கிறிஸ்தியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 30: வரிசை 30:
==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
{{reflist|2}}
{{reflist|2}}

==வெளி இணைப்புகள்==
*[http://www.britannica.com/eb/article-9399699/Christology Encyclopaedia Britannica, Christology - full access article]

[[Category:கிறித்தவ இறையியல்]]
[[Category:கிறித்தவ மெய்யியல்]]

[[ar:كرستولوجيا]]
[[bg:Христология]]
[[ca:Cristologia]]
[[cs:Christologie]]
[[da:Kristologi]]
[[de:Christologie]]
[[en:Christology]]
[[es:Cristología]]
[[eo:Kristologio]]
[[fr:Christologie]]
[[ko:그리스도론]]
[[id:Kristologi]]
[[ia:Christologia]]
[[is:Kristsfræði]]
[[it:Cristologia]]
[[he:כריסטולוגיה]]
[[la:Christologia]]
[[lt:Kristologija]]
[[ml:ക്രിസ്തു വിജ്ഞാനീയം]]
[[nl:Christologie]]
[[ja:キリスト論]]
[[no:Kristologi]]
[[pl:Chrystologia]]
[[pt:Cristologia]]
[[rm:Cristologia]]
[[ru:Христология]]
[[sq:Kristologjia]]
[[simple:Christology]]
[[sk:Christológia]]
[[sr:Христологија]]
[[sh:Hristologija]]
[[fi:Kristologia]]
[[sv:Kristologi]]
[[tl:Kristolohiya]]
[[tr:Kristoloji]]
[[vec:Cristologia]]
[[zh:基督论]]

07:47, 16 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

கிறிஸ்தியல் என்பது இறைமகன் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய இறையியலைக் குறிக்கும். விவிலியத்தைப் பொறுத்தவரை யோவான் நற்செய்தியும், எபிரேயருக்கு எழுதிய திருமுகமும் சிறந்த கிறிஸ்தியல் விளக்க நூல்களாக அமைந்துள்ளன.

யோவான் நற்செய்தி

கிறிஸ்துவைப் பற்றி யோவான் நற்செய்தியில் பின்வரும் முக்கிய விளக்கங்கள் தரப்படுகின்றன.

தந்தையும் மகனும்

இறைத்தந்தை, இறைமகன் மற்றும் மனிதருக்கு இடையே உள்ள உறவுநிலை பற்றி இயேசு பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

"தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை."[1]

"நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது. என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்."[2]

ஆட்டுக்குட்டியும் ஆயரும்

மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன். இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்; தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன் ' என்றார்.[3]

இயேசு கூறியது: "நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும். தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன்; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன். என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன்."[4]

வாழ்வு அளிப்பவர்

எபிரேயர் திருமுகம்

எபிரேயருக்கு எழுதிய திருமுகத்தில் பின்வரும் விளக்கங்கள் இடம்பெறுகின்றன.

இறைமகனும் வானதூதரும்

இயேசுவும் மோசேயும்

குருத்துவமும் பலியும்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்தியல்&oldid=953465" இலிருந்து மீள்விக்கப்பட்டது