சித்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
வரிசை 54: | வரிசை 54: | ||
;அல்லாவைப் பற்றிய சித்தர் பாடல் |
;அல்லாவைப் பற்றிய சித்தர் பாடல் |
||
மூலம்: |
மூலம்: [http://www.siththarkal.com சித்தர்கள் இராச்சியம்] |
||
யாகோபு சித்தரின் ''யாகோபு சுண்ணகாண்டம்'' என்னும் நூலின் கடவுள் வணக்கப் பாடல். |
யாகோபு சித்தரின் ''யாகோபு சுண்ணகாண்டம்'' என்னும் நூலின் கடவுள் வணக்கப் பாடல். |
22:15, 22 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்
கருத்துக்கள் |
---|
சித்தர்கள் தமிழ் மரபின் விதிவிலக்குகள். பொது வாழ்வு முறை, வழி முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு, வழி முறைகளை உருவாக்கி சமூகத்துடன் ஒரு முரண்பாடான உறவு வைத்திருப்பவர்கள். சித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். அறிவு படைத்தவர்கள் சித்தர்கள்.
சித்தர்கள் மீவியற்கை (supernatural) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு, எனினும் இவர்கள் உலகாயுத (material) இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன. ஆயினும் இவர்கள் வெறும் பொருளியல் வாதிகள் (materialists) அல்ல. மெய்ப்புலன் காண்பது அறிவு என்பதிற்கிணங்க, உண்மை அல்லது நிச நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.
சித்தர்களை அடையாளப்படுத்துவதோ, வரையறுப்பதோ கடினம். ஏனென்றால், ஒவ்வொருவரின் தனித்துவமும், மரபை மீறிய போக்குமே சித்தர்களின் வரைவிலக்கணம். தரப்படுத்தலுக்கோ, வகைப்படுத்தலுக்கோ இலகுவில் சித்தர்கள் உட்படுவதில்லை. எனினும், தமிழ் சூழலில், வரலாற்றில் சித்தர்கள் என்பவர்கள் என்றும் இருக்கின்றார்கள்.
சாதி, சமயம், சாத்திரம், சடங்குகள் மீறிய உலக நோக்கு, பொது இல்லற, துறவற வாழ்முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு முறைகள். விந்தையான செயல்கள், பட்டறிவு தமிழ், சீரிய ஆராய்ச்சி ஆகிய அம்சங்கள் சித்தர்களை வருணிப்பன எனலாம். அப்படிப்பட்ட மேலோட்டமான வருணிப்புக்களுக்கு மேலாக, சித்தர்கள் என்பவர்கள் சித்தி அடைந்தவர்கள். தங்கள் இருப்பை (existence), உடம்பை, சிந்தையை, சுற்றத்தை, இவ்வுலகின் இயல்பை நோக்கி தெளிவான புரிதலை (understanding), அறநிலை உணர்வை (external awareness), மெய்யடைதலை (actuality) சித்தி எய்தல் எனலாம்.
சித்தர்களை புலவர்கள், பண்டாரங்கள், பண்டிதர்கள், சன்னியாசிகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஓதுவார்கள், கலைஞர்கள், கவிஞர்கள், அரசர்கள், மறவர்கள், ஆக்கர்கள், புலமையாளர்கள், அறிவியலாளர்கள், பொது மக்கள் ஆகியோரிடம் இருந்து வேறுபடுத்தி அடையாளப்படுத்தலாம். சித்தர்களின் மரபை, கோயில் வழிபாடு, சாதிய அமைப்பை வலியுறுத்தும் சைவ மரபில் இருந்தும், உடலையும் வாழும்போது முக்தியையும் முன்நிறுத்தாமல் "ஆத்மன்", சம்சாரம் போன்ற எண்ணக்கருக்களை முன்நிறுத்தும் வேதாந்த மரபில் இருந்தும் வேறுபடுத்திப் பார்க்கலாம். இன்று, சித்தர் மரபு அறிவியல் வழிமுறைகளுடன் ஒத்து ஆராயப்படுகின்றது. எனினும், சித்தர் மரபை தனி அறிவியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது அதன் பரந்த வெளிப்படுத்தலை, அது வெளிப்படுத்திய சூழலை புறக்கணித்து குறுகிய ஆய்வுக்கு இட்டு செல்லும்.
