சேக்கிழார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி →இவற்றையும் பார்க்கவும்: *எழுத்துப்பிழை திருத்தம்* |
|||
வரிசை 15: | வரிசை 15: | ||
==அடிக்குறிப்பு== |
==அடிக்குறிப்பு== |
||
⚫ | |||
{{சைவம்}} |
|||
{{சைவதிருமுறைகள்}} |
|||
[[பகுப்பு:பன்னிரு திருமுறை அருளாளர்கள்]] |
[[பகுப்பு:பன்னிரு திருமுறை அருளாளர்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ்ப் புலவர்கள்]] |
[[பகுப்பு:தமிழ்ப் புலவர்கள்]] |
||
⚫ | |||
{{Reflist}} |
08:20, 2 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்
சேக்கிழார் கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் தொண்டை நாட்டைச் சேர்ந்த புலியூர்க் கோட்டத்தில் உள்ள குன்றத்தூர் என்னும் ஊரில் பிறந்தவர். பல நூல்களையும் கற்றுச் சிறந்த புலமை மிக்கவராக விளங்கிய சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்க சோழனின் முதன் மந்திரியாக இருந்தார். இவரது திறமைக்காக இவருக்கு உத்தம சோழப் பல்லவராயன் என்ற பட்டமும் கிடைத்தது.
பெரியபுராணம்
பெரியபுராணம் என்று அழைக்கப்படும் சைவத் தமிழ் நூலான திருத்தொண்டர் புராணத்தை இயற்றியவர் இவரே. சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு 63 சைவ அடியார்களைப் பற்றி விரிவான நூலாகப் பெரியபுராணத்தை எழுதினார். இந் நூலை இயற்றும் நோக்குடன் சிதம்பரம் கோயிலுக்குச் சென்ற இவருக்கு சிவபெருமானே உலகெலாம் என அடியெடுத்துக் கொடுத்துப் பாடச் செய்தார் என்பது சைவர்களின் நம்பிக்கை.
திருத்தொண்டர் புராணச் சாரம், திருப்பதிக்கோவை, திருப்பதிகக்கோவை என்னும் மூன்று நூல்களும் சேக்கிழாரால் பாடப்பட்ட நூல்கள். [1]
இவற்றையும் பார்க்கவும்
அடிக்குறிப்பு
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 74.
{{cite book}}
: Check date values in:|year=
(help)