கணினிக் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணினிக் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் (இந்தியா) (I4C)
भारतीय साइबर अपराध समन्वय केंद्र
நாடுஇந்தியா
பிரதமர்நரேந்திர மோதி
Ministryஉள்துறை அமைச்சகம், இந்திய அரசு
துவங்கியது2018; 6 ஆண்டுகளுக்கு முன்னர் (2018)
புது தில்லி
Budgetரூபாய் 415.86 கோடி
தற்போதைய நிலைசெயலில்
இணையத்தளம்Official website

இந்தியாவில் கணினிக் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் (Indian Cyber Crime Coordination Centre ('I4C); இந்தி: भारतीय साइबर अपराध समन्वय केंद्र), இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கணினி குற்றங்களை கண்காணித்து ஒருங்கிணைக்கும் மையமாகும்.[1][2][3][4] இந்த மையத்திற்கான திட்டத்திற்கு அக்டோபர் 2018ல் அங்கீகாரம் வழங்கப்பட்டு, தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்துடன் இணைக்கப்பட்டது.[1][5]

மேலோட்டப் பார்வை[தொகு]

இந்தியக் கணினிக் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் 7 அலகுகளைக் கொண்டுள்ளது. அவைகள்:[1]

  1. தேசியக் கணினிக் குற்றங்கள் அச்சுறுத்தல் பகுப்பாய்வு அலகு
  2. தேசியக் கணினிக் குற்றங்களை அறிக்கையிடும் அலகு[6]
  3. தேசியக் கணினிக் குற்றப் பயிற்சி மையம்
  4. கணினிக் குற்ற சூழலியல்-அமைப்பு மேலாண்மை அலகு
  5. தேசிய கணினிக் குற்றங்கள் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மையம்
  6. தேசிய கணினிக் குற்றத் தடயவியல் ஆய்வகம்
  7. கூட்டுக் கணினிக் குற்றப் புலனாய்வுக் குழு

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]