நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோயில்
தோற்றம்
| கண்ணாத்தாள் கோயில் | |
|---|---|
தமிழ்நாட்டில் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: | 9°52′N 78°34′E / 9.87°N 78.57°E |
| பெயர் | |
| வேறு பெயர்(கள்): | கண்ணுடையநாயகி அம்மன் |
| அமைவிடம் | |
| நாடு: | இந்தியா |
| மாநிலம்: | தமிழ்நாடு |
| மாவட்டம்: | சிவகங்கை |
| அமைவு: | நாட்டரசன்கோட்டை |
| கோயில் தகவல்கள் | |
| சிறப்பு திருவிழாக்கள்: | வைகாசித் திருவிழா, களியாட்டத் திருவிழா |
நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோயில் அல்லது கண்ணுடையநாயகி அம்மன் கோயில் சிவகங்கையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் நாட்டரசன்கோட்டை எனும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரில் கம்பன் தனது இறுதிக்காலத்தை கழித்தார். இங்கு கம்பனின் சமாதியும் உள்ளது.[1]
அம்மனின் சிறப்பு
[தொகு]- பரம்பரை பரம்பரையாக பாரசைவர்களாள் அம்பாளுக்கு பூஜா கைங்கர்யம் செய்யப்படுகிறது.
- கண் தெரியாதவர்கள் நாற்பத்தெட்டு நாட்கள் விரதமிருந்து இக்கோயிலில் தங்கியிருந்து தினமும் அம்மனை வழிபட்டு, அம்பாளுக்கு செய்யப்படும் அபிசேக தீர்த்தத்தைக் கண்களில் விட்டால் கண்பார்வை கிடைக்கும் என்பது நம்பிக்கை.[2]
- மக்கட்பேறு இல்லாதவர்கள் அம்மனிடம் கரும்புத் தொட்டில் எடுப்பதாக வேண்டிக் கொள்கின்றனர். குழந்தை பாக்கியம் கிடைத்ததும் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.[3]
- கண்ணாத்தாளின் அருளால் பிறக்கும் குழந்தைகளுக்கு கண்ணன், கண்ணப்பன், கண்ணகி, கண்ணாத்தாள் என்றும் பெயர் சூட்டுகிறார்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தேவியின் திருத்தலங்கள்-19: நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி". தினமணி. https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2021/Apr/16/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-19-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF-3605264.html. பார்த்த நாள்: 13 August 2025.
- ↑ "கண் பார்வைத் தரும் கண்ணாத்தாள்". தினமணி (06 சூன் 2013)
- ↑ "அருள்மிகு கண்ணுடைய நாயகி திருக்கோயில் வரலாறு". தினமலர்