மரக்காலாட்டம்
மரக்காலாட்டம் என்பது உறுதியானதும், பாதங்களில் பொருந்துவதுமான அமைப்பிலுள்ள, மரத்தாலான காலைப் பாதங்களில் கட்டிக்கொண்டு, ஆடும் ஆட்டமாகும்.[1] தமிழகத்தில் இது கரகாட்டத்தின், துணை ஆட்டமாகவும், இடை நிகழ்ச்சி ஆட்டமாகவும், பொழுதுபோக்காக மட்டுமே நிகழ்த்தப்படுகிறது. இதற்கு நையாண்டி மேளமே, பின்னணி இசைக்கருவியாக உள்ளது. இவ்வாட்டம் புவியீர்ப்புத்தனத்தை உணர்ந்து, நின்று ஆடப்படும் ஆட்டமாகும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்". 2012-01-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-06-16 அன்று பார்க்கப்பட்டது.