கிருட்டிணராச சாகர் அணை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிருஷ்ணராஜ சாகர் அணை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| கிருட்டிணராச சாகர் அணை | |
| உருவாக்கும் ஆறு | காவிரி ஆறு |
|---|---|
| உருவாக்குவது | கிருட்டிணராச சாகர் அணை |
| அமைவிடம் | மாண்டியா மாவட்டம், கர்நாடகம், இந்தியா |
| நீளம் | 3.5 கிமீ |
| உயரம் | 125 அடி |
| திறப்பு நாள் | 1932 |
| புவியியல் தரவு | |
| அமைவிடம் | |
| கொள்ளளவு: 49 பில்லியன் அடி³ (1.4 கிமீ³) | |
கிருட்டிணராச சாகர் அணை கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆறு மீது கட்டப்பட்ட பெரிய அணையாகும். மாண்டியா மாவட்டத்தில் கண்ணம்பாடி என்ற இடத்தில் கட்டப்பட்டதால் கண்ணம்பாடி அணை என்று அழைக்கப்பட்டது. மைசூர் மகாராசா நான்காம் கிருட்டிணராச உடையார் நினைவாக இது பின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதை வடிவமைத்து கட்டியவர் புகழ்பெற்ற இந்திய பொறியாளர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா.
ஏமாவதி மற்றும் லட்சுமண தீர்த்தம் ஆகிய 2 ஆறுகளும் கிருட்டிணராச சாகர் நீர்த்தேக்கத்தில் காவிரியுடன் இணைகின்றன
இவ்வணை மைசூரிலிருந்து கிட்டதட்ட 20 கிமீ தொலைவில் உள்ளது.
இங்கு புகழ் பெற்ற பிருந்தாவன் பூங்கா உள்ளது.