நீல பத்மநாபன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நீல.பத்மநாபன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நீல பத்மநாபன் (பிறப்பு: சூன் 24, 1938, கன்னியாக்குமரி மாவட்டம்), தமிழகத்தின் ஒரு முன்னணி எழுத்தாளர். புதினம், சிறுகதை, கட்டுரை, கவிதை என பல வகைகளிலும் எழுதுபவர். இலை உதிர் காலம் புதினத்துக்காக 2007ஆம் ஆண்டின் தமிழ் நூல்களுக்கான சாகித்திய அகாதமி விருது விருது பெற்றுள்ள நீல பத்மநாபன், பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார்.[1][2][3][4][5][6]. இவரின் படைப்புகள் கடந்த 25 ஆண்டுகளாக நவீனத்துவ வடிவ இலக்கணத்தால் மதிப்பிடப்பட்டு எதிர்மறைகள் சுட்டப்பட்டுள்ளன.
- "கதைக் கருவைத்தேடி நான் ஒரு போதும் அலைந்திருக்கவில்லை. ஒரு பிரத்யேக கணத்தின் தெறிப்பில், ஏனோ ஒரு சொல்லத்தெரியாத தன்மையில் சிலிர்த்துப்போய் நேரிலும் காணும், சொல்லிக்கேட்கும் சில கருத்துக்களை மட்டும் என் மனம் சுவீகரித்துக் கொள்கிறது. உதறினாலும் விலகாமல் உள்ளத்தில் இறுகப்பற்றிக்கொள்ளும் இந்தக்கரு தன்னை எடுத்தாள என்னை விடாப்பிடியாக நிர்பந்திக்கிறது. இரும்பு இதயம் படைத்தவர்களுக்காக நான் எழுதவில்லை. காரணம் எனக்கு இரும்பு இதயம் இல்லை என்பதுதான், என்னைப்போல் சாதாரண ஆசை நிராசைகள் கொண்ட சாதாரண மனித ஜீவிகளுடன் என் பிரச்னைகள், உணர்ச்சிகளை, வியப்புகளை ,வெறுப்புகளை பரிமாறிக்கொள்ளவே நான் எழுதுகிறேன்"
என்று நீல பத்மநாபன் தன்னைப் பற்றி குறிப்பிட்டதுண்டு.
பொருளடக்கம் |
படைப்புகள் [தொகு]
புதினங்கள்
- தலைமுறைகள் - 1968
- பள்ளிகொண்டபுரம் - 1970
- பைல்கள் - 1973
- உறவுகள் - 1975
- மின் உலகம் - 1976
- நேற்று வந்தவன் - 1978
- உதய தாரகை - 1980
- பகவதி கோயில் தெரு - 1981
- போதையில் கரைந்தவர்கள் - 1985
சிறுகதைகள்
- மோகம் முப்பது ஆண்டு - 1969
- சண்டையும் சமாதானமும் - 1972
- மூன்றாவது நாள் - 1974
- இரண்டாவது முகம் - 1978
- நாகம்மா - 1978
- சத்தியத்தின் சந்நிதியில் - 1985
- வான வீதியில் - 1988
கவிதைகள்
- நீல பத்மநாபன் கவிதைகள் - 1975
- நா காக்க - 1984
கட்டுரைகள்
- சிதறிய சிந்தனைகள் - 1978
இலக்கிய பார்வைகள்
- திரட்டு நூல் - குரு சேத்திரம் - 1976
- தற்கால மலையாள இலக்கியம் தமிழ் - 1985
மலையாளம்
- பந்தங்கள் - 1979
- மின் உலகம் - 1980
- தலைமுறைகள் - 1981
- பள்ளிகொண்டபுரம் - 1982
- கதைகள் இருபது - 1980
- எறும்புகள் - 1987
விருதுகளும் பரிசுகளும் [தொகு]
- முதியோர் இல்லத்தைக் கதைக் களனாகக் கொண்டு நீல பத்மநாபன் எழுதிய இலை உதிர் காலம் புதினம், 2007ஆம் ஆண்டின் தமிழல் நூல்களுக்கான சாகித்திய அகாதமி விருது, கோவை கஸ்தூரி சீனிவாசன் அறநிலையத்தின் ரங்கம்மாள் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
குறிப்புகள் [தொகு]
- ↑ Tamil Sahitya Akademi Awards 1955-2007 Sahitya Akademi Official website.
- ↑ "NEELA PADMANABHAN, A WRITER NON-PAREIL". Neela Padmanabhan. பார்த்த நாள் 18 June 2010.
- ↑ Indira Parthasarathy (8 December 2009). "Creative writing as a social act". The Hindu. http://www.hindu.com/br/2009/12/08/stories/2009120853331300.htm. Retrieved 18 June 2010.
- ↑ "Gauthaman to debut in Magizchi". IndiaGlitz. பார்த்த நாள் 18 June 2010.
- ↑ "Soul of Thiruvananthapuram". The Hindu. 2 March 2008. http://www.hindu.com/lr/2008/03/02/stories/2008030250240600.htm. Retrieved 18 June 2010.
- ↑ "Creative modern writer". The Hindu. 26 March 2002. http://www.hindu.com/thehindu/br/2002/03/26/stories/2002032600060300.htm. Retrieved 18 June 2010.