மத்திய பிரதேச அரசு
தலைமையிடம் | போப்பால் |
---|---|
செயற்குழு | |
ஆளுநர் | ராம் நரேஷ் யாதவ் |
முதலமைச்சர் | சிவ்ராஜ் சிங் சௌஃகான் |
சட்டவாக்க அவை | |
சட்டப் பேரவை | |
சபாநாயகர் | சீதாஷரண் சர்மா |
நீதித்துறை | |
உயர் நீதிமன்றம் | மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் |
தலைமை நீதிபதி | அஜய் மாணிக் ராவ் கன்வில்கர் |
மத்திய பிரதேச அரசு என்பது மத்திய பிரதேச மாநிலத்தை ஆளும் அமைப்பாகும். இது நீதித்துறை, சட்டவாக்க அவை, செயலாக்கத் துறை(அமைச்சரவை) ஆகிய பிரிவுகளைக் கொண்டது. மாநில அரசின் தலைமையகம் போப்பாலில் உள்ளது.
இந்தியக் குடியரசு தலைவரால் நியமிக்கப்படும் ஆளுநர், மாநில அரசின் தலைமை அலுவராக இருப்பார். ஆனால், மாநில முதல்வருக்கே அதிக அதிகாரம் இருக்கும்.
நீதித்துறை
[தொகு]மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் ஜபல்பூரில் உள்ளது. இது இம்மாநில நீதித் துறையின் உயர் அமைப்பாகும்.[1]
சட்டவாக்க அவை
[தொகு]மத்திய பிரதேச சட்டமன்றத்தில் 230 உறுப்பினர்கள் இருப்பார்கள். இவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர். ஒருவர் மட்டும் நியமிக்கப்படுவார்.[2]
செயலாக்கத் துறை
[தொகு]செயலாக்கத் துறையின் தலைவராக முதல்வர் இருப்பார். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒருவரை முதல்வராக தேர்ந்தெடுப்பர். முதல்வருடன் சிலரும் அமைச்சரவையில் பங்கேற்பர். ஒவ்வொருவருக்கும் ஐந்தாண்டு காலம் பதவி இருக்கும்.
இதனையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "Jurisdiction and Seats of Indian High Courts". Eastern Book Company. Retrieved 2008-05-12.
- ↑ "Madhya Pradesh Legislative Assembly". Legislative Bodies in India. National Informatics Centre, Government of India. Retrieved 2008-05-12.