பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்)
பாபநாசம் (ஆங்கிலம்:Papanasam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தின் பேரூராட்சிகளுள் ஒன்று. காவிரி, திருமலைராஜன், அரசலாறு மற்றும் குடமுருட்டி ஆகிய நான்கு ஆறுகளும் இவ்வூரின் வழியே பாய்கின்றன. பாபநாசம் என்னும் சொல்லின் பொருள் பாவங்களை ஒழித்தல் என்பதாகும்.
| பாபநாசம் | |
| — தேர்வு நிலை பேரூராட்சி — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | கே. பாஸ்கரன் [3] |
| பெருந்தலைவர் | கருணாநிதி |
| மக்கள் தொகை | 16,397 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
• 106 மீட்டர்கள்s (348 அடி) |
|
குறியீடுகள்
|
|
பொருளடக்கம் |
அமைவிடம் [தொகு]
பாபநாசம், இந்தியாவில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சி ஆகும். இந்த ஊரின் அமைவிடம் 10.9333°N 79.2833°E ஆகும். கடல் மட்டத்திலிருந்து 22 மீட்டர் (72 அடி) உயரத்தில் உள்ளது.
மக்கள் வகைப்பாடு [தொகு]
2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,397 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பாபநாசம் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பாபநாசம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
பெயர்க் காரணம் [தொகு]
இராவணனை அழித்த இராமர், இலட்சுமணன், அனுமன், சீதை ஆகியோருடன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தங்களை ஏதோ தோசம் பின்தொடர்வது போல் உணர்ந்தார்.
கரன், தூசன் ஆகியோரை கொன்ற பிரம்மகத்தி தோஷமே என்றறிந்தார். அப்போது ஒரு வில்வ மரத்தடியைக் கண்டார். அங்கே குடமுருட்டி ஆறு ஓடிக்கொண்டிருந்தது. தோஷம் விலக சிவபூசை செய்வதே உத்தமம் என்று எண்ணினார். அனுமன் உடனே காசியில் இருந்து லிங்கம் கொண்டுவர பறந்து சென்றார். அதற்குள் சீதாபிராட்டி தன் கரங்களினாலேயே மணலில் அநேக லிங்கங்களைபிடித்து வைத்தார்.
அனுமன் காசியிலிருந்து கொண்டு வந்த லிங்கத்தை வெளிப்பிரகாரத்தில் வைத்துவிட்டு உள்ளே வந்ததும் லவரைக்கண்டு தான் கொண்டுவந்த லிங்கத்தை தான் மூலவராக நிறுவ வேண்டும் என்ற ஆணவத்துடன் லவரை தன் வாலினால் கட்டி இழுக்க, வால் அறுந்து வடக்கே சென்று விழுந்தார். (இவ்விடம் வாலறுந்த நல்லூர் அல்லது அனுமான் நல்லூர் என்று அழைக்கப்படுகிறது). அனுமான் மீது பரிவு கொண்ட இராமர், இந்த 107 சிவலிங்கங்களை வழிபட்டாலும், 108வது லிங்கமான அனுமத்லிங்கத்தையும் வழிபட்டு, அம்பாளையும் வழிபட்டாலே முழு பலனும் பெற்று தோஷம் நீங்கும் என்று கூறுகிறார்.
அந்நாள் முதல் “மனிதப் பிறவியில் இராமபிரானின் பாவம் அகல காரணமான இத்தலம் பாபவிநாசம் என்று அழைக்கப்படும்” என்று அருள்வாக்கு அருளினார். பாபவிநாசம் என்ற பெயர் நாளடைவில் பாபநாசம் என்று மருவி விட்டது.
சிறப்புகள் [தொகு]
- பாபநாசம் திருப்பாலத்துறையில் பாலைவனநாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. தேவாரப் பாடல் பெற்றத்தலமான இது திருமணம் போனற நிகழ்ச்சிகள் நடத்தவே இப்பொழுது பயன்பட்டு வருகிறது. இத்தலத்து அன்னை தவளவெண்நிகையாள்.
- பாபநாசத்திலேயே வைணவ திவ்விய தேசத்தலங்களுள் ஒன்றான சீனிவாசப் பெருமாள் கோவிலும் இருக்கிறது.
- 3000 களம் கொள்ளளவு கொண்ட நெற்களஞ்சியம் ஒன்று உள்ளது. மாநில தொல்பொருள் துறை இதனை நினைவுச்சின்னமாக அறிவித்துள்ளனர்.
- பாபநாசத்தை காவிரி, அரசலாறு, திருமலைராஜன் மற்றும் குடமுருட்டி ஆறுகள் பாய்ந்து வளம் சேர்க்கின்றன.
