அன்வர் இப்ராகிம்
| அன்வர் இப்ராகிம் Anwar Ibrahim |
|
|
நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி - {{{constituency_}}} |
|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு 1982-1999 ஆகஸ்ட் 28 2008 - இன்று வரை |
|
| முன்னவர் | சபீடி அலி (1வது) வான் இஸ்மாயில் (2வது) |
|---|---|
| பின்வந்தவர் | வான் இஸ்மாயில் (1வது) |
| பெரும்பான்மை | 15,671 |
|
மலேசிய எதிர்க்கட்சித் தலைவர்
|
|
| பதவியில் | |
| பதவியேற்பு ஆகஸ்ட் 26, 2008 |
|
| முன்னவர் | வான் இஸ்மாயில் |
|
மலேசியாவின் 7வது உதவிப் பிரதமர்
|
|
| பதவியில் டிசம்பர் 1, 1993 – செப்டம்பர் 2, 1998 |
|
| முன்னவர் | கபார் பாபா |
| பின்வந்தவர் | அப்துல்லா அகமது படாவி |
| அரசியல் கட்சி | மக்கள் சமத்துவக் கட்சி |
|
|
|
| பிறப்பு | ஆகத்து 10, 1947 பெனாங்கு |
| வாழ்க்கைத் துணை |
வான் இஸ்மாயில் |
| தொழில் | மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் |
| சமயம் | இஸ்லாம் |
அன்வர் பின் இப்ராகிம் (Anwar bin Ibrahim, பிறப்பு: ஆகஸ்ட் 10, 1947) மலேசிய அரசியல்வாதி. இவர் 1993 முதல் 1998 வரை அந்நாட்டின் உதவிப் பிரதமராகப் பதவி வகித்தவர். இவரது ஆரம்பகால அரசியலில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகதிர் முகமதுவின் தீவிர ஆதரவாளராக இருந்தார், ஆனாலும் பின்னர் மகதிரின் நிர்வாகத்திற்கு எதிராகத் தீவிரமாகச் செயற்பட்டார்.
1999 இல் மகதிரின் ஆட்சிக் காலத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு ஆறு ஆண்டுகள் சிறைப்படுத்தப்பட்டார். மேலும் 2000 ஆம் ஆண்டில் தன்னினச் சேர்க்கையாளர் எனக் குற்றம் சாட்டப்பட்டு மேலும் 9 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டது. எனினும் 2004 ஆம் ஆண்டில் மலேசிய மேல் நீதிமன்றம் இரண்டாவது குற்றச்சாட்டுக்களில் இருந்து இவர் குற்றமற்றவர் என அறிவித்ததை அடுத்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஜூலை 2008 இல் இதே குற்றச்சாட்டுக்காக மீண்டும் கைது செய்யப்பட்டார்.
ஆகஸ்ட் 26, 2008 இல் பெர்மாத்தாங் பாவ் என்ற நாடாளுமன்றத் தொகுதிக்காக நடைபெற்ற இடைத்தேர்தலில் 15,671 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.