பி. கக்கன்
கக்கன் (Kakkan, ஜூன் 18, 1908 - டிசம்பர் 23, 1981), தலித் இனத் தலைவர், விடுதலை போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிஸ் குழுத் (கமிட்டித்) தலைவர், இன்னும் இதரப் பல பொறுப்புக்களை 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் வகித்தவரும், தலைசிறந்த அரசியல்வாதியும் ஆவார்.
பொருளடக்கம் |
[தொகு] இளமைக்காலம்
கக்கன் ஜூன் 18, 1908 ஆம் ஆண்டு மதராஸ் இராசதானியாக தமிழகம் இருந்தபொழுது மதுரை மாவட்ட, மேலூர் தாலுக்காவிலுள்ள தும்பைபட்டி கிராமத்தில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தையார் பெயர் பூசாரி கக்கன், கிராமக் கோயில் அர்ச்சகராக (பூசாரியாக) பணிபுரிந்தவர்[1]. தொடக்கக் கல்வியை மேலூரில் பயின்ற அவர் மேல்நிலைப் படிப்பிற்காக திருமங்கலம் வந்து அங்கே ஓர் அரசு மாணவர் விடுதியில் தங்கிப் படித்தார்.
[தொகு] இந்திய விடுதலை போராட்டம்
கக்கன் தனது இளவயதிலேயே சுதந்திர போராட்டத்தில் ஈடுபடலானார். பள்ளி மாணவப்பருவத்திலேயே கங்கிரசு இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டார்[2]. அன்றைய காலகட்டத்தில் தலித்துகள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நுழைவது தடை செய்யப்பட்டிருந்தது. இராஜாஜி அரசு கோயில் உள்நுழைவு அதிகாரம் மற்றும் உரிமைச் சட்டம், 1939 என்ற சட்டத்தினை கொண்டு வந்ததின் விளைவாக தலித்துக்கள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நூழைய தடைசெய்யபட்டிருந்ததை இச்சட்டம் நீக்கியது. மதுரையில் கக்கன் தலித்துக்கள் மற்றும் சாணர்களை தலைமைத் தாங்கி மதுரை கோயிலினுள் நுழைந்தார்[2]. ஆங்கிலேயனே வெளியேறு இயக்கத்திலும் கக்கன் பங்கேற்று அலிப்பூர் சிறையில் [2] அடைக்கப்பட்டார். 1946 இல் நடந்த தொகுதிப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று [2] 1946 முதல் 1950 வரை உறுப்பினராக பொறுப்பு வகித்தார்.
[தொகு] சுதந்திர இந்தியாவில் அரசியல் பணி
கக்கன் இந்தியா நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக 1952 முதல் 1957 வரை பொறுப்பு வகித்தார்[3]. காமராசர் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்கும் பொருட்டு தான் வகித்து வந்த தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் {கமிட்டி) தலைவர் பதவியை விட்டு விலகியபொழுது கக்கன் அந்தப் பதவியை ஏற்றார்[4][5][6]. 1957 இல் இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று மதராஸ் மகாணத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்றது. கக்கன் பொதுப்பணித்துறை (மின்துறை நீங்கலாக), அரிசன நல்வாழ்வு, பழங்குடியினர் நலத்துறை ஆகியத் துறைகளின் அமைச்சராக ஏப்ரல் 13, 1957 இல் பொறுப்பேற்று கொண்டார்[7][8]. மார்ச் 13, 1962 முதல் அக்டோபர் 3, 1963 வரை விவசாயத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்[3]. ஏப்ரல் 24, 1962, முதல் வணிக ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்[9]. அக்டோபர் 3, 1963 [3]அன்று மாநில உள்துறை அமைச்சராக பொறுப்பேற்று 1967 இல் காங்கிரஸ் தமிழ்நாட்டில் தோற்கும் வரை அப்பொறுப்பிலிருந்தார்[10] .
[தொகு] நற்பணிகள்
கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் [2]கட்டப்பட்டன. தலித்துக்களின் வாழ்வு முன்னேற்றத்திற்காக அரிசன சேவா சங்கம்[2] உருவாக்கப்பட்டது. அவர் விவசாய அமைச்சராக பொறுப்பில் இருந்த காலத்தில் இரண்டு விவாசாயப் பல்கலைக் கழகங்கள் [2]மதராசு மகாணத்தில் துவக்கப்பட்டன. இவரின் நாட்டுக்காற்றியப் பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவரின் உருவப்படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை 1999[2] ஆண்டு வெளியிட்டு கௌரவப்படுத்தியது.
