கடவுளின் அன்னையே கன்னி மரியே!

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரக்கத்தின் அன்னை, 15ம் நூற்றாண்டு ஓவியம்

கடவுளின் அன்னையே கன்னி மரியே! (கிரேக்கம்: Ὑπὸ τὴν σὴν εὐσπλαγχνίαν; இலத்தீன்: Sub tuum praesidium) எனத் தொடங்கும் பாடலானது தூய கன்னி மரியாவைக் குறித்து கத்தோலிக்க திருச்சபையில் திருப்புகழ்மாலையின் இரவு மன்றாட்டின் முடிவில் பாடப்படும் நான்கு பாடல்களுள் ஒன்றாகும்.[1] இதுவே மிகவும் பழைய, இன்றும் வழக்கில் உள்ள கன்னி மரியாவின் பாடலாகும்.[2] இது பெரும்பாலும் கிருபை தயாபத்து செபத்தின் முடிவில் சொல்லப்படுவது வழக்கமாகும்.

இப்பாடலில் ஒரு வடிவம் 3ம் நூற்றாண்டினைச்சேர்ந்த அலெக்சாந்திரியாவின் காப்டிக் மரபுவழி திருச்சபையின் கிறித்துமசு வழிபாட்டில் இடம்பெருகின்றது. சுமார் கி.பி 250இல் கிரேக்க மொழியில் இப்பாடல் எழுதப்பட்ட சுவடி உள்ளது.[3]

அந்தோனியோ சாலியரி, வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்சார்ட் முதலிய பலர் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளனர்.

பாடல்[தொகு]

கடவுளின் அன்னையே கன்னி மரியே
அடைக்கலம் நீரென அணுகி வந்தோம்;
கடைக்கண் பார்த்து எம்தேவையில் எல்லாம்
எடுத்தெறி யாமல் எம்வேண்டல் ஏற்பீர்
இடுக்கண் இடர்கள் அனைத்திலும் இருந்து
இடைவிடாது எம்மைக் காத்திடு வீரே
பெண்களுக் குள் நீர் பேறுபெற் றீரே!
விண்ணக மாட்சியில் விளங்கும் தாயே. ஆமென்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Cori Spezzati: Volume 2: An Anthology of Sacred Polychoral Music by Anthony F. Carver 2009 ISBN 0-521-10635-4 page 121
  2. Choral Repertoire by Dennis Shrock 2009 ISBN 0-19-532778-0 page 585
  3. Matthewes-Green, Frederica (2007). The Lost Gospel of Mary: The Mother of Jesus in Three Ancient Texts. Brewster MA: Paraclete Press. பக். 85–87. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-55725-536-5.