திருமயம்
| திருமயம் | |||
| ஆள்கூறு | 10°14′50″N 78°45′02″E / 10.2471°N 78.750481°E | ||
| நாடு | |||
| பகுதி | சோழ நாடு | ||
| மாநிலம் | தமிழ்நாடு | ||
| மாவட்டம் | புதுக்கோட்டை | ||
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] | ||
| முதலமைச்சர் | விஜய்[2] | ||
| மாவட்ட ஆட்சியர் | |||
| பேரூராட்சி தலைவர் | |||
| சட்டமன்றத் தொகுதி | திருமயம் | ||
| சட்டமன்ற உறுப்பினர் | |||
| மக்கள் தொகை | 8,350 (2001[update]) | ||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
|
குறியீடுகள்
| |||
திருமயம் (ஆங்கிலம்: Thirumayam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
ஊராட்சியாக இருந்த இந்த ஊர் 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் பேரூராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது.[3][4]
பெயர்க்காரணம்
[தொகு]'திருமயம்' என்ற சொல் 'திருமெய்யம்' என்ற பெயரில் இருந்து வந்தது. 'திருமெய்யம்', என்பதை வடமொழியில் 'சத்யஷேத்திரம்' என்ற பெயரில் அழைப்பர். இங்கு கோட்டைக்கு அருகில் இருக்கும் சிவன் மற்றும் பெருமாள் கோயில்களான சத்தியகிரீஸ்வரர் மற்றும் சத்தியமூர்த்தி கோயில்களால் சத்யஷேத்திரம் என்று அழைக்கப்பெற்றது.[5]
மஹா விஷ்ணு "மெய்யர்" என்ற பெயரிலும் அழைக்கப்படுவார். அவர் இங்கு வந்தது எழுந்தருளியதால் 'திருமெய்யம்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. திருமயம் நகரம் முந்தைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
சிறப்புகள்
[தொகு]இங்கு சிவனுக்கும் திருமாலுக்கும் குடைவரை கோயில்கள் உண்டு. இங்கே இசை கல்வெட்டுக்கள் உண்டு. சிவன் கோயில் சற்று பழையது என்பர். வைணவர்களுக்கு இவ்வூர் சிறப்பு மிக்கது. இது ஆழ்வார் பாடல் பெற்ற தலம். திருமங்கை ஆழ்வார் இவ்வூரில் உள்ள திருமாலை,
- “மையார் கடலும் மணிவரையும் மா முகிலும்
- கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட
- மெய்யானை மெய்யமலையானைச் சங்கேந்தும்
- கையானை கைதொழாக் கையல்லகண்டாமே
எனப் பாடியுள்ளார்.
இங்கு ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் பஜனை மடம் உள்ளது. ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ ராமர் பட்டாபிசேகம் கொண்டாடப்படுகிறது.
இவ்வூரில் இந்திய விடுதலை வீரரும், பின்னாள் காங்கிரசில் தலைவராயும் இருந்த திரு சத்தியமூர்த்தி அவர்கள் 1887-இல் பிறந்தார்.

பாரத மிகு மின் நிறுவனம்: திருமயம் பிரிவு
[தொகு]திருமயத்தில் பாரத மிகு மின் நிறுவனம் (பாரத் ஹெவி எலக்ட்டிக்கல்ஸ் லிமிடெட்) புதிய தொழிற்சாலை ஒன்று 300 கோடி ரூபாய் செலவில் அமைந்துள்ளது. இது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் 2 ஆகத்து 2013 அன்று திறக்கப்பட்டது. கொதிகலங்களுக்கான குழாய்ப் பகுதிகள் இங்கு தயாரிக்கப்பட உள்ளன.
காட்சியகம்
[தொகு]- கோட்டை
- கோட்டைக்கு உள்ளே
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "புதிதாக 25 பேரூராட்சிகள், 2 சனவரி 2025". Archived from the original on 2025-09-23. Retrieved 2025-08-22.
- ↑ 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள் விரிவாக்கம் புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்கம், தினமலர் 1 சனவரி 2025
- ↑ origin of the name (etymology) "THE ORIGIN OF THE NAME (ETYMOLOGY)". Sudharsanam, A centre for Arts and Culture, Pudukkottai. Retrieved October 22, 2012.
{{cite web}}: Check|url=value (help) [தொடர்பிழந்த இணைப்பு]