அசோகமித்திரன்
அசோகமித்திரன், தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் 1931 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள செகந்திராபாத் நகரத்தில் பிறந்தவர். தந்தையின் மறைவிற்கு பிறகு தனது 21ஆம் வயதில் சென்னைக்கு குடியேறினார். எளிமையும், மெல்லிய நகைச்சுவையும் கொண்டது இவருடைய எழுத்து. தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை இவரது கதைகள். அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. இவரது நாவல்கள் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கில நாளிதழ்களில் தொடர்ந்து எழுதி வரும் அசோகமித்திரன், அயோவா பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொண்டவர்.
1996 இல் அப்பாவின் சிநேகிதர் சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர். இவரது படைப்புகள் பெரும்பாலும் சென்னை அல்லது ஹைதராபாத்தை கதைக்களமாக கோண்டு அமைந்திருக்கும். சாதாரணமான கதாபாத்திரங்களின் மூலம் அசாதாரண கருத்துக்களை வெளிப்படுத்துவதாக இவரது படைப்புகள் அமைந்திருக்கும் என்று ஒரு கருத்தும் உள்ளது.
பொருளடக்கம் |
ஆக்கங்கள் [தொகு]
சிறுகதைகள் [தொகு]
- வாழ்விலே ஒருமுறை
- விமோசனம் விடுதலை
- காலமும் ஐந்து குழந்தைகளும்
- முறைப்பெண்
- அப்பாவின் சினேகிதர்
- பிப்லப் சௌதுரியின் கடன் மனு
நாவல்கள் [தொகு]
- பதினெட்டாவது அட்சக்கோடு
- தண்ணீர்
- இன்று
- ஆகாசத்தாமரை
- ஒற்றன்
- மானசரோவர்
- கரைந்த நிழல்கள்
குறுநாவல்கள் [தொகு]
- இருவர்
- விடுதலை
- தீபம்
- விழா மாலைப் போதில்
பிற [தொகு]
அசோகமித்திரன் கதைகள் தொகுப்பு 1&2
கட்டுரைகள் [தொகு]
அசோகமித்திரன் கட்டுரைகள் தொகுப்பு 1&2