பனையப்பட்டி ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனையப்பட்டி
—  ஊராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் புதுக்கோட்டை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, இ. ஆ. ப [3]
ஊராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி சிவகங்கை
மக்களவை உறுப்பினர்

கார்த்தி சிதம்பரம்

சட்டமன்றத் தொகுதி திருமயம்
சட்டமன்ற உறுப்பினர்

எஸ். ரகுபதி (திமுக)

மக்கள் தொகை 2,276
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


பனையப்பட்டி ஊராட்சி (Panaiyapatti Gram Panchayat), தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திருமயம் சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.[6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2276 ஆகும். இவர்களில் பெண்கள் 1162 பேரும் ஆண்கள் 1114 பேரும் உள்ளனர்.

அடிப்படை வசதிகள்[தொகு]

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]

அடிப்படை வசதிகள் எண்ணிக்கை
குடிநீர் இணைப்புகள் 279
சிறு மின்விசைக் குழாய்கள் 8
கைக்குழாய்கள் 17
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 7
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள்
உள்ளாட்சிக் கட்டடங்கள் 23
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள்
ஊரணிகள் அல்லது குளங்கள் 8
விளையாட்டு மையங்கள் 1
சந்தைகள் 1
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 130
ஊராட்சிச் சாலைகள் 12
பேருந்து நிலையங்கள்
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 7

பனையப்பட்டி என்னும் சிறிய கிராமம் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.இங்கு நகரத்தார் உட்பட பல இன மக்கள் வசித்து வருகிறார்கள்.இங்கு வரலாற்று சிறப்பு மிக்க பல கோயில்கள் உள்ளது.பல மத திருவிழாக்கள் மத நல்லிணக்கத்துடன் கொண்டாடப்படுகின்றன.பனையப்பட்டியைச் சுற்றி பல சிறிய கிராமங்கள் உள்ளன.மேலப்பனையூர்,பூவக்கோன்பட்டி,வடகாடு,பளுவினிபட்டி குலமங்கலம்,நரியங்காடு,வீரனாம்பட்டி,கூடலூர்,கொப்பரம்பட்டி போன்றவை அக்கிராமங்கள் ஆகும்.

பொருளடக்கம்[தொகு]

வரலாறு[தொகு]

பனையப்பட்டி கிராமத்தை பண்டைய சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் ஆட்சி புரிந்த ஒரு முத்தரையர்கள் அடங்கிய ஒரு கிராமம் ஆகும்.தற்போது இது செட்டிநாடு ஊர் என அழைக்கப்படுகிறது.இந்த ஊரில் நகரத்தார்கள் ஐந்து கரைகளாக வசித்து வருகிறார்கள்.கிட்டத்தட்ட 500 புள்ளிகள் வசித்து வருகிறார்கள். புள்ளிகள் என்பது புள்ளி என்பதன் பன்மை வடிவம்.புள்ளி என்பது ஒரு குடும்பத்தை குறிக்கும் சொல்லாட்சி. இந்த கிராமம் பக்கத்தில் உள்ள மேலப்பனையூர் கிராம குடியிருப்புகளுடன் இணைப்பாக இருந்தது.பனையூரைப் பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரத்தில் உள்ளன.மேலப்பனையூர் புரம் பனையான் வாழ் கோட்டம் என அழைக்கப்பட்டது. இதற்கு அய்யனாரின் வசிப்பிடம் என்பது பொருள்.சாலைகள்,மருத்துவமனைகள்,பள்ளிகள் என புதிய வசதிகள் ஏற்பட்டவுடன் மக்கள் அருகில் உள்ள பனையப்பட்டிக்கு புலம் பெயர்ந்தனர்.

விவசாயம்[தொகு]

இந்த ஊரைச் சுற்றி உள்ள அனைத்து இன மக்களும் நெல்,கரும்பு போன்ற பயிர்களை விளைவித்து வருகின்றனர்.கோடை கால பயிர்களான கடலை,கம்பு,திணை மற்றும் பிற கோடைகால பயிர்களையும் பயிர் செய்கின்றனர்.மேலும் காய்கறிகளும் விளைவிக்கின்றனர்.சிறு காய்கறி தோட்டமும் உள்ளது.

