இந்தோர்
|
இந்த கட்டுரை பல சிக்கல்களை கொண்டுள்ளது. எனவே தயவு செய்து இதை தொகுத்து மேம்படுத்தவும் அல்லது பேச்சு பக்கத்தில் இத்தகைய சிக்கல்களைப் பற்றி விவாதிக்கவும்.
|
| Indore इंदौर The City of The Holkars |
|
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | Madhya Pradesh |
| மாவட்டம் | Indore |
| ஆளுநர் | |
| முதலமைச்சர் | |
| Member of Parliament | Mrs. Sumitra Mahajan (BJP) |
| மக்கள் தொகை |
1[1] (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
2,398 square kilometres (926 ச மைல்) • 553 metres (1 ft) |
|
குறியீடுகள்
|
|
| இணையதளம் | www.indore.nic.in |
இந்தோர் (Hindi: [[hi:इंदौर|इंदौर/]]
pronunciation) இந்தியாவின் மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் பெரிய நகரமும் வணிகத் தலைநகரமுமாகும். இது ஹோல்கர்களின் நகரம் எனவும் அறியப்படுகிறது. இந்தியாவின் பிரபல ராணிகளில் ஒருவரான ராணி அஹில்யா பாய் எனும் ஹோல்கர் ஒருவரால் இந்நகரம் கட்டப்பட்டது. இந்நகரம், முன்னாளில் பெரிய வியாபார மையமான, அதன் துணைச் சிற்றூர்களான பிதாம்புர், மோவ் மற்றும் தேவாஸ் ஆகியவற்றோடு ஒரு வலுவான தொழிற்தளமாக வளர்ந்தது. தாரளமயமாக்கல் சகாப்தம் இந்தோரை பல தனியார்மயமாக்கல் முன்முயற்சிகளின் முன்னணியில் காணப்பட்டது, அவற்றில் நாட்டின் முதல் சுங்க வரிச் சாலை மற்றும் தனியார் தொலைபேசி நெட்வொர்க் ஆகியவை அடங்கும். அத்தகைய துடிப்பான தொழில்துறை நடவடிக்கைகள் மத்தியிலும், நகரமானது தனது புகழ்பெற்ற முற்காலத்தின் தொடர்புகளைத் தக்கவைத்துக் கொள்கிறது. இந்தோர் "மினி மும்பை" என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத்தரம் மும்பையை ஒத்திருக்கும் காரணத்தால் இவ்வாறு கூறப்படுகிறது.[3]
[தொகு] பெயர் வரலாறு
இந்தோரின் பெயர் வேறுபாடு பற்றிய தொடக்கங்களையும், பெயர் வரலாற்றையும் கருத்தாக்கங்கள் விவரிக்கின்றன. முற்காலங்களில், இந்தோர் நகரம் பல்வேறு பெயர்களில் அறியப்பட்டு வந்தது. இந்நகருக்கு முதலில் இருந்த பெயர் இந்த்ரேஷ்வர். அது அங்குள்ள இந்த்ரேஷ்வர் கோயிலின்பால் பெயரிடப்பட்டது. இப்பெயர் பயன்படுத்தப்படுவதற்கு முன் இது அஹில்யாநகரி என்று அறியப்பட்டிருந்தது (ராணி அஹில்யாபாய் ஹோல்கர் நகரம்).
1607 முதல் 1793 ஆம் ஆண்டு வரை - அஹில்யாநகரி , 1800 முதல் 1950 ஆம் ஆண்டு வரை - இந்தூர் , 1958 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை - இந்தோர்
தற்போதைய பெயரான இந்தோர் என்பது, 1741 ஆம் ஆண்டு வேத் மனுஜால் கட்டப்பட்ட இந்திரேஷ்வர் கோயிலால் உருவானது.[4]
[தொகு] வரலாறு
இந்தோரின் நிறுவனர்களின் மூதாதையர்கள் அப்பகுதியின் ஜமீன்தார்கள் ஆவர். அப்பகுதி நர்மதா நதியின் கரைகளிலிருந்து ராஜ்புதானாவின் எல்லைகள் வரை பரந்திருந்தது. முகலாயர்கள் காலத்தில், இக்குடும்பங்களின் நிறுவனர்கள் சௌதாரி எனும் பட்டப்பெயரைப் பெற்றனர், இது அந்நிலத்தின் மீதான அவர்களின் உரிமையை நிலைநிறுத்தியது. 18 ஆம் நூற்றாண்டில், மால்வாவின் கட்டுப்பாடு பேஷ்வாக்கள் வம்சத்தின் வசம் போனது, சௌதாரிகள் "மண்ட்லோய்ஸ்" என அழைக்கப்பட்டு வந்தனர் (மண்டல்ஸ் என்பதிலிருந்து பெற்றது) ஏனெனில் அவர்கள் பயன்படுத்திய மொழியாலாகும். இறுதியாக ஹோல்கர்கள் குடும்பங்களின் மீது ராவ் ராஜா என்ற பட்டப்பெயர் அடைந்தனர்.[5] அக்குடும்பம் அதன் அரசருக்குரிய உடைமைகளான, யானை, நிஷான், டங்கா மற்றும் காடி ஆகியவற்றை ஹோல்கர்களின் காலத்திற்குப் பிறகும் தக்கவைத்துக் கொண்டது, மேலும் ஹோல்கர்கள் ஆட்சிக்கு முன்பே தசராவின் முதல் பூஜையை நடத்தும் உரிமையை (ஷாமி பூஜன்) மீண்டும் பெற்றது.
முகலாயர்கள் ஆட்சியின் கீழ், குடும்பம் பெரும் செல்வாக்கை அனுபவித்தது, மேலும் பேரரசர்களான அவுரங்கசீப், ஆலம்கீர் மற்றும் ஃபரூக்ஷயார் ஆகியோரிடமிருந்து உறுதிப்படுத்துகிற பட்டயங்களை ஒப்புதலைப் பெற்று, "ஜாகிர்" உரிமைகளை உறுதிப்படுத்திக் கொண்டது. ராவ் நந்தலால் சௌதரி ஜமீன்தார்,டெல்லி தர்பாருக்குச் சென்றபோது, பேரரசரின் அவையில் சிறப்பான இடத்தை, இரு இரத்தினங்கள் பொறிக்கப்பட்ட வாட்கள், (தற்போது ராயல் பிரிட்டிஷ் மியூசியத்தில் அக்குடும்பத்தின் பெயரின் கீழ் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது) உறுதிப்படுத்தப்பட்ட பட்டயங்கள் ஆகியவற்றுடன் பெற்றார். அவரின் தனிப்பட்ட நண்பரான ஜெய்ப்பூரின் ராஜா சவாய் ஜெய் சிங் அவர்களுக்கு சிறப்பு "தங்க லாங்கர்" பரிசளித்தார், இது இந்தியாவின் அனைத்து அரசவைகளிலும் சிறப்பிடத்தை உறுதிப்படுத்தியது. குடும்பத்தின் மால்வா மீதான மரியாதை மற்றும் செல்வாக்கு, இந்தப் பிரதேசத்தின் பேஷ்வாக்கள் மற்றும் ஹோல்கர்களின் முடியேற்றதிற்கு ஏதுவாகியது.
