திருமயம் சத்தியகிரீசுவரர் கோயில்

ஆள்கூறுகள்: 10°14′49″N 78°45′06″E / 10.246945°N 78.751615°E / 10.246945; 78.751615
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருமயம் சத்தியகிரீசுவரர் கோயில்
திருமயம் சத்தியகிரீசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
திருமயம் சத்தியகிரீசுவரர் கோயில்
திருமயம் சத்தியகிரீசுவரர் கோயில்
சத்தியகிரீசுவரர் கோயில், திருமயம், புதுக்கோட்டை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்:10°14′49″N 78°45′06″E / 10.246945°N 78.751615°E / 10.246945; 78.751615
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:புதுக்கோட்டை
அமைவிடம்:திருமயம்
சட்டமன்றத் தொகுதி:திருமயம்
மக்களவைத் தொகுதி:சிவகங்கை
ஏற்றம்:142 m (466 அடி)
கோயில் தகவல்
மூலவர்:சத்தியகிரீசுவரர்
தாயார்:வேணுவனேசுவரி
சிறப்புத் திருவிழாக்கள்:சித்திரைத் திருவிழா,
தைப்பூசம்,
ஆடிப்பூரம்,
தீபாவளி,
தைப்பொங்கல்,
தமிழ்ப் புத்தாண்டு,
ஆங்கிலப் புத்தாண்டு
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
சத்தியகிரீசுவரர் கோயில்

திருமயம் சத்தியகிரீசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், திருமயம் நகரில் அமைந்துள்ளது.

அமைவிடம்[தொகு]

இவ்வூர் புதுக்கோட்டையிலிருந்து 19.1 கி.மீ தொலைவில் உள்ளது.

மூலவர்[தொகு]

இத்தலத்தின் மூலவர் சத்தியகிரீசுவரர் ஆவார். இறைவி வேணுவனேஸ்வரி ஆவார். [1]

அமைப்பு[தொகு]

பல்லவர் காலத்தில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஒரே சுற்றுச்சுவருடன் இக்கோயிலும் இதற்கடுத்துள்ள பெருமாள் கோயிலும் திருமயம் மலைச்சரிவில் ஒரே கல்லில் குடைவரைக் கோயிலாக உள்ளது.[1] மதுரைக் கோயிலைப் போலவே சுவாமி சன்னதியும், அம்மன் சன்னதியும் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இந்தச் சிவன் கோயிலைத் தனியாகச் சுற்றி வர முடியாது. சிவன், பெருமாள் ஒரு சேர மலையை சுற்றி வந்தால் மட்டுமே கிரிவலம் செய்தல் முடியும்.[2]

கோயில் நடைதிறந்திருக்கும் நேரம்[தொகு]

காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.[1]

திருவிழா[தொகு]

சித்திரைத் திருவிழா, தைப்பூசம், பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம் உள்ளிட்ட நாள்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]