சூம்ர வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூம்ர வம்சம்
سومرن جو سلسله
கி பி 1024–1351
பேசப்படும் மொழிகள்சிந்தி
குஜராத்தி
அரசாங்கம்முடியாட்சி
வரலாறு 
• சூம்ர வம்சத்தின் தொடக்கம்
கி பி 1024
• சூம்ர வம்சத்தின் முடிவு
1351
முந்தையது
பின்னையது
ஹப்பாரி வம்சம்
சம்மா வம்சம்

சூம்ர வம்சம் (Soomra dynasty) (சிந்தி மொழி: سومرن جو سلسله‎) என்பது தற்கால பாகிஸ்தானின் சிந்து, பலுசிஸ்தான் மற்றும் இந்தியாவின் குஜராத் பகுதிகளை கி பி 1024 முதல் 1351 முடிய 327 ஆண்டுகள் ஆண்ட அரச குலமாகும்.

சூம்ர வம்சத்தினர் இராஜபுத்திர குலத்தின் வழித்தோன்றல்கள் ஆவார்.[1]

கஜினிப் பேரரசர் கஜினி முகமதுவின் மகன் சுல்தான் முதலாம் மசூத்திற்கு (ஆட்சிக் காலம் 1030-1040) எதிராக கிளர்ச்சி செய்து, கஜினிப் பேரரசின் சிந்துப் பகுதிகளைக் கைப்பற்றி ஆண்டவர்கள்.

பின்னர் இராஜபுத்திர குல சம்ம வம்சத்தவர்கள் கி பி 1351-இல் சூம்ர வம்சத்தவர்களை வென்று சிந்துப் பகுதிகளை கைப்பற்றி ஆண்டனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Umedani, Loung V.; Meghwar, Phuloo (2013). "Migratory Aspects of Inhabitants of Indus Valley Civilization- A Historical Perspective". International Research Journal of Art & Humanities (Asianet-Pakistan) 41 (41). ""The two main Rajput tribes of Sindh are: the Samma, descendants of the Samma dynasty who ruled Sindh during (1351 - 1521 A.D); and the Soomra, descendants of the Soomra dynasty who ruled Sindh during (750 - 1350 A.D)."". 
  2. Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. பக். 114. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9-38060-734-4. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூம்ர_வம்சம்&oldid=2245636" இலிருந்து மீள்விக்கப்பட்டது