வீ. இராதாகிருட்டிணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்


பதவியில்
13 மே 1962 – 13 மே 1967
பிரதமர் குல்சாரிலால் நந்தா (முதல் முறை)
லால் பகதூர் சாஸ்திரி
குல்சாரிலால் நந்தா (2வது முறை)
உதவி தலைவர் ஜாகிர் ஹுசைன்
முன்னவர் ராஜேந்திர பிரசாத்
பின்வந்தவர் ஜாகிர் ஹுசைன்

பதவியில்
13 மே 1952 – 12 மே 1962
குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்
முன்னவர் Office created
பின்வந்தவர் ஜாகிர் ஹுசைன்
அரசியல் கட்சி சுயேட்சை

பிறப்பு செப்டம்பர் 5, 1888(1888-09-05)
திருத்தணி, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு ஏப்ரல் 17 1975 (அகவை 86)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
வாழ்க்கைத்
துணை
சிவகாமு
பிள்ளைகள் ஐந்து பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு பையன்
தொழில் அரசியல்வாதி, தத்துவவாதி, பேராசிரியர்
சமயம் இந்து மதம்

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்(Dr Sir Sarvepalli Radhakrishnan) எனப்படும் வீ. இராதாகிருட்டிணன் (1888 - 1975) சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார்.

பொருளடக்கம்

இளமைக் காலம்[தொகு]

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்,1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் திருத்தணியில் ஏழை தெலுங்கு நியோகி (ஆந்திராவில் உள்ள பிராமணப்பிரிவு) குடும்பத்தில் பிறந்தார். தெலுங்கு மொழியைத் தாய்மொழியாக கொண்டவர்.[1] இவருடைய தந்தை பெயர் சர்வபள்ளி வீராசாமி,[1] தாயார் பெயர் சீதம்மா.[1] இவர், தன் இளமைக்காலத்தை திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார்.[2]

இல் வாழ்க்கை[தொகு]

ராதாகிருஷ்ணன் தன்னுடைய தூரத்து உறவினரான[3] சிவகாமு,[4] என்பவரை தம்முடைய 16-ம் அகவையில் மணம் புரிந்தார். இது பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டத் திருமணமாகும். இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகளும், சர்வபள்ளி கோபால் என்ற மகனும் உள்ளனர். சர்வபள்ளி கோபால், இந்திய வரலாற்று தொடர்பான துறையில் முக்கியமானவர்களில் ஒருவர். சிவகாமு 1956-ம் ஆண்டு இறந்தபோது ராதாகிருஷ்ணனுடைய 56 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவு பெற்றது.

ஆசிரிய பணி[தொகு]

இவர் ஆசிரியராகப் பணியாற்றியதால் இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5, இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. 1954ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "TeluguOne". TeluguOne. பார்த்த நாள் 2011-08-31.
  2. Sarvepalli Gopal: Radhakrishnan; a Biography (1989) p. 11
  3. Sarvepalli Gopal: Radhakrishnan; a Biography (1989) p. 12
  4. Radhakrishnan's wife's name is spelled differently in different sources. It is spelled Sivakamu by Sarvepalli Gopal (1989); Sivakamuamma by Mamta Anand (2006); and still differently by others.
"http://ta.wikipedia.org/w/index.php?title=வீ._இராதாகிருட்டிணன்&oldid=1386519" இருந்து மீள்விக்கப்பட்டது