சாந்தநாதசுவாமி கோயில், புதுக்கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாந்தநாதசுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.

மூலவர்[தொகு]

இக்கோயிலின் மூலவர் சாந்தநாதசுவாமி ஆவார். இறைவி வேதநாயகி என்றழைக்கப்படுகிறார். [1] மூலவர் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளார்.[2]

அமைப்பு[தொகு]

திருச்சுற்றில் தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, சூரியன், சந்திரன், லட்சுமி, சரஸ்வதி, கன்னி மூல கணபதி, வள்ளி தெய்வானையுடன் முருகர், சரபேஸ்வரர், ஸ்வர்ன ஆகர்ஷண பைரவர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. கோயிலின் தீர்த்தம் பல்லவன் குளம் ஆகும்.[2]

சிறப்பு[தொகு]

இக்கோயில் கி.பி.1071-1123இல் ஆண்ட முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. மூலவர் சன்னதியின் மேல் விதானத்தில் காணப்படுகின்ற கல்வெட்டில் இக்கோயில் குலோத்துங்க சோழீச்சரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[1] பிற்காலத்தில் இக்கோயில் சார்ந்தாரைக் காத்த நாயனார் கோயில் என்றழைக்கப்பட்டது.[2]

விழாக்கள்[தொகு]

ஆனி மாதம் பத்து நாள்கள், மாசி மகம், தெப்பத் திருவிழா ஆகியவை இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இக்கோயில் வழிபாட்டிற்காக காலை 6.00 முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 9.00 மணி வரையிலும் வழிபாட்டிற்காகத் திறந்துவைக்கப்பட்டிருக்கும்.[1] ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிசேகம், சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 புதுக்கோட்டைக் கோயில்கள், புதுக்கோட்டை மாவட்டத் திருக்கோயில்கள் பயணியர் கையேடு, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, 2003
  2. 2.0 2.1 2.2 அருள்மிகு சாந்தநாதர் திருக்கோயில், தினமலர் கோயில்கள்
  3. "புதுகை கீழ ராஜவீதி சாந்தநாத சுவாமி கோயில் அன்னாபிஷேக விழா, தினகரன், 12 நவம்பர் 2019". Archived from the original on 2019-11-18. பார்க்கப்பட்ட நாள் 2020-08-14.