ஊமை விழிகள் (1986 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி removed Category:இந்தியத் திரைப்படங்கள்; added Category:இந்தியத் தமிழ் திரைப்படங்கள் using HotCat |
|||
வரிசை 60: | வரிசை 60: | ||
{{அரவிந்தராஜ் இயக்கிய திரைப்படங்கள்|state=autocollapse}} |
{{அரவிந்தராஜ் இயக்கிய திரைப்படங்கள்|state=autocollapse}} |
||
[[பகுப்பு:1986 தமிழ்த் திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:1986 தமிழ்த் திரைப்படங்கள்]] |
||
[[பகுப்பு:இந்தியத் திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:இந்தியத் தமிழ் திரைப்படங்கள்]] |
||
[[பகுப்பு:விஜயகாந்த் நடித்துள்ள திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:விஜயகாந்த் நடித்துள்ள திரைப்படங்கள்]] |
06:42, 11 செப்டெம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
ஊமை விழிகள் | |
---|---|
இயக்கம் | அரவிந்தராஜ் |
தயாரிப்பு | ஆபாவாணன் |
கதை | ஆபாவாணன் |
திரைக்கதை | ஆபாவாணன் |
இசை | மனோஜ்-கியான் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | எ. ரமேஷ் குமார் |
வெளியீடு | 1986 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஊமை விழிகள் 1986ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இதை ஆபாவாணன் என்ற திரைப்படக் கல்லூரி மாணவர் தன் கல்லூரி மாணவர்களை கொண்டு எடுத்தார். இதில் விஜயகாந்த் முதன்மையான வேடத்தில் நடித்தார். அருண் பாண்டியன், கார்த்திக், ஜெய்சங்கர், சரிதா, இரவிச்சந்திரன், மலேசியா வாசுதேவன், சந்திர சேகர், விசு, கிஷ்மு, சச்சு, சிறீ வித்யா, டிஸ்கோ சாந்தி, இளவரசி, தேங்காய் சீனிவாசன், சசிகலா போன்றோர் இதில் நடித்தார்கள். இது திகில் கலந்த படமாக வந்தது.
கதை சுருக்கம்
சோழா பிக்னிக் வில்லேஜ் (இதன் உரிமையாளர் பி.ஆர்.கேயாக ரவிச்சந்திரன் நடித்துள்ளார்) என்ற இடத்திற்கு வரும் இளம்பெண்கள் பலர் மர்மமான முறையில் காணாமல் போகிறார்கள். அதை பற்றி விசாரிக்க வரும் செய்தியாளர் ராஜா அங்கு நிகழும் மர்மத்தை பற்றி துப்பு துலக்க ஆரம்பிக்கிறார். அவருக்கு துணை புரிகிறார்கள் 'தினமுரசு' செய்தி இதழின் உரிமையாளர் சந்திரனும் (ஜெய்சங்கர்), மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீன தயாளனும் (விஜயகாந்த்).
நடிகர்கள்
- விஜயகாந்த் - தீனதயாளன் (காவல்துறை கண்காணிப்பாளர்)
- அருண் பாண்டியன் - விஜய்
- கார்த்திக் - ரமேஷ் (சிறப்புத் தோற்றம்)
- ஜெய்சங்கர் - சந்திரன்
- சரிதா -சுமதி
- இரவிச்சந்திரன் - பி. ஆர். கே.
- மலேசியா வாசுதேவன் - ராஜா
- சந்திர சேகர் - ராஜா
- விசு -ரத்தினசபாபதி
- சிறீ வித்யா
- டிஸ்கோ சாந்தி
- இளவரசி
- தேங்காய் சீனிவாசன்
- சசிகலா
பாடல்
இதில் பாடியிருப்பவர்கள் ஆபாவாணன், பி. பி. சீனிவாசு, ஜேசுதாசு, சசி ரேகா, சுரேந்தர் [1]. இப்படத்தின் அனைத்து பாடல்களையும் ஆபாவாணன் இயற்றினார்.
தோல்வி நிலையென நினைத்தால், மாமரத்து பூவெடுத்து, நிலைமாறும் உலகில், குடுகுடுத்த கிழவனுக்கு, இராத்திரி நேரத்து பூஜையில், கண்மணி நில்லு காரணம் ஆகியவை இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களாகும்[1].
தோல்வி நிலையென நினைத்தால் பாடல்
திரைப்படம் | ஊமை விழிகள் |
இசை | மனோச் கயான் |
பாடியவர்கள் | பி. பி. சிறீநிவாசு, ஆபாவாணன் |
தோல்வி நிலையென நினைத்தால் ஒரு புகழ்பெற்ற சோகத் தமிழ்ப் பாடல் ஆகும்.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 இன்பம் இங்கே/