சென்னைப் பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சென்னைப் பல்கலைக்கழகம் | |
மெரினா கடற்கரையில் இருந்து பல்கலைகழகத்தின் பார்வை |
|
| குறிக்கோளுரை | கற்றணைத்தூறும் அறிவும் ஆற்றலும் |
|---|---|
| ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Learning Promotes Natural Talent |
| நிறுவிய நாள் | 1857 |
| வகை | பொது |
| நிதிக் கொடை | $50 மில்லியன் |
| வேந்தர் | கே. ரோசய்யா |
| துணைவேந்தர் | கர்னல். முனைவர். க. திருவாசகம் |
| துறை | 300 |
| பட்ட மாணவர்கள் | 3000 |
| உயர் பட்ட மாணவர்கள் | 5000 |
| அமைவிடம் | சென்னை, தமிழ் நாடு, இந்தியா |
| நற்பேறு சின்னம் | சிங்கம் |
| சேர்ப்பு | பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு |
| இணையத்தளம் | www.unom.ac.in |
சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1851 ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இது, 5 செப்டம்பர் 1857ல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது. எனினும் இப்பல்கலைக்கழககம், நடுவண் அரசின் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு (UGC) அமைக்கும் வழிமுறைகளுக்கு உட்பட்டது. மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை முதலிய அனைத்துத் துறைகளும் இருந்தன. நீண்ட காலம் தமிழகத்தின் ஒரே பல்கலைக் கழகமாக விளங்கியது. இப்பொழுது சட்டம், பொறியியல், மருத்துவம் ஆகிய பிரிவுகள் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டு விட்டன.