சித்தர்களின் கொள்கை
பரமாத்மா எங்கும் தனியாக இல்லை. நமது உடம்பு தான் பரமாத்மாவின் இடம் ஆதலால் கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே கடவுட்பணி, உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பது சித்தர் கொள்கை.
- உன்னுள்ளும் இருப்பான் என்னுள்ளும் இருப்பான்
- உருவம் இல்லா உண்மை அவன்.
- இதை உணர்ந்தார் இங்கே உலவுவதில்லை
- தானும் அடைவார் அந்நிலை தன்னை.
சித்த வைத்தியம்
முதன்மைக் கட்டுரை: சித்த மருத்துவம்
சித்தர்களின் வைத்திய முறைகள் காலம் குறிப்பிட முடியாத பழமையானதாக இருக்கிறது. பண்டைத்தமிழரின் விஞ்ஞான அறிவின் சிகரமே சித்த வைத்தியமாகும். மனித குலத்தைக் காக்கும் பொருட்டு, அன்றைய கலாச்சாரத்திற்கேற்பவும், மனித வாழ்க்கை முறைக்கு தேவையான, அனைத்து ஆரோக்கிய முறைகளையும் மிக எளிய வைத்திய முறைகளை, அனைவரும் செய்துகொள்ளும் பொருட்டு தந்தனர். அவ்வைத்திய முறைகளை, அவர்களின் இருப்பிடத்திலே அருகில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு, மனித குலத்தைக் காத்து வந்தனர்.
மக்கள் அனைவரும், ஒழுக்கந்தவறாமல் வாழவேண்டும் என்றும், பொய், சூது, கொலை, குடி, விபச்சாரம், கூடா ஒழுக்கம் ஆகியவை உடல் நோயை உண்டாக்கும் என்றும் யோகப்பயிற்சியிலே வாழ்வில் வெற்றி பெறமுடியும் என்றும் உடல் வலிமையுடன் நீண்டநாள் வாழ முடியும் என்றும் சித்தர்கள் பல பாடல்கள் பாடியுள்ளனர்.
"உலகில் சாவாமைக்கு வழிகாண முடியும் என்ற உயரிய நோக்கம் கொண்ட மருத்துவ முறை சித்த மருத்துவமே."[1]
சித்தர்களின் இரசவாதம்
"சித்தர்களில் சிலர் இரும்பைப் பொன்னாக்கும் (ரசவாதம்) வேலைகளில் மறைவாக ஈடுபட்டிருந்திருக்கின்றனர். இந்த வகையான முயற்சி கடந்த நூற்றாண்டுகளில் உலகெங்கிலும் நடந்திருக்கின்றது." [2] இன்றைய வேதியியல் அறிவின் படி இரும்பையோ அல்லது வேறு எந்த ஒரு தனிமத்தையோ பொன்னாக்க முடியாது. எனினும் அப்படிப்பட்ட முயற்சிகளே இன்றைய வேதியல் துறையின் முன்னோடி என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான்.
மருந்துகளில் ரசம் முதன்மையானது. இதன் மூலம் இரசபஸ்பம், ரசசெந்தூரம், ரசக்கட்டு, முதலிய மருந்துகள் தயாரிக்கப்பட்டன. தீராத பல கொடிய நோய்களுக்கு இம்மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. எனவே ரசவாதம் என்றால் ரசத்தின் மாறுதல்களை அறிவது என்று பொருள்.