தொழில்கள்[தொகு]

இங்கு பித்தளைப்பாத்திரங்கள் செய்யும் தொழிற்சாலை உள்ளது. மேலும் அலமாரி செய்யும் தொழிற்சாலையும் உள்ளது. மரம் அறுக்கும் தொழிற்சாலை ஒன்றும் உள்ளது.கிரில் கதவுகளும் செய்து தருகிறார்கள்.

உள்ளூர் வியாபாரம்[தொகு]

இங்கு அதிகமாக தேநீர் கடைகள் உள்ளன.மாணவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு அதிகமாக உள்ளது.பூக் கடைகள்,பழக் கடைகள் உள்ளன.மளிகைக் கடைகள்,பெட்டிக் கடைகள் அதிகம் உண்டு.ஐஸ்கிரீம் கடைகள் உண்டு.தேவையான பாலை எப்போதும் வாங்கிக் கொள்ள முடியும்.தேவையான தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் தினசரி வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.எந்தப் பொருள் வேண்டுமானாலும் ஆன்லைன் வர்த்தகம் மூலமும் வாங்கிக் கொள்ளலாம்.வாரம் ஒரு முறை ராமன் செட்டியார் திருமண மண்டபம் முன்பு காய்கறிச் சந்தை கூடுகிறது.

காவல் நிலையம்[தொகு]

பனையப்பட்டியில் திருமயம் பொன்னமராவதி சாலையில் பூஞ்சோலை நகரில் காவல் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

ஆரம்ப சுகாதார நிலையம்[தொகு]

பனையப்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அரசின் உதவியுடன் நவீன வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

வங்கிகள்[தொகு]

இங்கு அரசுடமையாக்கப்பட்ட வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி[7],தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ.வங்கி[8] ஆகியவை செயல்பட்டு வருகிறது.இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தானியங்கி பண சேவையை வங்கி நேரங்களில் பயன்படுத்தலாம்.தனியார் வங்கியின் ஒரு தானியங்கி பண சேவையும் பனையப்பட்டி பேருந்து நிலையம் அருகில் இயங்கி வருகிறது.

அஞ்சல் குறியீட்டு எண்[தொகு]

பனையப்பட்டியில் கிளை அஞ்சல் அலுவலகம் ஒன்று இயங்கி வருகிறது.இதற்கு மேலே உள்ள அஞ்சல் அலுவலகம் குழிபிறை. அஞ்சல் குறியீடு எண்[9] : 622 402

உணவகங்கள்[தொகு]

இங்கு காலை,மதியம்,இரவு மூன்று வேலைகளிலும் குறைந்த செலவில் நல்ல உணவு உண்ண முடியும். இரவுக்கடைகளும் உண்டு.இரவில் இட்லி,தோசை,பரோட்டா மிகவும் ருசியாக சாப்பிடலாம்.

பெட்ரோல் பங்குகள்[தொகு]

பனையப்பட்டியில் இரண்டு பெட்ரோல் பங்க்குகள் உண்டு. மருத்துவமனைக்கு அருகில் ஒன்றும், பனையப்பட்டி குழிபிறை சாலையில் ஒன்றும் உள்ளது.

பள்ளிகள்[தொகு]

இங்கு உயர்நிலைப்பள்ளி ஒன்றும்,துவக்கப்பள்ளி ஒன்றும் உள்ளது. இரண்டுமே உதவி பெரும் பள்ளிகள்[10].இரு பள்ளிகளிலும் சுமார் 450 மாணவ,மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். உயர்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பில் ஆசிரியர்கள் ஒவ்வொரு வருடமும் நல்லதொரு தேர்ச்சி விகிதத்தை கொடுத்து வருகிறார்கள்.பாதிக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் 80 சதவிகிதத்துக்கும் மேல் எடுத்து வருகிறார்கள்.

