தொரப்பள்ளி
Jump to navigation
Jump to search
தொரப்பள்ளி | |
---|---|
வருவாய் கிராமம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருட்டிணகிரி |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 2,715 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
தொரப்பள்ளி ( Thorapalli ) அல்லது தொரப்பள்ளி அக்ராரம் என்பது ஒசூர் வட்டம், கிருட்டிணகிரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியாவைச் சேர்ந்த ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]. இவ்வூர் தென் பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இவ்வூர் ஒசூரில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் ஒசூர் கிருட்டிணகிரி சாலைக்கு அருகில், தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ளது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
இவ்வூரில் 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி 2177 வீடுகள் உள்ளன. மொத்த மக்கள் தொகை 9849, இதில் 4669 பேர் ஆண்கள், 5180 பேர் பெண்கள் ஆவர். எழுத்தறிவு விகிதம் 72.16% ஆகும் இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விதமான 80.09க்கும் குறைவு ஆகும்.[2]
ஊரின் சிறப்பு[தொகு]
இந்த ஊரில்தான் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ராஜாஜி பிறந்தார். அவர் பிறந்த வீட்டை நினைவு இல்லமாக தமிழக அரசு பராமரித்து வருகிறது.