கல்கி (இதழ்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| இதழாசிரியர் | லஷ்மி நடராஜன் |
|---|---|
| முன்னாள் இதழாசிரியர்கள் | சீதா ரவி, கி. ராஜேந்திரன், டி. சதாசிவம், கி. கிருஷ்ணமூர்த்தி |
| முதல் வெளியீடு | 1941 |
| நிறுவனம் | பரதன் பப்ளிகேஷன்ஸ் |
| நாடு | |
| மொழி | தமிழ் |
| வலைத்தளம் | kalkionline.com |
கல்கி உலகத்தமிழர்களிடையே நன்கு அறியப்பட்ட தமிழ் வார இதழாகும். இது முதன் முதலில் எழுத்தாளர் கல்கி கி. கிருஷ்ணமூர்த்தியால் 1941 இல் ஆரம்பிக்கப்பட்டது. அவருக்குப் பின்னர் டி. சதாசிவம், கல்கியின் புதல்வர் கி. ராஜேந்திரன், புதல்வி சீதா ரவி ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர். தற்போது ஆசிரியராக இருப்பவர் கல்கியின் பேத்தி லஷ்மி நடராஜன் ஆவார்.