தி. ஜானகிராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18: வரிசை 18:


==படைப்புகள்==
==படைப்புகள்==
தனது ஜப்பான் பயண அனுபவங்களை உதயசூரியன் என்னும் தலைப்பில் சுதேசமித்திரன் வார இதழில் எழுதினார். இது 1967ல் நூலாக வெளியிடப்பெற்றது. ரோமானிய செக்கோஸ்லோவோக்கியா சென்ற அனுபவங்களை கருங்கடலும் கலைக்கடலும் என்னும் தலைப்பில் 1974ல் வெளியிட்டார்.

==== மொழியாக்கம் ====
==== மொழியாக்கம் ====


*''அன்னை'' (மூலம்: ''கிரேசியா டெலடா'' - [[நோபல் பரிசு]] பெற்றது)
*''அன்னை'' (மூலம்: ''கிரேசியா டெலடா'' - [[நோபல் பரிசு]] பெற்றது)
===நாவல்கள்===
===நாவல்===
*''[[மோகமுள்]]''
*''[[மோகமுள்]]'' (1964)
*''அமிர்தம்''
*''அமிர்தம்'' (1945),
*''அம்மா வந்தாள்''
*''அம்மா வந்தாள்'' (1966)
*''மரப்பசு''
*''மரப்பசு'' (1975)
*''நளபாகம்''
*''நளபாகம்'' (1983)
*''மலர்மஞ்சம்''
*''மலர்மஞ்சம்'' (1961)
*''உயிர்த்தேன்''
*''உயிர்த்தேன்'' (1967)
*''அன்பே ஆரமுதே''
*''அன்பே ஆரமுதே'' (1963)
*''செம்பருத்தி''
*''செம்பருத்தி'' (1968)
*''அடி'' (1979)


===குறுநாவல்கள்===
===சிறுகதை===
*''கமலம்'' (1963)
*''தோடு'''' (1963),
*''அவலும் உமியும்'' (1963),
*''சிவஞானம்'' (1964),
*''நாலாவது சார்'' (1964),
*''வீடு''

===பயண நூல்கள்===
*"உதயசூரியன்" (1967)
*"கருங்கடலும் கலைக்கடலும் (1974)

===சிறுகதைகள்===
*[http://azhiyasudargal.blogspot.com/2010/10/blog-post_19.html பாயசம்]
*[http://azhiyasudargal.blogspot.com/2010/10/blog-post_19.html பாயசம்]
*பிடிகருணை
*பிடிகருணை
வரிசை 50: வரிசை 64:
*கொட்டுமேளம்
*கொட்டுமேளம்
*சிவஞானம்
*சிவஞானம்
*

===நாடகம்===
*நாலுவேலி நிலம்
*வடிவேல் வாத்தியார் ''


===கட்டுரை===
===கட்டுரை===
வரிசை 61: வரிசை 70:
*''கருங்கடலும் கலைக்கடலும்'' (பயணக் கட்டுரை)
*''கருங்கடலும் கலைக்கடலும்'' (பயணக் கட்டுரை)
* ''நடந்தாய் வாழி காவேரி'' (காவேரி கரை வழியாக பயணம்)
* ''நடந்தாய் வாழி காவேரி'' (காவேரி கரை வழியாக பயணம்)


===நாடகம்===
*"நாலுவேலி நிலம்" (1958)
*"வடிவேல் வாத்தியார்'' (1963),
*"டாக்டர் மருந்து"


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

00:29, 23 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

தி.ஜானகிராமன்

தி. ஜானகிராமன் (T.Janakiraman, பெப்ரவரி 28, 1921 - நவம்பர் 18, 1982 [1]. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், தேவக்குடி) ஒரு புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர். தி.ஜா என்றும் அழைக்கப்படுபவர். சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுப்புக்காக தமிழுக்கான சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர். தமிழின் மிகப்புகழ்பெற்ற நாவல்களான மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள் போன்றவற்றை எழுதியவர்.

தி.ஜா இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர். தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்து தேவங்குடியில் 1921ஆம் ஆண்டு பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவர், பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன் பின்னர் தமிழின் முதன்மையான இலக்கிய இதழாக விளங்கிய கணையாழி மாத இதழில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த தி. ஜானகிராமன் 1982ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு சிறு உடல் நலக் குறைவிற்குப் பிறகு இயற்கை எய்தினார்.