இந்தோரின் நிறுவுனரான ராவ் நந்தலால் சௌதாரி, தலைமை ஜமீன்தாராக (நிலக்கிழார்) இருந்தார், அவரிடம் 2000 வீரர்கள் கொண்ட படை இருந்தது. 1713 ஆம் ஆண்டு, நிஜாம் தக்காண பீடபூமியின் கட்டுப்பாட்டாளராக நியமிக்கப்பட்டார். அது மராத்தியர்களுக்கும் முகலாயர்களுக்கும் இடையிலான பூசலைப் புதுப்பித்தது.
சரஸ்வதி நதியின் கரைகளுக்கருகே அமைந்துள்ள இந்த்ரேஷ்வர் கோயிலுக்கு விஜயம் செய்த நந்த்லால்சிங், நதிகளால் எல்லாப்புறமும் சூழப்பட்ட இடம் பாதுகாப்பானதாகவும் செயல்தந்திர ரீதியாகவும் அமைந்திருப்பதைக் கண்டார். அங்கு அவரது மக்களை இடம்பெயரச் செய்யத் தொடங்கி வைத்தார், மேலும் ஸ்ரீ சன்ஸ்தான் படா ராவலா கோட்டையை முகலாயர்களின் தொல்லைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள எழுப்பினார். அந்நகரம் இந்த்ரபூர் (இந்த்ரேஷ்வர் கடவுளின் பெயரைப் பின்பற்றி) என்றும், இறுதியாக இந்தோர் என்றும் அறியப்படலாயிற்று.
பாஜி ராவ் பேஷ்வா கி.பி. 1733 ஆம் ஆண்டு இறுதியாக மாலவாவை கட்டுப்பாட்டில் கொண்டுவந்த போது, மல்ஹர் ராவ் ஹோல்கர் நான்கு உடன்படிக்கையாளர்களில் ஒருவராக ஒப்பந்தக் கட்டளைகளைப் பொருத்தமான முறையில் நிறைவேற்ற உறுதியளித்தார்.[6] வெற்றிக்குப் பிறகு பேஷ்வாக்கள் மல்ஹர் ராவ் ஹோல்கரை "சுபேதாராக" நியமித்தனர், இது மால்வா பிரதேசத்தில் ஹோல்கார்களின் ஆட்சியின் துவக்கத்தை குறித்தது.[7][8][9][10][11][12][13][14][15]
எனவே, இந்தோர் ஹோல்கார் வம்சத்தின் மராத்திய மகாராஜாக்களின் மூலம் ஆளப்படத் துவங்கியது. வம்சத்தின் நிறுவனரான மல்ஹர் ராவ் ஹோல்கரிடம், (1694-1766), 1724 ஆம் ஆண்டு மால்வா மராத்திய படைகளின் கட்டுப்பாடு கொடுக்கப்பட்டது, மேலும் 1733 ஆம் ஆண்டு அப்பகுதியின் மராத்திய ஆளுநராகவும் அமர்த்தப்பட்டார். அவரது ஆட்சி காலத்தின் முடிவில், ஹோல்கர் நாட்டுப் பகுதி உண்மையில் தன்னுரிமை பெற்றிருந்தது. அவருக்குப் பிறகு அவரது மகள் அஹில்யா பாய் ஹோல்கர் 1767 முதல் 1795 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். அவர் நர்மதா நதியின் மீதிருந்த இந்தோரின் தெற்கு பகுதியிலுள்ள மஹேஷ்வரின் கோட்டை-அரண்மனையிலிருந்து ஆட்சி செய்தார். அஹில்யா பாய் ஹோல்கர் கட்டிடக்கலை புரவலராக இருந்து, இந்தியா முழுதும் இந்து கோயில்களைக் கட்டுவிக்க நிதியுதவியளித்தார். 1818 ஆம் ஆண்டு ஹோல்கர்கள், பிரிட்டிஷாரால் மூன்றாம் ஆங்கிலோ-மராத்தா போரில் தோற்கடிக்கப்பட்டப் பின்னர், ஹோல்கர் பேரரசு பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் ஓர் அங்கமாகியது. மாஹித்பூர் போர்க்களத்தில் தோல்வியடைந்ததன் விளைவாக மண்ட்சோர் ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது, இதன் மூலம் இராணுவநகரான மோவ் பிரிட்டிஷாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் ஹோல்கர் நாட்டுப்பகுதியின் தலைநகரை மஹேஷ்வரிலிருந்து இந்தோருக்கு மாற்றவும் ஆணையிட்டது.
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்தோர் சேத் ஹுக்கும்சந்த் ஜெயின்னின் சொந்த ஊராக இருந்தது, அவர் இந்தியாவில் சணல் ஆலை ஒன்றை நிறுவிய முதல் இந்தியர். அவர் இந்தோர் மற்றும் அதன் அருகாமையிலுள்ள பகுதிகளில் பல நிறுவனங்களையும் தொழிற்சாலைகளையும் நிறுவியவதால் இந்தியத் தொழிற்துறையின் முன்னோடியாகக் கருதப்பட்டார்.
