மேல் டிபாங் பள்ளத்தாக்கு மாவட்டம்
மேல் டிபாங் பள்ளத்தாக்கு மாவட்டம் | |
---|---|
![]() மேல் டிபாங் பள்ளத்தாக்குமாவட்டத்தின் இடஅமைவு அருணாச்சலப் பிரதேசம் | |
மாநிலம் | அருணாச்சலப் பிரதேசம், இந்தியா |
தலைமையகம் | அனினி |
பரப்பு | 9,129 km2 (3,525 sq mi) |
மக்கட்தொகை | 7,948 (2011) |
நகர்ப்புற மக்கட்தொகை | 27.55% |
படிப்பறிவு | 64.8% |
பாலின விகிதம் | 808 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மேல் டிபாங் பள்ளத்தாக்கு மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டம் மிகவும் பெரிய இடமாக இருந்தாலும், இதுவே இந்தியாவின் மிகவும் குறைந்த மக்கள் தொகை கொண்ட முதல் மாவட்டமாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் அனினி பேரூராட்சி ஆகும்.
அமைப்பு
[தொகு]மேல் டிபாங் பள்ளத்தாக்கு மாவட்டம் அருகில் உள்ள லோகித் மாவட்டத்திலிருந்து பிரித்து, 1980 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் படி புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டமாகும். இம்மாவட்டம் டிபாங் ஆற்றின் கரையில் உள்ளது. இதுவே இந்தியாவின் கிழக்கு திசையின் இறுதிப்பகுதி ஆகும். இந்த மாவட்டத்தின் தலைமை இடமாக அனினி நகரம் உள்ளது. இந்த மாவட்டம் ஒரு சட்டசபை உறுப்பினர் தொகுதியை கொண்டுள்ளது.
மக்கள்
[தொகு]இந்த மாவட்ட மக்களில் அதிகமானோர் பழங்குடி இன மக்களான அடி மற்றும் இடி இனத்தை சேர்ந்தவர்கள்.
மொழி
[தொகு]சீன-திபெத்திய மொழிக் குடும்பத்தில் வரும் அடி மொழி இங்கு அதிகமாக பேசப்படுகிறது.
சுற்றுலாத் தளங்கள்
[தொகு]இந்த மாவட்டத்தில் திபாங் வனவிலங்கு சரணாலயம் உள்ளது.