இவர் சமையற்கலையிலும் வல்லவர். இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம் முதலியவற்றிலும் ஈடுபாடு மிக்கவர்.

கல்வி

இவர் தஞ்சாவூர் புனித பீட்டர் பள்ளியிலும், சென்ரல் பிரைமரிப் பள்ளியிலும் தொடக்கக் கல்வியையும், 1929 - 1936 வரை கல்யாண சுந்தரம் உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் கற்றவர். 1936 - 194 வரை கும்பகோணம் அரசினர் கல்லூரியில் இன்டர்மீடியட்டும், பி.ஏ.வும் பயின்றவர்.

ஆசிரியப்பணிகள்

இவர்1943 - 1944 வரை கும்பகோணம் நகர உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகவும், 1944 - 1945 வரை சென்னை எழும்பூர் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகவும், 1945 - 1954 வரை 9 ஆண்டுகள் தஞ்சை மாவட்டம் அய்யம் பேட்டையிலும், குத்தாலம் பள்ளியிலும் ஆசிரியராகவும் பணியாற்றியவர்.

வானொலி

இவர் 1945 - 1960 வரை சென்னை வானொலி நிலையத்தில் 14 ஆண்டுகள் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பணியாற்றியவர். 1968 - 1974 வரை தில்லி வானொலி நிலையத்தில் உதவித் தலைமை கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பணிபுரிந்தவர். பின்பதவி உயர்வு பெற்று 1974 - 1981 வரை தலைமைக் கல்வி அமைப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றயவர்.

இவர் வானொலி நிலையங்களில் பணியாற்றியபோது அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், மலேஷியா முதலிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.

படைப்புகள்

தனது ஜப்பான் பயண அனுபவங்களை உதயசூரியன் என்னும் தலைப்பில் சுதேசமித்திரன் வார இதழில் எழுதினார். இது 1967ல் நூலாக வெளியிடப்பெற்றது. ரோமானிய செக்கோஸ்லோவோக்கியா சென்ற அனுபவங்களை கருங்கடலும் கலைக்கடலும் என்னும் தலைப்பில் 1974ல் வெளியிட்டார்.

மொழியாக்கம்

நாவல்கள்

  • மோகமுள் (1964)
  • அமிர்தம் (1945),
  • அம்மா வந்தாள் (1966)
  • மரப்பசு (1975)
  • நளபாகம் (1983)
  • மலர்மஞ்சம் (1961)
  • உயிர்த்தேன் (1967)
  • அன்பே ஆரமுதே (1963)
  • செம்பருத்தி (1968)
  • அடி (1979)

குறுநாவல்கள்

  • கமலம் (1963)
  • தோடு'' (1963),
  • அவலும் உமியும் (1963),
  • சிவஞானம் (1964),
  • நாலாவது சார் (1964),
  • வீடு

பயண நூல்கள்

  • "உதயசூரியன்" (1967)
  • "கருங்கடலும் கலைக்கடலும் (1974)

சிறுகதைகள்

கட்டுரை

  • உதயசூரியன் (ஜப்பான் பயண நூல்)
  • அடுத்த வீடு ஐம்பது மைல் (பயணக் கட்டுரை)
  • கருங்கடலும் கலைக்கடலும் (பயணக் கட்டுரை)
  • நடந்தாய் வாழி காவேரி (காவேரி கரை வழியாக பயணம்)


நாடகம்

  • "நாலுவேலி நிலம்" (1958)
  • "வடிவேல் வாத்தியார் (1963),
  • "டாக்டர் மருந்து"

மேற்கோள்கள்

  1. மறைவு ஆண்டு 1983 என்று ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்ட தி. ஜானகிராமன் படைப்புகள் முதல் பதிப்பில் தவறுதலாக வெளியாகியதால் சில இடங்களில் அவரது இறப்பு ஆண்டு 1983 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நூலின் 2008ம் பதிப்பில் 1982 என்று திருத்தப்பட்டுள்ளது. மேலும் சாகித்திய அகாதமியின் இந்திய இலக்கிய கலைக்களஞ்சியத்தில் 1982 என்று குறிப்பிடப்பட்டுள்ளது

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._ஜானகிராமன்&oldid=1757347" இலிருந்து மீள்விக்கப்பட்டது