இந்தியா 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பிறகு, இந்தோர், அதன் அருகிலிருந்த எண்ணற்ற சமஸ்தானங்களுடன் இணைந்து, இந்திய மாநிலமான மத்திய பாரதத்தின் அங்கமாகியது. இந்தோர் புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலத்தின் கோடைக் காலத் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. நவம்பர் 1, 1956 ஆம் ஆண்டு, மத்திய பாரத் மாநிலம் மத்திய பிரதேசத்துடன் இணைக்கப்பட்டு போபால் தலைநகரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. நகரத்தின் அரண்மனை மால்வா பிரதேசத்தை ஆண்டு வந்த ஆட்சி இருக்கையாக இருந்தது - ஹோல்கர்கள் (1728 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதியிலிருந்து 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 வரை). ராஜ்பாடா 1984 ஆம் ஆண்டு கலவரத்தின் போது எரிக்கப்பட்டது. ஆகையால், தற்போதைய இந்தோர் மஹாராணியான, உயர்திரு. உஷாதேவி ஹோல்கர், வாடாவை அதன் பழைய புகழுக்கேற்ப 2006 ஆம் ஆண்டு வரை மறுபடியும் கட்டத் தீர்மானித்ததால், அது தோட்டமாக மாற்றப்பட்டது. உயர்திரு. உஷாதேவி அவர்கள், ஹோல்கர் கட்டிடக்கலை நிபுணர்களான ஹிமான்ஷூ டுவாட்கர் மற்றும் ஷ்ரேயா பார்கவா ஆகியோரை இந்த சவாலான திட்டத்தை வடிவமைக்க அழைத்தார், 2007 ஆம் ஆண்டு ராஜ்வாடா வரலாற்றில் அதன் இடத்தை திரும்பக் கண்டது. இந்தியாவில், அது 250 வருடங்களுக்கு முந்தைய அதே வடிவம், கட்டுமானப் பொருட்கள் மற்றும் கட்டப்பட்ட முறை ஆகியவற்றைக் கொண்டு மறுபடியும் கட்டப்பட்ட ஒரே வரலாற்று கட்டமைப்பானது.
- மேலும் பார்க்க: Malwa
[தொகு] புவியியல்
இந்தோர் மத்திய பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. மேலும், இது இந்தியாவின் மையத்திற்கு அருகிலுள்ளது. இந்தோர் கடல் மட்டத்திலுருந்து சராசரியாக 1 மீட்டர் உயரத்தைக் கொண்டுள்ளது. உயர்வான சமவெளியில், அதன் தெற்குப் பகுதியில் யாத்ரி தொடருடன் அமைந்துள்ளது. இந்தோரின் அதிகபட்ச அகலமானது ஒருபுறம் தேவாஸ் நோக்கியும், மறுபுறம் மாவ் நோக்கியும் அதிகரித்து உள்ளது, இது மொத்த நீளத்தை 65 கிலோ மீட்டராக ஆக்குகிறது.
[தொகு] காலநிலை
| தட்பவெப்பநிலை வரைபடம் Indore |
|||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ச | பெ | மா | ஏ | மே | ஜூ | ஜூ் | ஆ | செ | அ | ந | டி |
|
4
27
10
|
3
29
11
|
1.0
34
16
|
3.0
39
21
|
11.0
40
24
|
136.0
36
24
|
279.0
30
23
|
360.0
28
22
|
185.0
31
21
|
52.0
32
18
|
21.0
30
14
|
7.0
27
11
|
| வெப்பநிலை (°C) மொத்த மழை/பனி பொழிவு (மிமீ) source: Weather Underground |
|||||||||||
|
Imperial conversion
|
|||||||||||
இந்தோர் தட்பவெப்ப ஈரப்பதத்திற்கும் உப தட்பவெப்ப காலநிலைக்கும் இடையேயான மாறுகின்ற காலநிலையைக் கொண்டுள்ளது. மூன்று வேறுபட்ட பருவங்களாக கோடை, மழைக்காலம் மற்றும் குளிர்காலம் ஆகியவை காணப்படுகின்றன. கோடைகாலம் மார்ச்சின் மத்தியில் துவங்குகின்றது, மேலும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உயர்ந்தபட்ச வெப்பநிலை இருக்கும். சராசரியான கோடை வெயில் வெப்பம் 42-44 டிகிரியை எட்டும் (100.4 பாரன்ஹீட்) ஆனாலும் ஈரப்பதம் குறைவானதாகவே இருக்கும். இந்தோரின் மால்வா பீடபூமியின் தென் மூலையில் இருப்பதால், ஒரு குளிர்ந்த தென்றல் காற்று (ஷாப்-எ-மால்வா என்றும் குறிப்பிடப்படுகிறது) மாலை நேரங்களில் வீசி கோடை இரவுகளை மிகுந்த மகிழ்சியுடையதாக மாற்றுகிறது. ஜூன் பிற்பகுதியில் பருவமழை துவங்கி, வெப்ப நிலைகள் சராசரியாக கிட்டத்தட்ட 26 °C (79 °F) ஆக, நீடித்து, அடைமழையுடனும் அதிக ஈரப்பதத்துடனும் இருக்கும். சராசரி மழையளவு 36 அங்குலங்களாக இருக்கும். நவம்பர் மத்தியில் குளிர்காலம் துவங்கி வறட்சியாக, மென்மையுடனும் வெயிலுடனும் இருக்கும். வெப்பநிலை சராசரியாக கிட்டத்தட்ட 4-15 டிகிரியாக (40-59 பாரன்ஹீட்), சில இரவுகளில் உறைகின்ற அளவுக்கு பனியிருக்கும். கோடையில் வெப்பநிலை சில நேரங்களில் 48-50 டிகிரி வரை அதிரிக்கும், குளிர்காலத்தில் 2 டிகிரிக்கும் குறைவாக இருக்கும்.
தென்மேற்கு பருவ மழையால் மிதமான மழையளவை ஜூலை-செப்டம்பர் மாதங்களில் பெறுகிறது.
[தொகு] போக்குவரத்து
இந்நகரம் இரயில், சாலை மற்றும் வான் வழி போக்குவரத்தால் நன்கு இணைக்கப்பட்டிருக்கிறது. இந்தோர் நீண்ட காலமாகவே இரயில் மற்றும் சாலை போக்குவரத்து மையமாகவுள்ளது.
பெரிய பேருந்து முனையங்களாக சர்வாதே பேருந்து முனையம், கங்வால் பேருந்து முனையம், நவ்லாகா பேருந்து மற்றும் ஜின்சி பேருந்து நிலையம் ஆகியவை உள்ளன.
[தொகு] இரயில்வே
நகர இரயில்வே பிரிவானது மேற்கு இரயில்வேயின் ரட்லாம் பிரிவின் கீழ் வருகிறது. இந்தோர் நகரம் இந்தோர் சந்திப்பு BG (அகலப்பாதை) நிலையத்தை முக்கியமானதாகக் கொண்டுள்ளது, மேலும் சந்திப்பு இரயில் நிலையமாக அகலப்பாதை வழியாக நாட்டின் பிற பகுதிகளை இணைக்கிறது. இது முன்னர் இரயில் இணைப்பற்று இருந்த காரணத்தால் வடக்கு இந்தோர் நகரத்திற்கான போக்குவரத்து முன்னேற்றமாகக் கட்டப்பட்டது. 2009 ஆம் ஆண்டு இரயில்வே நிதிநிலை அறிக்கையில் நவீன இரயில் நிலையமாக மாற்றப்படும் இரயில் நிலையங்களின் பட்டியலில் இந்தோர் முக்கிய இரயில் நிலையமாக நாட்டின் இதர 300 இரயில் நிலையங்களோடு இடம்பெற்றது.
