகம் - எடுத்துக்காட்டு - சென்னைத் துறைமுகம்
  • இயற்கைத் துறைமுகம் - மும்பைத் துறைமுகம்
சங்ககாலத் துறைமுகங்கள்[தொகு]
அடிக்குறிப்பு[தொகு]
  1. விண் பொர நிவந்த, வேயா மாடத்து
    இரவில் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி
    உரவு நீர் அழுவத்து ஓடு கலம் கரையும்
    துறை (பெரும்பாணாற்றுப்படை 351)

"https://ta.wikipedia.org/w/index.php?title=துறைமுகம்&oldid=3087092" இலிருந்து மீள்விக்கப்பட்டது