ஆரணி மக்களவைத் தொகுதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொகுதி மறு சீரமைப்பு காரணமாக வந்தவாசி மக்களவைத் தொகுதி ஒழிக்கப்பட்டு அதற்குப் பதில் அதில் இருந்த சில தொகுதிகளை எடுத்தும், சில புதிய தொகுதிகளை உருவாக்கியும் ஆரணி தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
ஆரணியில் இடம் பெற்றுள்ள சட்டசபைத் தொகுதிகள் - போளூர், ஆரணி, செய்யார், வந்தவாசி (தனி), செஞ்சி, மயிலம்.
15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்[தொகு]
13 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் காங்கிரசின் எம். கிருட்டிணசாமி அதிமுகவின் என். சுப்பிரமணியனை 106,830 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து ஆரணி மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.
| வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
|---|---|---|
| எம். கிருட்டிணசாமி | காங்கிரசு | 396,728 |
| என். சுப்பிரமணியன் | அதிமுக | 289,898 |
| இரா. மோகனம் | தேமுதிக | 105,729 |
| எம். வேலாயுதம் | சுயேச்சை | 14,919 |
| சங்கர் | பகுஜன் சமாஜ் கட்சி | 9,700 |
|
|||||