இந்தோர் இந்தியாவிலுள்ள பல பகுதிகளைப் போல மீட்டர்வழிப் பாதை மற்றும் அகலப்பாதை இரயில் போக்குவரத்து நடைபெறும் இடமாகவுள்ளது. வழக்கமான இரயில் சேவைகள் நாட்டின் பிற பகுதிகளோடு இணைக்கிறது. இரயில்கள் அருகிலுள்ள ரட்லாம் சந்திப்பிலிருந்தும், உஜ்ஜைன் சந்திப்பிலிருந்தும், காண்ட்வா மற்றும் போபால் சந்திப்பிலிருந்தும் இயங்குகின்றன. இந்த நிலையங்களை இரயில் மூலமாகவோ அல்லது சாலை வழியாகவோ 2-5 மணி நேரங்களில் அடையலாம்.
ரட்லாம் மற்றும் அகோலா இடையிலிருக்கும் நீண்ட, தற்போதும் வழக்கத்திலிருக்கும் மீட்டர்வழிப் பாதையில் இந்தோர் உள்ளது. இந்திய இரயில்வேயின் திட்டமிடப்பட்ட ஒற்றைப்பாதை திட்டத்தின் கீழ் மீட்டர் வழிப்பாதை பகுதி நிலைத்த அகலப்பாதையாக மாற்றும் பணி இடம்பெற்றுள்ளது.
[தொகு] சாலைகள்
இந்தோர் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளோடு நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பல பெரிய நெடுஞ்சாலைகள் இந்தோர் வழியாகச் சென்று பிற முக்கிய நகரங்களோடு இணைக்கின்றன. இந்நகரத்தின் வழியாகச் செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகள்:
- தேசிய நெடுஞ்சாலை எண். 3 (தே.நெ3-ஆக்ரா மும்பை)
- தேசிய நெடுஞ்சாலை எண்.59 (தே.நெ 59- இந்தோர் அகமதாபாத்)
- தேசிய நெடுஞ்சாலை எண்.59ஏ(இந்தோர்-பெடுல்)
- மாநில நெடுஞ்சாலை எண்.17 (போபாலை இணைப்பது)
- மாநில நெடுஞ்சாலை எண்.27 (இந்தோரிலிருந்து காண்ட்வா)
- மாநில நெடுஞ்சாலை எண். 34 (இந்தோரிலிருந்து ஜான்சி)
மத்திய மற்றும் மேற்கிந்தியாவை இந்தோருடன் இணைக்க தினசரி பேருந்து போக்குவரத்து தனியார் மற்றும் மஹாராஷ்ட்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் அரசுகளின் போக்குவரத்து கழகங்கள் மூலம் நடத்தப்படுகிறது.
[தொகு] உள்ளூர் போக்குவரத்து
(I.C.T.S.C.L INDORE) பெருமையுடன் 125 பொது தாழ்தள பேருந்துகள், 120 புதிய அரை - தாழ்தள மற்றும் 50 குளிர்சாதன வசதியுடனான பேருந்துகளை இந்தோர் நகரத்தினுள் துவங்கியுள்ளது. 2004 ஆம் ஆண்டு இந்தோர் நகரப் பேருந்துப் புழக்கத்திற்கு வந்தது. GPS மற்றும் IVR வசதிகள் கொண்ட 200 பேருந்துகளை 30க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் நகரப் பேருந்து இயக்குகிறது. மாநகராட்சி 130 பேருந்து நிலையங்களைப் பேருந்து நேரம் காட்டக் கூடிய GPS LED அறிவிப்புகளுடன் அமைத்துள்ளது. இந்தோரில் மாநகர டாக்ஸிக்களும், கேப்களும் கூட ஏற்படுத்தப்பட்டுள்ளன. பேருந்துகள், டாக்ஸிகள், ஆட்டோக்கள், வேன்கள் மற்றும் கேப்கள் ஆகியவற்றைக் கொண்டு போக்குவரத்து எளிதாகி உள்ளது.
[தொகு] விமான நிலையம்
இந்தோருக்கு தேவி அஹில்யாபாய் ஹோல்கர் பன்னாட்டு விமான நிலையம் சேவையளிக்கிறது. இந்தோர் விமான நிலையம் நகரத்தின் மையப் பகுதியிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து, தற்போது உள்நாட்டுச் சேவைகளை மட்டும் வழங்குகிறது. ஒரு பன்னாட்டு முனையம் தற்போது கட்டப்பட்டு வருகிறது, பிப்ரவரி 2010 ல் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறைக் கோபுரமும் கட்டிடமும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
[தொகு] மக்கள் தொகையியல்
இந்தோரின் மொத்த மக்கள் தொகை 2001 ஆம் ஆண்டு 1,516,918 என தெரிவிக்கப்பட்டது.[16] மக்கள் தொகையில் 53% ஆண்களும், 47% பெண்களும் ஆவர். 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தோர் நகரம் சராசரி 75% கல்வியறிவைப் பெற்றிருந்தது, இது தேசிய சராசரியான 59.5% விட அதிகமானது. ஆணின் கல்வியறிவு 75% மற்றும் பெண் கல்வியறிவு 64% இருந்தது. சமீபத்தில் 2009 ஆண்டில் மொத்தமாக 89% சராசரி கல்வியறிவுடன் ஆண் கல்வியறிவு 95% ஆகவும் பெண் கல்வியறிவு 84% ஆகவும் உயர்ந்திருந்தது.[16] இந்தோரில் 18% பேர் 6 வயதிற்கு குறைவானவர்களாக இருந்தனர். சராசரி ஆண்டு மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் கிட்டத்தட்ட 2.85% ஆக 2001 மக்கள்தொகை புள்ளி விவரப்படி இருந்தது. இந்தி முக்கியமாக பேசும் மொழியாக இருந்தது. மராத்தியர்களின் (ஹோல்கர்கள்) ஆட்சியினால் இந்தோரின் கணிசமான மக்கள்தொகை மராத்தி பேசவும், புரிந்து கொள்ளவும் முடியும். இந்தோரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் மால்வி உள்ளூர் மொழியாகவுள்ளது.
