மலையாமருங்கர் கோயில், பெருங்களூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலையாமருங்கர் கோயில், தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை வட்டத்தில் பெருங்களூரில் உள்ள ஒரு ஐயனார் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

புதுக்கோட்டை-தஞ்சாவூர் சாலையில் புதுக்கோட்டையிலிருந்து 18 கிமீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலில் உள்ள இறைவன் மலையாமருங்கர் அய்யனார், இறைவி பூரணி புஷ்கலை.[1]

சிறப்பு[தொகு]

பெருங்ளூரில் தன்னை வழிபடுகின்ற பக்தருக்கு கண் பார்வை வழங்கியதாகவும் அவர்களின் பரம்பரையினரே இக்கோயிலில் பணியாற்றி வருவதாகவும் கூறுகின்றனர். நாடி வருகின்ற பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் மலையாமருங்கருக்கு, தம் விருப்பங்கள் நிறைவேற யானை வாங்கி வைப்பதாக பக்தர்கள் வேண்டிக்கொள்கின்றனர்.[1]

திறந்திருக்கும் நேரம்[தொகு]

ஒரு கால பூசை இங்கு நடத்தப்பெறுகிறது.இக்கோயில் காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 8.00 வரையிலும் திறந்திருக்கும். சித்திரை மாதத்தில் சித்திரைத்திருவிழா 10 நாள்கள் சிறப்பாகக் கொண்டாடப்பெறுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 புதுக்கோட்டை மாவட்டத் திருக்கோயில்கள் பயணியர் கையேடு, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, சென்னை, 2003