உத்தராகண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
வரிசை 66: | வரிசை 66: | ||
[[பகுப்பு:உத்தராகண்டம்| ]] |
[[பகுப்பு:உத்தராகண்டம்| ]] |
||
[[பகுப்பு: இந்திய மாநிலங்கள்]] |
21:46, 10 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்
உத்தரகண்ட் (உத்தராஞ்சல்), இந்தியாவின் வட பகுதியில் அமைந்த மாநிலங்களுள் ஒன்று. இம்மாநிலம், 2000ம் வருடம் நவம்பர் 9ம் நாள், உத்தரப் பிரதேசத்திலிருந்து பிரித்தெடுக்கப் பட்டது. 2000 லிருந்து 2006 வரைக்கும் உத்தராஞ்சல் என அழைக்கப்பட்டது. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு முழுவதும் இமய மலையில் அமைந்துள்ளது. தேஹ்ராதுன்் உத்தராஞ்சல் மாநிலத்தின் தலைநகராகும். எனினும், இம்மாநிலத்தின் உயர்நீதிமன்றம் நைனிடால் நகரில் உள்ளது. முசூரி, அல்மோரா, ராணிக்கெட் ,ரூர்க்கி ஆகியவை பிற முக்கிய ஊர்களாகும். இந்து சமய திருத் தலங்களான ரிஷிகேஷ், ஹரித்வார், கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்திரி, யமுனோத்திரி ஆகியவையும் உத்தர்காண்ட் மாநிலத்திலேயே அமைந்துள்ளன.
மாவட்டங்கள்
உத்தராகண்டம் மாநிலம், 13 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சமோலி, தேஹ்ராதுன், ஹரித்வார், பௌரி, ருத்ரப்பிரயாக், தெஹ்ரி, உத்தரகாசி ஆகிய மேற்குப் பகுதி மாவட்டங்கள் கர்வால் ஆட்சிப் பிரிவிலும், அல்மோரா, பாகேஷ்வர், சம்பாவத், நைனிடால், பித்தோராகர், உதம் சிங் நகர் ஆகிய கிழக்கு மாவட்டங்கள் குமான் ஆட்சிப் பிரிவிலும் அடங்கும்.
மக்கள்
சமயம் | பின்பற்றுவோர் | விழுக்காடு |
---|---|---|
மொத்தம் | 8,489,349 | 100% |
இந்துகள் | 7,212,260 | 84.96% |
இசுலாமியர் | 1,012,141 | 11.92% |
கிறித்தவர் | 27,116 | 0.32% |
சீக்கியர் | 212,025 | 2.50% |
பௌத்தர் | 12,434 | 0.15% |
சமணர் | 9,249 | 0.11% |
ஏனைய | 770 | 0.01% |
குறிப்பிடாதோர் | 3,354 | 0.04% |
2013ஆம் ஆண்டு பெருமழை வெள்ள அழிவுகள்
சூன் மாதம், 2013ஆம் ஆண்டில் இம்மாநிலத்தில் பெய்த தொடர் பெருமழையால் இம்மாநில ஆறுகளில் வரலாறு காணாத அளவில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடியதால், ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்களும், ருத்ரபிரயாக்,பத்ரிநாத் மற்றும் கேதார்நாத், கங்கோத்திரி மற்றும் யமுனோத்திரி போன்ற புனித இடங்களில் இருந்த பக்தர்களில் பலர் இறந்தனர். மேலும் கேதார்நாத்துக் கோயில் முக்கிய கோயில் தவிர அதன் சுற்றுபுறக் கட்டிடங்கள் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. நான்கு புனித இடங்கள் என்று சொல்லக்கூடிய பத்ரிநாத் கோயில், கேதார்நாத்துக் கோயில், கங்கோத்திரி மற்றும் யமுனோத்ரி ஆகிய இடங்களுக்கு செல்லும் தரைவழிச் சாலைகள் நிலச்சரிவுகளால் முற்றிலும் சேதம் அடைந்திருப்பதால், இனி பக்தர்கள் இப்புனித கோயில்களுக்கு சென்று இறைவனை வழிபட செய்ய இன்னும் மூன்று ஆண்டு காலம் ஆகும் என உத்தர்காண்ட் மாநில அரசு நிர்வாகம் அறிவித்துள்ளது
மேற்கோள்கள்
வெளி இணைப்பு
- உத்தராஞ்சல் மாநில அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்
- உத்தர்காண்ட் மாநில வெள்ளம் மீட்புப் பணிகள் [[1]]
- உத்தர்காண்ட் மாநில வெள்ளம் படங்கள் [[2]]