பானாசுர சாகர் அணை
பானாசுர சாகர் அணை கேரள மாநில மின்சார வாரியத்தினால் கரமனதோடு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இது பனமரம் ஆற்றின் துணை ஆறாகும். பனமரம் கபினி ஆற்றின் துணை ஆறாகும். பானாசுர சாகர் திட்டம் 1979-ம் ஆண்டு தொடங்கப்பட்டது, இதன் நோக்கம் கக்கயம் நீர் மின் திட்டத்துக்கு தேவையான நீரை அளிப்பதும் அப்பகுதியின் குடி நீர் தேவையை பூர்த்தி செய்வதுமாகும்.
பானாசுர சாகர் அணை கல்பட்டாவிலிருந்து 21 கிமீ தொலைவில் உள்ளது. இது கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ளது. இது ஒரு சுற்றுலா தளமாகும். பானாசுர சாகர் அணை இந்தியாவிலேயே பெரிய மண் அணையாகும் (earthen dam).இவ்வணை நிரம்பும் போது பல தீவுகளை உருவாக்குகிறது. அத்தீவுகளும் பின்னனியில் உள்ள பானாசுர மலையும் அருமையான காட்சியை உண்டாக்குகின்றன.
மேற்கோள்கள் [தொகு]
| காவிரி ஆறு |
|
| அணைகள் |
பானாசுர சாகர் அணை | Bangara Doddi Nala | கல்லணை | கிருஷ்ணராஜ சாகர் அணை | Madadkatte | மேட்டூர் அணை | மேலணை | கீழணை | |
| துணையாறுகள் |
அமராவதி ஆறு | ஆர்க்காவதி ஆறு | பவானி ஆறு | ஹேமாவதி ஆறு | சொர்ணவதி ஆறு | கபினி ஆறு | |
| கிளையாறுகள் |
கொள்ளிடம் ஆறு| வெண்ணாறு| வெட்டாறு| குடமுருட்டி |
| நகரங்களும் ஊர்களும் |
காரைக்கால் | குடகு | குசால்நகர் | நாகப்பட்டினம் | பூம்புகார் | ஸ்ரீரங்கம் | ஸ்ரீரங்கப்பட்டணம் | தலக்காடு | தலைக்காவிரி | தஞ்சாவூர் | திருச்சிராப்பள்ளி |
| புவியியல் அமைப்புகள் |
வங்காள விரிகுடா | தக்காணப் பீடபூமி | ஒகேனக்கல் அருவி | சிவசமுத்திரம் அருவி | மேற்குத் தொடர்ச்சி மலை |
| பாசன மாநிலங்கள் மற்றும் ஆட்சிப்பகுதிகள் |
கர்நாடகம் | கேரளம் | புதுச்சேரி | தமிழ்நாடு |