முசிறி
| முசிறி | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | ஜெயசிறி முரளிதரன் [3] |
| சட்டமன்றத் தொகுதி | முசிறி |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| மக்கள் தொகை | 27,886 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
• 82 metres (269 ft) |
முசிறி (Musiri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
ஒப்புமை நினைவால் கருவூர்ச் சேரர் சூட்டிய பெயர் இந்த ஊர் முசிறி. முசிறி (சேரநாட்டுத் துறைமுகம்). இதன் பெயர்தான் காவிரிக்கரை முசிறிக்குச் சூட்டப்பட்டுள்ளது.
பொருளடக்கம் |
[தொகு] புவியியல்
இவ்வூரின் அமைவிடம் ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 82 மீட்டர் (269 அடி) உயரத்தில் இருக்கின்றது.
[தொகு] மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 27,886 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். முசிறி மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. முசிறி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
[தொகு] கல்வி
முசிறியில் மொத்தம் 4 உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன.
- அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி (முசிறி to திருச்சி சாலை)
- அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளி (முசிறி to தா.பேட்டை சாலை)
- அமலா பெண்கள் மேல்நிலை பள்ளி [தமிழ் & ஆங்கிலம் (அரசு உதவி)] (முசிறி to துறையூர் சாலை)
- சாந்தி மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளி (முசிறி to தா.பேட்டை சாலை)
[தொகு] கல்லூரி
முசிறி அருகே 4 கி.மீ தொலைவில் அதன் எல்லைக்குட்பட்ட வடுகபட்டி என்னும் பகுதியில் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது[6] 1968 முதல் செயல்பட்டு வருகின்றது.
[தொகு] பிற தகவல்கள்
மேலும் முசிறி வளர்ச்சி பெற்று வரும் ஒரு தேர்வு நிலை பேரூராட்சியாகும். இங்கே 2 பேருந்து நிலையங்கள் உள்ளன. இங்கே பல வளர்ந்து வரும் தொழில் துறை நிறுவனங்கள் உள்ளன. முசிறியின் முக்கிய பகுதியாகக் கருதப்படும் கைகாட்டி பகுதியில் பல ஜவுளி கடைகள், வங்கிகள், நிதி நிறுவன்ங்கள் மற்றும் பங்கு வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ளன.
முசிறி அருகே சுமார் 14 கி.மீ தொலைவில் அமையப் பெற்ற வைணவ தலமே பிரசன்னா வெங்கடாசலபதி ஆலயமாகும்.. இக்கோவிலானது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். மேலும் மன நலம் பாதிக்கபட்டோரை குணமாக்கும் சக்தி வாய்ந்த கோவில் என்று நம்பப்படுகிறது.
[தொகு] ஆதாரங்கள்
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
- ↑ "Musiri". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
- ↑ www.aagactn.tk