திருவுடையார்பட்டி திருமூலநாதர் கோயில்
திருமூலநாதர் கோயில் | |
---|---|
தமிழ் நாடு-இல் அமைவிடம் | |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | |
அமைவிடம் | |
நாடு: | ![]() |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | புதுக்கோட்டை |
அமைவிடம்: | திருவுடையார்பட்டி |
கோயில் தகவல் | |
மூலவர்: | திருமூலநாதர் |
தாயார்: | திரிபுரசுந்தரி |
குளம்: | |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
கல்வெட்டுகள்: |
திருமூலநாதர் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவுடையார்பட்டியில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். காசிக்கு இணையான பெருமையுடைய தலமாகக் கருதப்படுகிறது. வெள்ளாற்றங்கரையில் தோன்றிய சுயம்புலிங்கத்தின்மீது கி.பி.12-ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கோயில் கட்டப்பட்டது.[1]
அமைவிடம்
[தொகு]புதுக்கோட்டை மாவட்டத்தின் திருவரங்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாண்டாக்கோடை ஊராட்சியில் திருவுடையார்பட்டி அமைந்துள்ளது. புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி சாலையில் 7 கி.மீ. தொலைவில் வாண்டாக்கோட்டையிலிருந்து 2 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.
இறைவன், இறைவி
[தொகு]இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் திருமூலநாதர், இறைவி திரிபுரசுந்தரி அம்மன்.
பிற சன்னதிகள்
[தொகு]மூலவர், தேவி சன்னதிகளைத் தவிர சொர்ணகால பைரவர், தட்சிணாமூர்த்தி, விநாயகர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. கோயிலுக்கு வெளியே முனீஸ்வரர் காணப்படுகிறார்.
சிறப்பு
[தொகு]இங்கு தைப்பூச நாளில் தீர்த்தவாரி நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறுகிறது. காசிக்குச் சென்றுவருவதற்கு இணையான பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையின் பின்னணியாக அப்பகுதி மக்களால் கதைகள் கூறப்படுகின்றன.[1]
மேற்கோள்கள்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- திருமூலநாதர் கோவில் - புதுக்கோட்டை
- காசிக்கு இணையாக முக்தி தரும் திருவுடையார்பட்டி திருமூலநாதர்..., தினமணி, நாள்: திசம்பர் 20, 2012