நிதிப் புலனாய்வு அலகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிதிப் புலனாய்வு அலகு - இந்தியா
वित्तीय आसूचना एकक — भारत
துறை மேலோட்டம்
அமைப்புநவம்பர் 18, 2004; 19 ஆண்டுகள் முன்னர் (2004-11-18)
வகைநிதிப் புலனாய்வு அமைப்பு
ஆட்சி எல்லைஇந்திய அரசு
நிலைசெயற்பாட்டில்
தலைமையகம்கன்னாட்டு பிளேசு, புது தில்லி
பணியாட்கள்75
அமைச்சர்
அமைப்பு தலைமை
மூல நிறுவனம்வருவாய்த் துறை
வலைத்தளம்fiuindia.gov.in

நிதிப் புலனாய்வு அலகு (Financial Intelligence Unit – India (FIU-IND) இந்திய அரசின் நிதி அமைச்சகத்தில் உள்ள வருவாய்த் துறையின் கீழ் இயங்கும் ஒரு புலனாய்வு அமைப்பாகும்.[1]நவம்பர் 2004ல் நிறுவப்பட்ட இந்த அமைப்பு இந்தியாவில் 2002 பணமோசடி தடுப்புச் சட்டத்தை அமலாக்கம் செய்கிறது. இந்த அமைப்பு தனது புலனாய்வு அறிக்கைகளை நேரடியாக நிதி அமைச்சர் தலைமையில் செயல்படும் மத்தியப் பொருளாதார புலனாய்வுக் குழுவிடம் அளிக்கும்.[2]

பணிகள்[தொகு]

  1. தகவல் சேகரிப்பு: பல்வேறு நிதிப் புலனாய்வு அமைப்புகளிடமிருந்து பின்வரும் அறிக்கைகளைப் பெறுவதற்கான முகமையாக செயல்படுகிறது.
    1. பண பரிவர்த்தனை அறிக்கைகள்
    2. இலாப நோக்கற்ற நிறுவனங்களின் பரிவர்த்தனை அறிக்கைகள்
    3. எல்லை கடந்த தொலைதொடர்பு பணப்பரிமாற்ற அறிக்கைகள்
    4. அசையா சொத்துக்கள் வாங்குதல் அல்லது விற்றல் பற்றிய அறிக்கைகள்
    5. சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனை அறிக்கைகள்
  2. தகவலின் பகுப்பாய்வு: பணமோசடி மற்றும் தொடர்புடைய குற்றங்களின் சந்தேகத்தை பரிந்துரைக்கும் பரிவர்த்தனைகளின் வடிவங்களைக் கண்டறிதல்.
  3. தகவல் பகிர்வு: நடுவண் புலனாய்வுச் செயலகம் மற்றும் அமலாக்க இயக்குனரகம் அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு நிதி நுண்ணறிவு பிரிவுகளுடன் தகவல்களை பரிமாறிக் கொள்ளல்.
  4. மத்திய தகவல் களஞ்சியமாக செயல்படுதல்:பிற புலனாய்வு அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் தேசிய தரவுத் தளத்தை பராமரித்தல்.
  5. ஒருங்கிணைப்பு: பணமோசடி மற்றும் தொடர்புடைய குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு பயனுள்ள தேசிய, பிராந்திய மற்றும் உலகளாவிய வலைப்பின்னல் மூலம் நிதி நுண்ணறிவின் சேகரிப்பு மற்றும் பகிர்வுகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்துதல்.
  6. ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு: பணமோசடி போக்குகள், அச்சுக்கலைகள் மற்றும் வளர்ச்சிகள் பற்றிய மூலோபாய முக்கிய பகுதிகளை கண்காணித்து அடையாளம் காணுதல்.
  7. தப்பியோடிய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்தல்:பண மோசடி செய்து விட்டு வெளிநாடுகளுக்கு தப்பியோடிய பொருளாதாரக் குற்றவளிகள் மீது நடவடிக்கை எடுத்தல்.

அமைப்பு[தொகு]

இந்த அமைப்பில் பல்வேறு துறைகளிலிருந்து 75 அதிகாரிகள் அயல் பணியில் செயல்படுகிறார்கள். அவைகள் பின்வருமாறு:

  1. மத்திய நேரடி வரிகள் வாரியம்
  2. மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம்
  3. இந்திய ரிசர்வ் வங்கி
  4. இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்
  5. இந்திய சட்ட விவகாரத் துறை
  6. இந்தியப் புலனாய்வு அமைப்புகள்:
    1. வருவாய் புலனாய்வு இயக்குநரகம்
    2. தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (இந்தியா)
    3. சரக்கு சேவை வரி புலனாய்வு தலைமை இயக்குனரகம்
    4. தீவிர மோசடி விசாரணை அலுவலகம்
    5. அமலாக்க இயக்குனரகம்
    6. நடுவண் புலனாய்வுச் செயலகம்
    7. இந்திய உளவுத்துறை

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Scheduled Offences under the PMLA, from FIU-IND website
  2. About FIU-IND, from official website இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிதிப்_புலனாய்வு_அலகு&oldid=3754093" இலிருந்து மீள்விக்கப்பட்டது