[தொகு] இறுதி காலம்
1967 சட்டமன்றத் தேர்தலில் கக்கன் மேலூர் (தெற்கு) தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஒ.பி. ராமனிடம் தோற்றார்[11]. இத்தேர்தல் தோல்விக்குப்பின் அரசியலில் இருந்து ஒய்வு பெற்றார்.
[தொகு] தனிக் கருத்து போக்கு
கக்கனின் தந்தையார் கோயில் அர்ச்சகராக இருந்த காரணத்தினால், கக்கன் அதிக சமயப்பற்றுள்ளவராக திகழ்ந்தார். மகாத்மா கந்தியின் வழியை பின்பற்றி நடப்பவர். பெரியார் தனது சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் இந்துக்களின் கடவுளான இராமனின் உருவப்படம் எரிப்பு போராட்டத்தை அறிவித்தபொழுது, கக்கன் அதற்கு தனது கடும் கண்டணத்தை தெரிவித்தார். இது ஒரு சமூக விரோதச் செயல் என்றும், சுதந்திரத்திற்காக பாடுபட்ட காந்தியின் நம்பிக்கைக்குறிய கடவுளை அவமதிப்பதாகும் என்று எச்சரிக்கையும் விடுத்தார்[12] . ஆனால் பெரியார் உறுதியுடன் சென்னை மெரினாவில் திராவிடர் கழகம் சார்பில் உருவப்படம் எரிப்பு போராட்டம் நடத்தி சிறை சென்றார்[12].
[தொகு] மேற்கோள்கள்
- ↑ சந்திரா, ரமேஷ்; சங்கமித்திரை (2003). புதிய நூற்றாண்டில் தலித் அடையாளங்கள். காமன்வெல்த் பதிப்பகம். ISBN 8171697658, ISBN 9788171697656.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 "24. சுதந்திர பாராட்ட வீரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு". பத்திரிகையாளர் சம்மேளனத்தின் நடப்பு வெளியீடுகள். பத்திரிகையாளர் சம்மேளனம், இந்திய அரசு. பார்த்த நாள் 2008-10-29.
- ↑ 3.0 3.1 3.2 இந்தியாவில் யாருடன் யார். கைடு பதிப்பகம். 1967. pp. 64.
- ↑ முத்துசாமி, எம். எஸ். (1988). கு. காமராசர்: சமூக அரசியல் ஆய்வு. தமிழ்நாடு அரசியல் அறிவியல் கழகம். pp. 101.
- ↑ நரசிம்மன், வி. கே. (1967). காமராசர்: ஆய்வு. மணக்தலாஸ். pp. 71.
- ↑ "கக்கன் டி.என்.சி.சி தலைவர்". த இந்து : இந்த நாள் அந்த காலம். டிசம்பர் 30, 2004. http://www.hindu.com/2004/12/30/stories/2004123000240902.htm. Retrieved 2008-10-29.
- ↑ "அமைச்சரவை". மதராஸ் சட்டமன்றம் 1957 - 1962. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை. பார்த்த நாள் 2008-10-29.
- ↑ "அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாக்காக்கள்". மதராஸ் சட்டமன்றப் பேரவை 1957 - 1962. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை. பார்த்த நாள் 2008-10-29.
- ↑ "மாதராஸ் சட்டமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் விவரம் -மார்ச் 29 முதல் மே 7, 1962 வரை". மதராஸ் சட்டமன்றம் 1962 - 1967. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை. பார்த்த நாள் 2008-10-29.
- ↑ நீதிக்கட்சியின் பொன்விழாக் கொண்டாட்டம், 1968. நீதிக்கட்சி. 1968. pp. 68.
- ↑ "1967 இல் நடைபெற்ற மதராஸ் சட்டமன்றத் தேர்தலின் புள்ளியியல் வெளியூடு". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் 2008-10-30.
- ↑ 12.0 12.1 ரிச்மென், பவுலா (1991). தெற்காசியாவின் மாறுபட்டத் தனமை கொண்ட பண்பாடுகள், அத்தியாயம் 9: ஈ. வெ. ராமசாமியின் இராமாயண வாசிப்பு. கலிபோர்னியா பல்கல்க்கழகம். http://www.escholarship.org/editions/view?docId=ft3j49n8h7&chunk.id=d0e9800&toc.depth=1&toc.id=d0e9800&brand=eschol.