[தொகு] பொருளாதாரம்
பிற பெரிய நகரங்களைப் போல இந்தோரிலும் பல வணிக வளாகங்கள், திரையரங்குகள், உணவகங்கள் மற்றும் உணவு விடுதிகள் ஆகியவை உள்ளன. வணிகம் மற்றும் வர்த்தகம் எல்லாக் காலங்களிலும் ஒரே மாதிரியானதாகவே உள்ளன, தீபாவளி மற்றும் புதுவருட காலங்களில் சில்லறை விலைகளில் ஏற்படுகிற சிறப்பு விலையேற்றம் இதிலிருந்து விதிவிலக்காகும். இந்தோரின் முக்கிய வணிகம் துணிகள், மருந்துகள் மற்றும் கல்விச் சேவைகளாகும். பிதாம்பூர், சன்வேர், மாவ் ஆகியவை இந்தோரின் தொழிற்சாலைப் பகுதியாக 2000 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது.[சான்று தேவை] பிதாம்பூர் இந்தியாவின் டெட்ராய்ட் எனவும் அறியப்படுகிறது.[17][18]
[தொகு] கல்வி
இந்தோர் மத்திய இந்தியாவின் கல்வி மையமாக பல்வேறு நன்கு அறியப்பட்ட நிறுவனங்களைக் கொண்டுள்ளது.
இந்நகரம் துவக்கக் கல்வியிலும் மற்றும் மேனிலைக் கல்வியிலும் கூட சிறந்து விளங்குகிறது. இந்தோரிலுள்ள பெரும்பாலான பள்ளிகள் மத்திய மேல்நிலைக் கல்விக் கழகத்தின் (CBSE) இணைப்பையும் அதே போன்று I.C.S.E பாடப்பிரிவுகளையும் கூடப் பெற்றுள்ளன. இந்தோர் உயர் கல்வி பயில மாணவர்களை தயார்படுத்தும் மையமாக உருவாகியுள்ளது. இந்தோர் பல்கலைக்கழகம், தற்போது தேவி அஹிலா விஷ்வா வித்தியாலயா (DAVV), முக்கியமான மற்றும் பழமையான இந்தோர் பல்கலைக்கழகமாகும். இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம், இந்தூர் மற்றும் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், இந்தூர் ஆகிய இரண்டையும் கொண்டுள்ள ஒரே இந்திய நகரம் இந்தோர் ஆகும். அங்கு பல வணிகப் பள்ளிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் ஆகியவை உள்ளன.
[தொகு] ஊடகங்கள்
இந்தோரின் உள்ளூர் ஊடகங்கள் வளமானவை மற்றும் வலுவானவை. இந்தோர் இதழியலின் அமர்விடமாக மாநிலத்தில் நீண்ட காலமிருந்தது. அங்கு ஏராளமான திரையரங்குகள், செய்தித்தாள்கள், பருவ இதழ்கள் மற்றும் உள்ளூர் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்களும் உள்ளன.
[தொகு] கலை மற்றும் திரையரங்கு
இரவீந்திர நாட்ய க்ரா என்பது அரங்க நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்கலைகள் ஆகியவற்றிற்கு முக்கியமான மற்றும் நன்கு அறியப்பட்ட மையமாகும். உலகம் முழுதுமிருந்து வருகின்ற கலைஞர்கள் இங்கு நிகழ்ச்சிகளை வழக்கமாக நடத்துகின்றனர். அபியக்தி செண்டர் ஃபார் ஆர்ட்ஸ் & பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ், தியோலாலிகர் கலா விதிகா ஆகியவையும் கலைகள் மற்றும் திரையரங்க நிகழ்வுகளுக்கானது.[19]
[தொகு] மின்னணு ஊடகங்கள்
வானொலித் தொழில் பற்பல தனியார் மற்றும் அரசிற்கு சொந்தமான பண்பலை வரிசை ஒலிபரப்புகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நகரத்தில் ஒலிபரப்பப்படும் பண்பலை வரிசைகள் AIRவிவித் பாரதி FM (102.8 MHz), ரேடியோ மிர்சிFM (98.3 MHz), (92.7 MHz), ரெட் FM (93.5 MHz), மை FM (94.3 MHz) மற்றும் AIR ஜியான் வாணி FM (107.6 MHz ஆகியவையாகும். அரசிற்குச் சொந்தமான தூர்தர்ஷன் இரு தரைவழி ஒளிபரப்புகளையும், ஒரு செயற்கைக் கோள் வரிசையையும் இந்தோரிலிருந்து ஒளிபரப்புகிறது.
[தொகு] அச்சு ஊடகங்கள்
கிட்டத்தட்ட 19 ஹிந்தி இதழ்கள், இரு ஆங்கில தினசரிகள், 26 வார மற்றும் மாத இதழ்கள், 3 காலாண்டு இதழ்கள், 1 இரு மாத பருவ இதழ் மற்றும் ஒரு வருட இதழ் ஆகியவை நகரத்திலிருந்து வெளியிடப்படுகின்றன.[20] முக்கிய ஹிந்தி தினசரிகளில் நை துனியா, தைனிக் பாஸ்கர், தைனிக் ஜக்ரான், பத்ரிகா, அக்னிபான் மற்றும் பிராபாத்கிரண் ஆகியவையும் உள்ளடக்கப்பட்டுள்ளன. முக்கிய ஆங்கில தினசரிகள் ஹிந்துஸ்தான் டைம்ஸ், பிஸினஸ் ஸ்டாண்டார்ட், தி ஹிந்து, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் தி எகனாமிக் டைம்ஸ் ஆகியவையாகும்.
[தொகு] தகவல் தொடர்பு சேவைகள்
இந்தோர் கண்ணாடி இழைகள் வலைத்தொடர்புடன் பெரியளவில் பின்னப்பட்டுள்ளது. மூன்று பதியப்பட்ட தொலைபேசி ஆப்பரேட்டர்களான BSNL, ரிலையன்ஸ் மற்றும் ஏர்டெல் ஆகியவை நகரத்தில் உள்ளன. BSNL, ரிலையன்ஸ், வோடபோன், ஐடியா, ஏர்டெல், டாடா டொகோமோ உள்ளிட்ட GSM சேவை வழங்கும் ஆறு மொபைல் நிறுவனங்கள் உள்ளன. CDMAசேவைகளை BSNL, விர்ஜின் மொபைல், டாடா இண்டிகாம் மற்றும் ரிலையன்ஸ் ஆகியவை நிறுவனங்கள் வழங்குகின்றன.
