அழியாநிலை ஆஞ்சநேயர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அழியாநிலை ஆஞ்சநேயர் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி அருகில் அமைந்துள்ள அனுமார் கோயிலாகும். [1]

அமைவிடம்[தொகு]

அழியாநிலை என்ற ஊர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. [2]

இறைவன்[தொகு]

இங்குள்ள மூலவர் ஆஞ்சநேயர் ஆவார். [1] அவர் 2 அடி பீடத்தின் மீது 9 அடி உயரத்தில் அமைந்துள்ளார். [2]

அனுமன் ஜெயந்தி[தொகு]

அனுமன் ஜெயந்தியின்போது இக்கோயில் முன்பாக தன்வந்திரி ஹோமம் நடத்தப்படுகிறது. அங்கு பூசை செய்யப்படுகின்ற கலச நீரைக் கொண்டு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. [1]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]