தரங்கம்பாடி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தரங்கம்பாடி வட்டம் , தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நான்கு வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். [1]இந்த வட்டத்தின் தலைமையகமாக தரங்கம்பாடி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 70 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவ்வட்டத்தில் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 207,059 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 101,483 ஆண்களும், 105,576 பெண்களும் உள்ளனர். 51,611 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 88.8% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 83.57% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,040 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 21666 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 966 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 64,286 மற்றும் 68 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 84.82 , இசுலாமியர்கள் 9.68%, கிறித்தவர்கள் 5.12% மற்றும் பிறர் 0.38%ஆகவுள்ளனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தரங்கம்பாடி_வட்டம்&oldid=3328153" இலிருந்து மீள்விக்கப்பட்டது