போகர் என்ற சித்தர் எழுதிய பாடல்கள் வேதியல் தொடர்பான பாடல்களில் முக்கியத்துவம் பெறுகின்றன. அவை தமிழில் அமைந்தாலும், அவர் ஒரு சீனர் என்ற ஒரு கருத்தும் இருக்கின்றது.
சித்தர்களின் நவீன அறிவியல் ஆராய்ச்சி
சித்தர்கள் கண்டறிந்த வாத வித்தையே சிறந்த விஞ்ஞான ஆராய்ச்சியாகும். உலோக வகைகள், உப்பு வகைகள், பாஷாண வகைகள், வேர் வகைகள், பட்டை வகைகள், பிராணிகளி்ன் உடம்பிலே உற்பத்தியாகும் கோரோசனை கஸ்தூரி, மூத்திரம், மலம் முதலியவைகளின் குணங்களை ஆராய்ந்து கண்டிருக்கின்றனர்.
காட்டிலும் மலையிலும் குகையிலும் வாழ்ந்த சித்தர்கள் தங்கள் ஆராய்ச்சிகளை நடத்தியிருக்கிறார்கள். இன்றிருப்பதைப்போல பரிசோதனை சாலைகள் அன்று இருக்கவில்லை. எனினும் அவர்களின் ஆராய்ச்சிகள் இன்றைய விஞ்ஞான ஆய்வுடன் ஒத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
சித்தர்களின் ஞானம்
மதவாதிகள், ஆத்திகர்கள், அவனன்றி ஓரணுவும் அசையாது என்ற நம்பிக்கை உள்ளவர்கள். மக்கள் நூறாண்டுகள் தான் உயிர் வாழமுடியும் என்று நம்புகின்றனர். ஆனால் சித்தர்களின் நம்பிக்கை இதற்கு மாறானது. நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழமுடியும் என்பது சித்தர்களின் நம்பிக்கை.[3]
இசுலாமிய சித்தர்கள்
இந்திய வரலாற்றில், இசுலாமிய சித்தர்களின் காலத்தை இருவகையாக பிாிக்கலாம்
- கி.பி. 400 -க்கும், 700 -க்கும் இடைப்பட்ட காலம் - மந்திராயன காலம் என அழைக்கப்படுகிறது.
- கி.பி. 700-க்கும் 1200-க்கும் இடைப்பட்ட காலம் - வஜ்ராயன காலம் என அழைக்கப்படுகிறது.
சித்தர்கள் அல்லது அனுபூதி மந்திரர்கள், எப்பொழுதும் பர்வதத்துடன் தொடர்பு கொண்டவர்கள். பர்வதம், நாகர்ஜுனாின் இருப்பிடம் ஆகும். இத்தகைய சித்த மரபு, பெளத்தத்தின் தாக்கத்தினால் பின் தொடர்ந்ததாகும். இத்தகைய தாக்க,ம் சூபிகளிடத்திலும் இருந்தது. தமிழில் குணங்குடி மஸ்தான், சதக்கத்துல்லா அப்பா, உமறுப் புலவர், சேகனாப் புலவர், குஞ்சு மூசு லெப்பை, தக்கலை பீர் முகமது அப்பா ஆகியோரிடத்திலும், இதற்கான தூண்டல்கள் இருந்தன. இவர்களின் நூல்களை நாம் வாசிக்கும் போது, சித்த மரபு சார்ந்த பல்வேறு குறிப்புகளை அறியலாம்.