கோயில்கள்[தொகு]

இந்த ஊரின் எல்லையில் விநாயகர் ஆலயம் ஒன்று உள்ளது. இந்த ஊரின் பேருந்து நிலையம் அருகில் சிவன் கோயில் அழகுற அமைந்துள்ளது.இதற்கு 2005ம் ஆண்டு மஹா சம்ப்ரோக்ஷண கும்பாபிஷேகம் நடந்தது. 12 வருடங்களுக்கு பிறகு இந்த வருடம் ஜூலை மாதம் 5ம் நாள் அன்று சிறப்பாக மஹா சம்ப்ரோக்ஷண கும்பாபிஷேகம் நடைபெற்றது.நகரத்தார்கள் அனைவரும் இணைந்து சிறப்பாக நடத்தி வைத்தார்கள். சுப்பையா சுவாமி கோயில் அமைந்துள்ளது. சுப்பையா சுவாமிக்கு ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மகேஷ்வர பூசை மற்றும் மறுநாள் இடும்பன் பூசை செய்து அபிசேக ஆராதனைகள் செய்து முருகனை வணங்கி இரண்டு நாட்களும் அனைத்து ஊர் மக்களுக்கும் அன்னதானம் செய்து வருகிறார்கள். இது ஐந்து கரைகள் சேர்ந்து செய்வதால் இதற்கு ஐந்து பேர் சுப்பையா கோயில் என பெயரும் உண்டு.

தேவாலயங்கள்[தொகு]

இங்கு மாதா மற்றும் ஏசுவை வணங்க தேவாலயம் ஒன்று உள்ளது. வருடம் ஒரு முறை இதற்கு விழா எடுத்து சிறப்பிக்கிறார்கள்.

திருவிழாக்கள்[தொகு]

கொன்னையூர் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது பக்தர்கள் அனைவரும் இரவு பால் குடமும்,மறுநாள் பகலில் அக்னி பால் குடமும் எடுத்து செல்கின்றார்கள்.கொன்னையூர் மாரியம்மன் பொங்கலின்போதும் மக்கள் பெருந்திரளாகச்சென்று முத்துமாரியாம்மனை வணங்கி வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் சுப்பையா சுவாமி பூசை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த நிகழ்வு மூன்று நாள் வரை கொண்டாடப்படுகிறது.

பொது[தொகு]

இந்த ஊரில் சாலைகள் மிகவும் குறுகலானவை.வாகனங்கள் சென்று வருவது மிகவும் சிரமமான ஒன்று.மிகவும் அமைதியான வாழ்க்கையை இங்குள்ள மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.பெரும்பாலும் வீடுகளை விட்டு வெளியே வருவது இல்லை.தெருக்கள் பகல் நேரங்களில் வெறிச்சோடி கிடக்கும். மாலை வேளைகளில் கடைகளில் நல்ல கூட்டம் இருக்கும். சந்தை நாளன்று ஊர் மிகவும் சந்தோசமாக இருக்கும். அரசு பேருந்துகளும்,தனியார் பேருந்துகளும் இங்கு ஓடுகிறது.புதுக்கோட்டை மற்றும் பொன்னமராவதி சாலையில் இருக்கும் இவ்வூருக்கு நிறைய பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் திருமயம் மற்றும் பொன்னமராவதிக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இங்கிருந்து சாலை வழியே திருப்பத்தூர்,இராங்கியம்,காரைக்குடி,காரையூர் செல்வது எளிது.இந்த ஊருக்கு மிகவும் அருகில் உள்ள தொடர்வண்டி நிலையங்கள் நமனசமுத்திரம் மற்றும் திருமயம். சென்னைக்கும் இங்கிருந்து ஏறி செல்வதற்கு நேரடி பேருந்து வசதிகள் உள்ளன.இவை பொன்னமராவதியில் இருந்து இவ்வூர் வழியாக இயக்கப்படுகிறது.

சிற்றூர்கள்[தொகு]

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[11]:

  1. கொல்லக்காடு
  2. பூஞ்சோலைநகர்
  3. உதயசூரியபுரம்
  4. பனையப்பட்டி

சான்றுகள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  5. "திருமயம் வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  6. 6.0 6.1 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  7. http://banksifsccode.com/indian-overseas-bank-ifsc-code/tamil-nadu/pudukkottai/panayapatti-branch/
  8. https://bankifsccode.com/ICICI_BANK_LTD/TAMIL_NADU/PUDUKKOTTAI/PANAYAPATTI
  9. https://pincode.net.in/TAMIL_NADU/PUDUKKOTTAI/P/PANAYAPATTI
  10. http://righttoeducation.in/sites/default/files/Tamil%20Nadu%20Recognised%20Private%20Schools%20%28Regulation%29%20Act%2C%201973.pdf
  11. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனையப்பட்டி_ஊராட்சி&oldid=3562446" இருந்து மீள்விக்கப்பட்டது