மொரார்ஜி தேசாய்
| மொரார்ஜி தேசாய் | |
|
6வது இந்தியப் பிரதமர்
|
|
|---|---|
| பதவியில் மார்ச் 24, 1977 – ஜூலை 15, 1979 |
|
| முன்னவர் | இந்திரா காந்தி |
| பின்வந்தவர் | சரண் சிங் |
| அரசியல் கட்சி | ஜனதா கட்சி |
|
|
|
| பிறப்பு | பிப்ரவரி 29, 1896 பாதிலி, மும்பை |
| இறப்பு | ஏப்ரல் 10, 1995 |
மொரார்ஜி ரன்சோதிஜி தேசாய் (இந்தி; मोरारजी रणछोडजी देसाई குஜராத்தி: મોરારજી રણછોડજી દેસાઈ) (பிறப்பு 29 பிப்ரவரி 1896 - இறப்பு 10 ஏப்ரல் 1995) இந்திய விடுதலைப்போராட்ட வீரரும், இந்திய பிரதமரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார். இவரே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சாராத முதல் இந்தியப்பிரதமர் ஆவார். இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர் இவரே.
இளமைக் காலம் [தொகு]
மொரார்ஜி தேசாய் பம்பாய் மாகாணத்தை சேர்ந்த படெலி என்னும் ஊரில் பிறந்தார். இது தற்போது குஜராத்தில் உள்ளது. மும்பையை சேர்ந்த வில்சன் கல்லூரியில் படிப்பை முடிந்தவுடன் குஜராத்தில் குடிமுறை அரசுப்பணியில் (civil service) இணைந்தார். பின்பு அப்பணியை விட்டு விலகி ஆங்கில அரசுக்கு எதிராக நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார். விடுதலைப்போராட்ட காலத்தில் பல ஆண்டுகளை சிறையில் கழித்தார். இவர் சிறந்த கொள்கை பிடிப்புள்ளவராகவும் தலைமை பண்பு உள்ளவராகவும் இருந்ததால் விடுதலைப்போராட்ட வீரர்களிடமும் குஜராத் பகுதி காங்கிரஸ் கட்சியினர் இடையேயும் செல்வாக்கு பெற்ற தலைவராக விளங்கினார். 1934 மற்றும் 1937 ல் நடந்த பாம்பே மாகாண தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டு வருவாய் துறை அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.