[தொகு] விளையாட்டுகள்
இந்தோர், நேரு விளையாட்டரங்கம் மற்றும் உஷா ராஜே கிரிக்கெட் விளையாட்டரங்கம் உள்ளிட்ட இரு கிரிக்கெட் விளையாட்டரங்கங்களைக் கொண்டுள்ளது. புல்வெளி டென்னிஸ் மற்றும் டேபிள் டென்னிஸ் ஆகியவற்றிற்கு பல விளையாட்டுச் சங்கங்கள் உள்ளன. இந்தோர் பல்வேறு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்தியுள்ளது. உஷா ராஜே விளையாட்டரங்கம் மத்திய பிரதேசத்தின் மிகப்பெரிய கிரிக்கெட் விளையாட்டரங்கம், அது 45,000 பார்வையாளர்கள் கொள்ளளவுடனும், இரவு-பகல் உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்தியுள்ளது. இங்கிலாந்து-இந்தியா இடையிலான இரண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகள் உஷா ராஜே விளையாட்டரங்கத்தில் விளையாடப்பட்டுள்ளன. இந்தோர் கூடைப்பந்து விளையாட்டிற்கான மரபு ரீதியான வலுசேர்க்கும் மையமாகவும் உள்ளது. இது கடந்த முப்பது அல்லது நாற்பது வருடங்களாக புகழடைந்து வரச் செய்கிறது. அது இந்தியாவின் முதல் தேசிய கூடைப்பந்து அகாடெமியின் தலைமையிடமாக உள்ளது. மேலும், இது உலகத் தரம் வாய்ந்த கூடைப்பந்து உள்விளையாட்டரங்கத்தையும் கொண்டுள்ளது. பல்வேறு தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. சி.கே. நாயுடு, ஜாம்ஷேத் நுஸ்செர்வாஞ்சி பாயா, முஷ்டாக் அலி, ஹிராலால் கெய்க்வாட், நரேந்திர ஹிர்வாணி, அமே குராசியா மற்றும் சஞ்சய் ஜக்டேல் ஆகியோர் குறிப்பிடத்தக்க கிரிகெட் வீரர்களின் பட்டியலில் உள்ளனர். அமரர் டாக்டர்.ஷர்மா (கூடைப்பந்து) மற்றும் மனாஸ் மிஷ்ரா (வலுத்தூக்குதல்), கிஷான் சந்த், ஷங்கர் லக்ஷ்மண் மற்றும் சலீம் ஷெர்வானி (ஹாக்கி) ஆகியோர் பிற பிரபல விளையாட்டு வீரர்கள்.
[தொகு] பண்பாடு
இந்தோர் நகரம் பல்வேறு பண்பாடுகளைக் கொண்டுள்ளது. இந்தோர் நகரம் கடந்த காலங்களில் அனைத்து ஜாதிகள், இனங்கள் மற்றும் நிறங்களைக் கொண்ட மக்களை வரவேற்றுள்ளது. நாட்டின் எல்லா மூலைகளிலிருந்தும் மத்திய பிரதேசத்தின் மையப் பகுதியை நோக்கி அவர்களது வாழ்விற்காகவும், கல்விக்காகவும் அல்லது அதன் அமைதியான பண்பாட்டிற்காகவும் இடம்பெயர்ந்தும் & குடியேறியும் உள்ளனர். இங்குள்ள மக்கள் சமூக நல்லெண்ணத்தை பரஸ்பரம் கலந்து பழகியும், ஜாதிகள் அல்லது மதங்கள் கடந்து ஒருவருகொருவர் மத ரீதியான மரியாதை அளித்தும் வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். இந்தோரில் INTACH (கலை மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளை) கிளை ஒன்றுள்ளது. தற்போது அது இந்தோரின் வளமையான பாரம்பரிய மரபினை பாதுகாத்தும், ஆவணப்படுத்தியும் காலமாறுபாடுகளைக் கடந்த நிலையிலும் வைத்திருக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
[தொகு] உணவு
இந்தோர் அதன் பல்வேறு உணவு வகைகளான "நாம்கீன்ஸ்", போஹா& ஜிலேபி, சாட்கள் (சிறுதீனிகள்) பல்வேறு உணவகங்கள் மற்றும் பெங்காலி & ராஜஸ்தானி இனிப்புகளுக்காகவும், பாஃபெல்-கோஷ்ட் போன்ற இந்தோர் மற்றும் மால்வா பிரதேசத்தின் சிறப்பு சுவையூட்டும் உணவுகளுக்காகவும் அறியப்பட்டுள்ளது. இந்தோர் தைனிக் பாஸ்கர் தினசரியால் நடத்தப்பட்ட மிகப்பெரிய தேநீர் விருந்து ஒன்றில் 30,000 பேர் கலந்து கொண்டதை சாதனையாகக் கொண்டுள்ளது.[21]
[தொகு] முக்கிய திருவிழாக்கள்
ஹோலி, பைசாகி, ரக்ஷா பந்தன், நவராத்திரி, தசேரா, கணேஷோஸ்தவ், தீபாவளி, ரம்சான், குடி பட்த்வா, பவாபீஜ் மற்றும் ஈத் போன்ற அனைத்து தேசிய திருவிழாக்களும், நாகபஞ்சமி, அஹில்யா உத்சவ் போன்ற இதர பண்டிகைகளும் இணையான ஆர்வத்துடன் கொண்டாடப்படுகின்றன.
[தொகு] அரசாங்கமும் அரசியலும்
மொத்த நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை: 1
- நாடாளுமன்ற உறுப்பினர்: திருமதி.சுமித்ரா மஹாஜன்
- மாநகரத் தலைவர் : டாக்டர்.(திருமதி.) உமா ஷஷி ஷர்மா
- சட்டமன்ற உறுப்பினர்கள்: திரு. அஷ்வின் ஜோஷி, திரு. சுதர்ஷன் குப்தா, திரு. ரமேஷ் மெண்டோலா, திருமதி. மாலினி கவுட், திரு. மஹேந்திர ஹார்டியா, திரு. ஜீத்து ஜீராடி
- மாவட்ட ஆட்சியர் : திரு. ராகேஷ் ஸ்ரீவத்சவா - IAS
- காவல்துறை கண்காணிப்பாளர் : திரு. மக்ரந்த் தியூஸ்கர்- IPS
- இந்தோர் வளர்ச்சி ஆணைய (I.D.A) தலைவர் : திரு. மது வெர்மா
[தொகு] ஆர்வத்திற்குரிய இடங்கள்
- ராஜ்வாடா - ஹோல்கர் காலத்தில் கட்டப்பட்ட ஏழடுக்கு அரண்மனை. முக்கிய அரண்மனை (அரசரின் குடியிருப்பு) சமீபத்தில் மறுபடியும் அதன் உண்மையான பொலிவுடன் கட்டிடக் கலை நிபுணர்களான ஹிமான்ஷூ டுட்வாட்கர் மற்றும் ஷ்ரேயா பார்கவா ஆகியோரால் மஹாராணி உஷாதேவி ஹோல்கரின் நிதியுதவியோடு கட்டப்பட்டுள்ளது.