சித்தர்களும் சூஃபிகளும்
இஸ்லாமிய மதத்தின் சூஃபி மரபினரை தமிழ் சித்தர்களுடன் இணைத்து பார்க்கும் வழக்கும் உண்டு. பல இஸ்லாமிய பின்புலம் கொண்டவர்களும் சித்தர்களாகக் கொள்ளப்படுகின்றார்கள். இராமதேவ சித்தர் என்பவர் மெக்காவிலுள்ள நபிகள் நாயகம் என்ற இசுலாமிய குருவிற்கு சீடராய் இருந்திருக்கிறார்.[4]
- அல்லாவைப் பற்றிய சித்தர் பாடல்
மூலம்: சித்தர்கள் இராச்சியம்
யாகோபு சித்தரின் யாகோபு சுண்ணகாண்டம் என்னும் நூலின் கடவுள் வணக்கப் பாடல்.
"ஆனந்தமாய் நிறைந்த அல்லா பாதம்
அடுத்துநின்ற அடுத்துநின்ற சித்தநபிமார்கள்
பாதம்போற்றி தானந்த மகமதுவை தொழுது
போற்றி தாட்டிகமாய் சுண்ணமென்ற காண்டம்
தன்னை வானந்த மாகவே அறுநூறாக
வகயாகப் பாடினேன் வண்மையாகக்
கோனந்த மெய்ப்பொருளா மின்னூல்தன்னை
குறிப்பாகப் பாடினேன் கூர்ந்து பாரே" -யாக்கோபு என்ற இராமதேவர்
தமிழ்ச் சித்தர்கள்
தமிழ் நாட்டில் இருந்த சித்தர்கள் பதினெட்டுப் பேர் (பதினெண்சித்தர்கள்) என்று கூறுவர்.[5] அவர்கள் வருமாறு;-
1 திருமூலர் | 2 இராமதேவ சித்தர் | 3 கும்பமுனி | 4 இடைக்காடர் | 5 தன்வந்திரி | 6 வால்மீகி |
7 கமலமுனி | 8 போக நாதர் | 9 மச்ச முனி | 10 கொங்கணர் | 11 பதஞ்சலி | 12 நந்தி தேவர் |
13 போதகுரு | 14 பாம்பாட்டி | 15 சட்டைமுனி | 16 சுந்தரானந்த தேவர் | 17 குதம்பைச் சித்தர் | 18 கோரக்கர் |
எனினும், பிற்காலத்தில் அகத்தியர் போன்ற பல சித்தர்கள் இவர்கள் வழியில் தோன்றினர்.
மேற்கோள்கள்
- ↑ *சித்த மருத்துவம், சுப. சதாசிவம், 2001, வானதி பதிப்பகம், சென்னை
- ↑ * அறியப்படாத தமிழகம் (தொ. பரமசிவன், 2001, காலச்சுவடு பதிப்பகம், சென்னை)
- ↑ * சித்தர்கள் கலைக் களஞ்சியம் (எஸ்.ஆர். சங்கரலிங்கனார், 1997, சித்தாசிரமம், சென்னை)
- ↑ சித்தர்கள் வாழ்க்கை, பரசுராமன், விகடன் பிரசுரம், இராமதேவர், ISBN 978-8189936068.
- ↑ *கழகத் தமிழ் கையகராதி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி , தமிழகம், இந்தியா
உசாத்துணை நூல்கள்
- சித்தர் பாடல்கள் (சித்தர்கள், 2001 திருநாவுக்கரசு புத்தக நிலையம், சென்னை)
- பதினெண் சித்தர்கள் இயற்றிய நாடி சாஸ்திரம் (துர்க்காதாஸ் எஸ்.கே., 1999, பூம்புகார் பதிப்பகம், சென்னை)
- இந்திய தத்துவக் களஞ்சியம்-அவைதிகத் தத்துவங்கள்-தொகுதி 1 (சோ.ந. கந்தசாமி, 2003, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்).
- சித்தர்கள் கலைக் களஞ்சியம் (எஸ்.ஆர். சங்கரலிங்கனார், 1997, சித்தாசிரமம், சென்னை)
- டி. என். கணபதி. (2004). தமிழ்ச் சித்தர் மரபு. சென்னை: ரவி பதிப்பகம்.
anandha vikatan pathipakam - 18 siddharkal