புனிதத் தலங்கள் [தொகு]
ஆலயங்கள் [தொகு]
- இராமலிங்க சுவாமி திருக்கோவில், பாபநாசம்
- 108 சிவாலயம்,பாபநாசம்
- பாலைவனநாதர் ஆலயம், திருப்பாலைத்துறை
- சீனிவாச பெருமாள் கோவில், பாபநாசம்
கிறிஸ்தவ தேவாலயங்கள் [தொகு]
இந்த நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நூற்றாண்டு விழா கொண்டாடிய பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தலம் பல சிறப்புகளை கொண்டதாகும். சாதி, மத வேறுபாடின்றி இவ்வூர் மக்களின் புனிதராகவும் பாதுகாவலராகவும் விளங்குகின்றார். ஓவ்வொரு ஆண்டும் புனித செபஸ்தியார் ஆண்டு பெருவிழாவானது ஈஸ்டர் சண்டே (உயிர்ப்பு ஞாயிறு) பண்டிகைக்கு அடுத்து வரும் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
- புனித அந்தோனியார் ஆலயம்
மசூதி [தொகு]
- பெரிய பள்ளிவாசல், சின்னக்கடைத் தெரு, பாபநாசம்
போக்குவரத்து [தொகு]
கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் பாபநாசம் அமைந்து இருப்பதால் இங்கு பேருந்து வசதிகள் எந்நேரமும் இருக்கும். கும்பகோணதிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் தஞ்சாவூரில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
மேலும் திருவையாறில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது. இங்குள்ள தொடருந்து நிலையத்தில் சில தொடருந்துகள் தவிர அனைத்து தொடருந்துகளும் நின்று செல்லும். பாபநாசம் அருகில் உள்ள வானூர்தி நிலையம் திருச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம்
அருகில் உள்ள கோவில்கள் [தொகு]
- கபிஸ்தலம் – கஜேந்திர வரதன் ஆலயம் - பாபநாசத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் 4 கி.மீ. தொலைவில் உள்ளது.
- நல்லூர் – கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயம் - பாபநாசத்தில் இருந்து வாழைப்பழக்கடை வழியாக வலங்கைமான் செல்லும் வழியில் 4 கி.மீ. தொலைவில் உள்ளது.
- திருவலஞ்சுழி – கற்பக நாதேஸ்வரர் ஆலயம் - பாபநாசத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 7 கி.மீ. தொலைவில் உள்ளது.
- திருக்கருகாவூர் – கர்ப்பரட்சாம்பிகை ஆலயம்[5] - பாபநாசத்தில் இருந்து சாலியமங்கலம் செல்லும் வழியில் 4 கி.மீ. தொலைவில் உள்ளது.
- சுவாமிமலை – சுவாமிநாத சுவாமி (ஆறுபடை வீடுகளில் ஒன்று)ஆலயம் - பாபநாசத்தில் இருந்து கபிஸ்தலம் வழியாக கும்பகோணம் செல்லும் வழியில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது.
- ஆவூர் – பசுபதீஸ்வரர் ஆலயம் - பாபநாசத்தில் இருந்து பட்டீஸ்வரம் வழியாக கும்பகோணம் செல்லும் வழியில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது.
- திருவைகாவூர் – வில்வனேஸ்வரர் ஆலயம் - பாபநாசத்தில் இருந்து கபிஸ்தலம் வழியாக 8 கி.மீ. தொலைவில் உள்ளது. அரை மணி நேரத்திற்கு ஒரு முறை பாபநாசத்தில் இருந்து சீருந்து வசதி உண்டு.
- பட்டீஸ்வரம் – தேனுபுரீஸ்வரர் ஆலயம் - பாபநாசத்தில் இருந்து ஆவூர் வழியாக கும்பகோணம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
- சௌந்தர ராஜ பெருமாள் கோவில் – சுந்தரபெருமாள் கோவில் - பாபநாசத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.
- வலங்கைமான் - மாரியம்மன் கோவில் பாபநாசத்தில் இருந்து நல்லூர் வழியாக வலங்கைமான் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
- தாராசுரம் – ஐராவதேஸ்வரர் ஆலயம் - பாபநாசத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 12 கி.மீ. தொலைவில் உள்ளது.
- கருப்பூர் – அகிலாண்டேஸ்வரி ஆலயம் - பாபநாசத்தில் இருந்து கபிஸ்தலம் வழியாக திருவையாறு செல்லும் வழியில் 2 கி.மீ. தொலைவில் சருக்கை கிராமம் அருகில் உள்ளது.
- தஞ்சாவூர் - பெருவுடையார் - பெரிய கோவில் - 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
படத் தொகுப்பு [தொகு]
ஆதாரங்கள் [தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
- ↑ http://www.garbarakshambigai.org/
|
||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||