பெண்ணாத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெண்ணாத்தூர்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் வேலூர்
வட்டம் வேலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

9,425 (2011)

1,229/km2 (3,183/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 7.67 சதுர கிலோமீட்டர்கள் (2.96 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/pennathur

பெண்ணாத்தூர் (ஆங்கிலம்:Pennathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தின் வேலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்[தொகு]

வேலூர் - கடலூர் நெடுஞ்சாலையில் உள்ள பெண்ணாத்தூர் பேரூராட்சி, வேலூரிலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம், 16 கிமி தொலைவில் உள்ள காட்பாடியில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

7.67 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 77 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி அணைக்கட்டு (சட்டமன்றத் தொகுதி) மற்றும் வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,261 வீடுகளும், 9,425 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 80.94% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1051 பெண்கள் வீதம் உள்ளனர்.[4]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. பெண்ணாத்தூர் பேரூராட்சியின் இணையதளம்
  4. Pennathur Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்ணாத்தூர்&oldid=3539827" இலிருந்து மீள்விக்கப்பட்டது