- லால் பாக் அரண்மனை - ஓர் அழகிய அரண்மனை 200 acres (0.81 கிமீ2) பரப்பிலான நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இது அருங்காட்சியகமாக ஹோல்கர் காலத்து கலைப் பொருட்களுடன் இருப்பதைக் காண இயலும்.
- சீதலமாதா நீர்வீழ்ச்சி - மன்பூர் அருகிலுள்ள அழகிய அரண்மனை, இந்தோரிலிருந்து சுமார் 65 கிமீ (40 மை) தூரம் உள்ளது. AB சாலையிலிருந்து சுமார் 5 கிமீ (3 மை) தூரம் நீங்கள் செல்ல வேண்டும்.
- பளிங்குக் கோயில் - திகம்பர் ஜைன் கோயில் சேத் ஹுக்கும்சந்த் ஒரு நூற்றாண்டிற்கு முன்பு மிக அழகிய கண்ணாடி வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டது.
- கிருஷ்ணபுரா சத்ரி - அதிகமான மாசடைந்துள்ள கான் நதிக்கரையில் அமைந்துள்ள இவ்விடம் ராஜ்வாடாவிலிருந்து நடக்கக் கூடிய தூரமே.
- தேவ்லாலிகர் கலா விதிகா - பிரபல ஓவியர் விஷ்ணு தேவ்லாலிகர் பெயரில் அமைந்துள்ள நன்கறியப்பட்டுள்ள ஓவிய அரங்கு.
- கஜ்ரானா கணேஷ் கோயில் - கடவுள் கணேஷர் கோயில்.
- படல் பாணி - மாவின் அருகிலுள்ள அழகிய நீர் வீழ்ச்சி. படல் பாணியில் சிறிய இரயில்வே நிலையம் உள்ளது - இது மாவ் நிலையம் தாண்டிய பிறகு முதலாவதாக ஒருவர் மீட்டர்வழிப் பாதையில் காண்ட்வாவை நோக்கி செல்லும் போது வருகின்றதாகும்.
- ஜனபாவ் கோயில் - தேசிய நெடுஞ்சாலை 3 (இந்தியா) ஆம் ஆண்டு உள்ளது. மாவிலிருந்து 16 கிமீ (10 மை). குடி என்கிற கிராமத்திலுள்ள மலை ஒன்றின் மீது இருக்கின்ற கோயிலாகும். மூதாதையர் கூற்றுப் படி இங்குதான் பரசுராமரின் தந்தையான ஜமதாக்னி அவரது ஆசிரமத்தை வைத்திருந்தார். தீபாவளி கழித்து வரும் முதல் முழு நிலவு தினமான கார்த்திக் பூர்ணிமா - அன்று பிரபலமான திருவிழா நடத்தப்படுகிறது.
- கஜ்லீகார் - காண்ட்வா சாலையில் காண்டவாவை நோக்கி 20 கிமீ (12 மை) அருகிலுள்ளது, இது ஒரு சிறிய பழைய இடிந்த கோட்டை அழகிய சமவெளிக்கும், சிறிய நீர் வீழ்ச்சிக்கும் அருகிலுள்ளது. இதை மழை காலத்திலும், அதன் பிறகும் பார்த்து ரசிப்பது பெறுமதியுடையதாகும். ஒரு நாள் வெளிப்பயணத்திற்கு ஏற்ற இடம் இன்னும் கூட பெரும்பாலான இந்தோர் வாசிகளுக்கு தெரியாது.
- தின்சா நீர்வீழ்ச்சி - கஜ்லீகார் அருகிலுள்ளது, இது சிம்ரோல் அருகிலுள்ள அழகிய நீர் வீழ்ச்சியாகும். மூச்சடைக்கும் அளவிற்கு அழகானது அதனைச் சிறப்பாக வர்ணிக்க பயன்படுவது. மழைக்காலங்களிலும் அதன் பிறகும் கட்டாயம் காண வேண்டியது.
- அன்னபூர்ணா கோயில் - அற்புதமான ஹிந்துக் கோயில், நகரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இது முக்கியமாக பெண் தெய்வமான அன்னபூர்ணாவின் ஆலயமாகும்.
- மிருகக்காட்சி சாலை - இந்தோரிலுள்ள ஒரேயொரு மிருகக்காட்சி சாலை ஏராளமான விலங்குகளுக்கு பிரபலமானது.
[தொகு] குறைந்த முக்கியத்துவம் வாய்ந்தவை
- இந்தோரிலுள்ள லால்பாக் அரண்மனையின் வாயிற் கதவுகள் இலண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையின் வாயிற் கதவுகளை ஒத்ததாகும். இங்கிலாந்தில் வார்க்கப்பட்டு இந்தோருக்கு கப்பல் மூலம் அனுப்பப்பட்டது.
- இந்தோரில் "விஜய் பல்லா" எனப்படும் மிகப் பெரிய கான்கிரீட்டில் செய்யப்பட்ட கிரிக்கெட் மட்டை, அதில் காரி சோபர்ஸ்சின் மேற்கிந்திய தீவுகள் அணியை 1971 தொடரில் வென்ற இந்திய அணி வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
-
40 feet (12 மீ) படா கணபதி சிலை உலகிலேயே மிகப்பெரிய கணேஷர் சிலையாகும்.படிமம்:Bada Ganpati Indore.jpgபெரிய கணபதி - கணேஷா கடவுளின் மிகப்பெரிய சிலை
- நவீன தொழில்நுட்பத்திற்கான ராஜா ராமன்னா மையம்(முன்னதா CAT எனப்பட்டது), லேசர் மற்றும் ஆக்சலரேட்டர்தொழில்நுட்பத்திற்கான இந்திய அரசாங்கத்தின் அணு சக்தித் துறையால் நடத்தப்படும் இந்தியாவின் முதன்மையான ஆய்வு நிலையமாகும்.
- பிரபலமான ரேடியோ மிர்ச்சி98.3 (பின்னர் 98.4) FM முதன் முதலாக இந்தோரில் துவங்கப்பட்டு, பின்னர் இந்தியாவின் 4 மாநகரங்கள் உள்ளிட்ட இதர பத்து நகரங்களுக்குப் பரவியது.
