முகமது அலி ஜின்னா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| காயித்-ஏ-ஆசம் முகமது அலி ஜின்னா | |
|
1வது பாகிஸ்தான் ஆளுனர்
|
|
|---|---|
| பதவியில் ஆகஸ்ட் 15, 1947 – செப்டம்பர் 11, 1948 |
|
| பிரதமர் | லியாகத் அலி கான் |
| அரசர் | ஆறாம் ஜார்ஜ் |
| முன்னவர் | யாவரும் இல்லை மவுண்ட்பேட்டன் பிரபு (இந்தியாவின் வைஸ்ராய் |
| பின்வந்தவர் | கவாஜா நாசிமுத்தீன் |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் முஸ்லிம் லீக் |
|
|
|
| பிறப்பு | டிசம்பர் 27, 1876 வசீர் இல்லம், கராச்சி, அப்பொழுது பிரித்தானிய இந்தியா, இப்பொழுது பாகிஸ்தான் |
| இறப்பு | செப்டம்பர் 11, 1948 (அகவை 71) சியாரத், பாகிஸ்தான் |
| துறை | வழக்கறிஞர், அரசியல்வாதி |
| சமயம் | இஸ்லாம் |
முகமது அலி ஜின்னா (உருது: محمد على جناح) ஒரு இசுலாமிய அரசியல்வாதி ஆவார். அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியில் ஒரு தலைவராக இருந்த ஜின்னா இந்தியா பிரிக்கப்பட்டு, பாகிஸ்தான் என்ற தனிநாடு பிறந்த பின், இந்த நாட்டின் தந்தையார் (பாபா-ஏ-கௌம்) என்றழைக்கப்படுகிறார். இவரின் பிறந்த நாள் பாகிஸ்தானில் ஒரு தேசியத் திருவிழா ஆகும். பாகிஸ்தானின் முதலாம் ஆளுனர் (Governor-General) ஆவார்.