உள்ளடக்கத்துக்குச் செல்

திருவுடையார்பட்டி திருமூலநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருமூலநாதர் கோயில்
திருமூலநாதர் கோயில் is located in தமிழ்நாடு
திருமூலநாதர் கோயில்
திருமூலநாதர் கோயில்
தமிழ் நாடு-இல் அமைவிடம்
பெயர்
வேறு பெயர்(கள்): 
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:புதுக்கோட்டை
அமைவிடம்:திருவுடையார்பட்டி
கோயில் தகவல்
மூலவர்:திருமூலநாதர்
தாயார்:திரிபுரசுந்தரி
குளம்: 
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று 
கல்வெட்டுகள்: 

திருமூலநாதர் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவுடையார்பட்டியில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். காசிக்கு இணையான பெருமையுடைய தலமாகக் கருதப்படுகிறது. வெள்ளாற்றங்கரையில் தோன்றிய சுயம்புலிங்கத்தின்மீது கி.பி.12-ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கோயில் கட்டப்பட்டது.[1]

அமைவிடம்

[தொகு]

புதுக்கோட்டை மாவட்டத்தின் திருவரங்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாண்டாக்கோடை ஊராட்சியில் திருவுடையார்பட்டி அமைந்துள்ளது. புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி சாலையில் 7 கி.மீ. தொலைவில் வாண்டாக்கோட்டையிலிருந்து 2 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.

இறைவன், இறைவி

[தொகு]

இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் திருமூலநாதர், இறைவி திரிபுரசுந்தரி அம்மன்.

பிற சன்னதிகள்

[தொகு]

மூலவர், தேவி சன்னதிகளைத் தவிர சொர்ணகால பைரவர், தட்சிணாமூர்த்தி, விநாயகர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. கோயிலுக்கு வெளியே முனீஸ்வரர் காணப்படுகிறார்.

சிறப்பு

[தொகு]

இங்கு தைப்பூச நாளில் தீர்த்தவாரி நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறுகிறது. காசிக்குச் சென்றுவருவதற்கு இணையான பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையின் பின்னணியாக அப்பகுதி மக்களால் கதைகள் கூறப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 தினமணி புத்தாண்டு மலர் 2013

வெளியிணைப்புகள்

[தொகு]