இந்திரா பார்த்தசாரதி
| இந்திரா பார்த்தசாரதி | |
|---|---|
|
தாக்கங்கள்
|
இந்திரா பார்த்தசாரதி (1930-) தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இவர் 40 ஆண்டுகாலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியாவர். இது தவிர போலந்து நாட்டில் வார்சா நகரில் அமைந்துள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியத் தத்துவமும் பண்பாடும்’ கற்பிக்கும் ஆசிரியராகவும் இருந்தார். 17 புதினங்கள், 6 சிறுகதைத் தொகுப்புகள் என பல படைப்புக்கள் படைத்துள்ளார். சில நாடகங்களும் படைத்துள்ளார். சாகித்திய அகாதமி விருது தவிர தமிழக அரசு விருது, சரஸ்வதி சம்மான் போன்ற பல விருதுகளைப் பெற்றவர்.
பொருளடக்கம் |
தொடக்க காலம் படைப்புகள் [தொகு]
பள்ளிப் பருவத்தில் இவர் எழுத்தாளர் தி. ஜானகிராமனின் மாணவர். தில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் 1960களில் பணியாற்றி வந்தார். இவர் முதலில் ஆனந்த விகடன் போன்ற கிழமை இதழ்களில் (வார இதழ்களில்) எழுதத்தொடங்கினார். பின்னர் தீபம், கல்கி, கணையாழி ஆகிய இதழ்களிலில் எழுதிவந்தார்.
'மழை' நாடகம் இவர் படைத்த முதல் நாடகம் ஆகும். நிலம் என்னும் நல்லாள் எனும் தலைப்பில் நாவலாக எழுதிப் பின்னர் நண்பர் ஒருவர் நாடகமாக எழுதச்சொன்னதால் நாடகமாக எழுதினார். பிற்காலத்தில் இவர் எழுதிய "நந்தன் கதை" [1], ராமானுஜர், ஔரங்கசீப் என்னும் நாடங்களும், "ஏசுவின் தோழர்கள்" போன்ற படைப்புகள் நல்ல வரவேற்பை பெற்றன.
படைப்புகள் [தொகு]
நாடக நூல்கள் [தொகு]
- மழை
- போர்வை போர்த்திய உடல்கள்
- கால எந்திரம்
- நந்தன் கதை
- ஒளரங்கசீப்
- ராமானுஜர்
- கொங்கைத்தீ
- பசி
- கோயில்
பிற நூல்கள் [தொகு]
- ஏசுவின் தோழர்கள்
- காலவெள்ளம்
- சத்திய சோதனை
- ஒளரங்கசீப்
- குருதிப்புனல்
- தந்திர பூமி
- சுதந்தர பூமி
- வேதபுரத்து வியாபாரிகள்
- கிருஷ்ணா கிருஷ்ணா
- Ashes and Wisdom
- மாயமான் வேட்டை
- ஆகாசத் தாமரை
- கிருஷ்ணா கிருஷ்ணா
- அக்னி
- தீவுகள்
- வெந்து தணிந்த காடுகள்
- வேர்ப்பற்று
- Wings in the Void
- Into this Heaven of Freedom
- திரைகளுக்கு அப்பால்
- ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன
- இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள்
படைப்புகளில் எடுத்தாண்ட கருத்துக்கள் [தொகு]
இந்திர பார்த்தசாரதி படைப்புகளில் பெரும்பாலும் நடுத்தர வர்க்க மக்களின் மனக்குழப்பங்கள், உறவுப் பிறழ்ச்சிகள் முதலானவை இவரது நாடகங்களில் முக்கிய கருத்தாக இடம் பெறுகின்றன. உள்மன உறுத்தல்கள், தன்முனைப்புப் போராட்டம், தளைகளிலிருந்து விடுபட விரும்பும் விடுதலை மனநிலை ஆகியவை இவருடைய நாடகங்களில் வெளிப்படுகின்றன. விரக்தி, தற்கொலை, மரணம், தோல்வி, தனிமை, நோய், துன்பம், மனஉளைச்சல் என்னும் கூறுகள் மிகுதியாக வெளிப்படுத்தப்படுகின்றன. பசி நாடகத்தில் தற்கொலை, மழை நாடகத்தில் பொருந்தாக் காதல், மரணம், விரக்தி, காலயந்திரம் நாடகத்தில் புற்றுநோய், தற்கொலை முயற்சி, தோல்வி, நந்தன் கதையில் அடிமைத்தனம், சாதியை அழிக்கமுடியாது என்ற விரக்தி, கோயில் நாடகத்தில் அறியாமை, ஏமாற்று, போர்வை போர்த்திய உடல்கள் நாடகத்தில் விபச்சாரம், பெண்ணடிமை, மரணம், ஒளங்கசீப் நாடகத்தில் கதைத் தலைவனின் தனிமை என்று திறனாய்வாளர்கள் எடுத்துக்காட்டுகின்றனர். நிகழ்ச்சிகளுக்குப் பின்னால் ஓடும் உளவியல் அசைவுகளை இவர் நாடகங்கள் சித்திரிக்கின்றன. இவர் எழுத்துகளில் பொதுவாகக் காணப்படும் பண்பு நிறைவின்மை.
விருதுகள் [தொகு]
1977ல் குருதிப்புனல் என்னும் புதினத்திற்கு இந்திய சாகித்ய அகாதமி விருது பெற்றார்.
- சரஸ்வதி சம்மான்
- சாகித்ய அகாதமி (குருதிப்புனல் நூலுக்காக, 1977)
- பாரதீய பாஷா பரிஷத்
- 2010 -- பத்ம ஸ்ரீ விருது.