- 1990களின் முற்பகுதி வரை, பாலிவுட் படங்கள் வியாழக்கிழமையன்று இந்தோரில் வெளியிடப்பட்டன, அதன் பின்னர் வெள்ளிக்கிழமைகளில் வெளியிடப்பட்டன.
- இந்தியாவின் முதல் தனியார் தரைவழி தொலைபேசி சேவை ஏர்டெல் நிறுவனத்தால் டச்டெல் என்ற பெயரில் துவங்கப்பட்டது.
- இந்தோர் வாழ்க்கைமுறை, நவீன பாணி மற்றும் சுவை போன்றவற்றில் மும்பையை ஒத்திருப்பதால் மினி மும்பை என்று அழைக்கப்படுகிறது.
- 250 ஆண்டு பழமை வாய்ந்த இந்தோரின் ராஜ்வாடா அரண்மனை, மீண்டும் அதே பழங்காலப் பொருட்களுடனும் கட்டும் முறைகளுடனும் கட்டப்பட்ட இந்தியாவிலுள்ள ஒரே கட்டிடம், இது 2007 ஆம் ஆண்டு கட்டிடக் கலை நிபுணர்கள் ஹீமான்ஷூ டுட்வாட்கர் மற்றும் ஷ்ரேயா பார்கவா ஆகியோரால் மறுபடியும் கட்டப்பட்டது.
- IIM மற்றும் IIT ஆகிய இரண்டையும் கொண்டுள்ள ஒரே இந்திய நகரம் இந்தோர் ஆகும்.
[தொகு] இந்தோர் மக்களின் பட்டியல்
[தொகு] மேலும் காண்க
[தொகு] மேற்கோள்கள்
|
This article includes a list of references or external links, but its sources remain unclear because it has insufficient inline citations. Please help to improve this article by introducing more precise citations where appropriate. (September 2009) |
- ↑ Indore Population. Census of India. Retrieved 16 August 2009.
- ↑ [1] World Gazetteer. Retrieved 21 September 2009
- ↑ "MP elections: Citizens of Bhopal want an Indore". CNN IBN. 2009-11-23. http://ibnlive.in.com/news/mp-elections-citizens-of-bhopal-want-an-indore/78832-3.html. Retrieved 2009-09-13.
- ↑ "Now, Indore to become Indur". Online Edition of The Times of India, dated 2006-12-18. பார்த்த நாள் 2009-09-21.
- ↑ மேஜர் ஜெனரல் சர் ஜான் மால்கம், சென்ட்ரல் இந்தியா, பகுதி I , ப. 68-70
- ↑ மேஜர் ஜெனரல் சர் ஜான் மால்கம், மெமோரிஸ் ஆப் செண்ட்ரல் ஆப் இந்தியா, தொகுதி. I. ப.94-95
- ↑ மேஜர் ஜெனரல் சர் ஜான் மால்கம், மெமோரிஸ் ஆப் மால்வா (1912)
- ↑ பேட்ரிக் கெட்டஸ், "சிட்டி டெவலெப்மெண்ட்", இன் எ ரிப்போர்ட் டு த தர்பார் ஆப் இந்தோர் பார்ட் 1. இந்தோர்:ஹிஸ்டாரிக் டெவலப்மெண்ட்" (1918)
- ↑ சுக் சம்பத்தி ராய் பண்டாரி, ஹிஸ்டரி ஆப் தி இந்தியன் ஸ்டேட்ஸ், ராஜ்யா மெண்டல் புக் பப்ளிஷிங் ஹவுஸ் (1927)
- ↑ "மால்வா இன் டிரான்சிஷன் எ செஞ்சூரி ஆப் அனார்க்கி", முதல் பகுதி 1698-1765, எழுதியது ரகுபீர் சிங் ஆப் சித்தமாவு. வருடம் 1936.
- ↑ "தி இந்தோர் ஸ்டேட் கெஸட்டீர்". தொகுதி 1-உயர்திரு மகராஜா ஹோல்கரின் அரசாங்க ஆணையத்தின் கீழ் அச்சிடப்பட்டது. சூப்பிரண்டண்டண்ட் ஹோல்கர் கவர்மெண்ட் பிரஸ், இந்தோர் 1931.
- ↑ "மெமயர்ஸ் ஆப் செண்ட்ரல் இந்தியா", தொகுதி I., எழுதியவர் மேஜர் ஜெனரல் சர் ஜான் மால்கம். வருடம் 1823.
- ↑ "இந்தோர் ஹோல்கர் ஸ்டேட் கெஸட்டீர்". எண்.23, 1875.
- ↑ "மால்வா சாஹித்யா". ஐந்தாம் ஆண்டு வெளியீடு எண்.1. வருடம் 1855. இந்தோர்.
- ↑ "தி மாண்ட்லிக் பேப்பர்ஸ் அண்ட் தி ஃபேமிலி". எழுதியவர் எம்.வி.கிபே. 1946.
- ↑ 16.0 16.1 இந்தோரின் புள்ளிவிவரங்கள். இந்தோர் மாவட்ட நிர்வாகம். 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 அன்று பெறப்பட்டது
- ↑ Tiwary, Santosh (1998 -04-01). "Pithampur small enterprises tell a tale of untapped potential". Indian Express. http://www.expressindia.com/news/fe/daily/19980104/00455324.html. Retrieved 2009-09-01.
- ↑ Trivedi, Shashikant (2004-07-09). "Pithampur units face bleak future". Business Standard. http://www.business-standard.com/india/storypage.php?autono=153051. Retrieved 2009-09-01.
- ↑ "Abhivyakti,".
- ↑ இந்தியன் ஜேர்னல் ஆப் சயின்ஸ் கம்யூனிகேஷன் (தொகுதி 2/ எண் 1/ ஜனவரி – ஜூன் 2003) http://www.iscos.org/vol3/rp1.htm
- ↑ "A record tea party at Indore". Sify. 2008-02-25. http://sify.com/news/fullstory.php?id=14610077. Retrieved 2009-09-13.
[தொகு] புற இணைப்புகள்
- கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்
- Articles with a promotional tone from செப்டெம்பர் 2009
- All articles with a promotional tone
- Articles with trivia sections from செப்டெம்பர் 2009
- Articles needing cleanup from ஆகத்து 2009
- All pages needing cleanup
- அறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்
- புற சான்றுகள் தேவைப்படும் கட்டுரைகள்
- Articles lacking in-text citations from September 2009
- All articles lacking in-text citations