கவலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அழும் குழந்தையொன்றின் கண்ணீரைச் சித்தரிக்கும் படம்.

தவறான கணிப்பால் ஏற்படுகின்ற ஒரு மன நோய் தான் கவலை. உறுதியின்மை அல்லது ஏதேனும் அபாயத்தைச் சந்திக்க நேரிடும்போது நாம் உணரும் ஒருவகை சாதாரண உணர்ச்சிதான் கவலை. வேதாத்திரி மகரிஷி கவலை என்பதை கற்பனையான வலை என்று குறிப்பிடுகிறார்.[1]

கவலை அல்லது துயரம் என்பது இழப்பு, உதவியற்ற நிலை, பயனற்ற நிலை போன்ற உணர்ச்சிகளை வெளிக்காட்டும் ஒரு மன உணர்வாகும். இந்நிலையில் மனிதர்கள் பொதுவாக அமைதியாகவும், ஆற்றலற்ற நிலையிலும், ஏனையோரிடமிருந்து விலகியும் இருக்கத் தலைப்படுவர். அத்துடன் அழுகை மூலமும் அவர்களது இந்த மனநிலை வெளிக்காட்டப்படும்.

மனநிலை தற்காலிகமாக பாதிக்கப்பட்டிருப்பின் அது கவலை எனவும், தொடர்ந்த, ஆழமான மனநிலை பாதிப்பு இருப்பதுடன், தமது வழக்கமான செயல்களை செய்யும் திறனை இழந்தும் இருப்பின் அது மனச்சோர்வு எனவும் கருதப்படும்.

போல் எக்மான் வகுத்துள்ள ஆறு அடிப்படை உணர்ச்சிகளான மகிழ்ச்சி, கவலை, கோபம், ஆச்சரியம், பயம் மற்றும் அருவருப்பு ஆகியவற்றில் கவலையும் அடங்கும்.[2].

உசாத்துணை[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-06-01. பார்க்கப்பட்ட நாள் 2013-12-16.
  2. Daniel Goleman, Emotional Intelligence (London 1996) p. 271
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவலை&oldid=3548478" இலிருந்து மீள்விக்கப்பட்டது