சரபா
உத்திர காமிகாகமம் இந்த வடிவத்தினை ஆகாச பைரவர் என்று கூறுகிறது.[1] தத்வநிதி சிற்பநூல் இவ்வடிவத்திற்கு 32 கைகள் இருப்பதாக கூறுகிறது. இவர் பார்வதியை துர்க்கை என்னும் உருவத்தை அனைத்தவாறு இருப்பார். இந்த வடிவத்தின் துணையாக பார்வதியின் ஒரு வடிவமாக ஹாரிப்ரணாசினி விளங்குகிறாள். வியாசர் இந்த மூர்த்தியை பரிகாரமற்ற துன்பத்திற்கும், நோய்களுக்கும், விஷபயம் மற்றும் பூத பிரேத உபாதைகள் ஆகியவற்றுக்கு வணங்கலாம் என்று கூறுகிறார். வேறு பெயர்கள்[தொகு]
தோற்றம்[தொகு]![]() சரபேசுவரர் எட்டு கால்களும், இரண்டு முகங்களும், நான்கு கைகளும், மிகக்கூரிய நகங்களும், உடலின் இருபுறங்களில் இறக்கைகளும், சிங்கத்தினைப் போல் நீண்ட வாலும், கருடனைப் போன்ற மூக்கும், யானையைப் போன்ற கண்களும், கோரப் பற்களும், யாளியைப் போன்ற உருவமும் உடையவராக நம்பப்படுகிறார்.[2] வடிவங்கள்[தொகு]லிங்க சரபேசுவரர்[தொகு]காஞ்சிபுரம் அருகிலுள்ள தாமல் நகரில் லிங்க உருவத்தில் சரபேசுவரர் உள்ளார். வேறு எங்கும் இவ்வாறு லிங்க சரபேசுவரர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.[3] உருவக் காரணம்[தொகு]இரணியன் எனும் அசுரனைக் கொன்ற பின் விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மருக்கு கோபம் தணியாமல் இருந்தது. அதைக் கண்டு நடுங்கிய தேவர்கள் தங்களைக் காக்கும்படி சிவனிடம் வேண்டிக் கொண்டார்கள். அவர்களை காக்க சிவன் எடுத்த அவதாரமே சரபேசுவரர் என்னும் வடிவம் ஆகும். சரபேசுவரர் நரசிம்மரை தன் நகங்களால் துண்டு துண்டாக வெட்டி போட்டு மற்றும் அவரின் வயிற்றை கிழித்து அவரின் குடல்கலை பிடிங்கி வெளியே வீசி விட்டு அவரை கொன்று விட்டு மற்றும் அவரின் தொலை உரித்து எடுத்து அதை ஆடையாக அணிந்து கொண்டு அவரை கொன்று விட்டார். பின்பு விஷ்ணு அவரின் சுய ருபத்தை எடுத்து திருப்பரமபதம் சென்றார் மேலும் சிவன் கைலாயம் சென்றார் மற்றும் உலகமும், தேவர்களும் அமைதி அடைந்தனர். கோயில்கள்[தொகு]தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருபுவனம் கம்பகரேசுவரர் கோயிலில் சரபேசுவரருக்காக ஒரு தனி சந்நிதி உள்ளது. இங்குள்ள மூலவர் கம்பகரேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இதற்கு நடுக்கம் தீர்த்த பெருமான் என்று பொருளாகும்.[4] திரிபுவன சக்கரவர்த்தி எனச் சிறப்புப் பெற்றிருந்த மூன்றாம் குலோத்துங்கச் சோழன் கட்டிய சிறப்பு மிக்க கோயில் திரிபுவனம் கம்பகரேசுவரர் கோயில். கம்பகரேசுவரர்த் தேவர்களின் நடுக்கம் தீர்த்த பெருமான் என்று போற்றுவர். இக்கோயிலின் முதன்மையான மூர்த்தி சிலை யாருடையது என்றால் சரபேசுவரர் உடையது தான் ஆகும். இவர் கட்டிய துக்காச்சி ஆபத்சகாயேசுவரர் கோயில், சிதம்பரமத்தில் அமைத்த சிதம்பரம் நடராசர் கோயிலில் ஆகிய இடங்களிலும் சரபேசுவரர் திருவுருவங்கள் உள்ளன. ராஜ ராஜன் தேவி கட்டிய திரைலோக்கிய சுந்தரர் கோயிலிலும் ஒரு சரபேசுவரரை அமைத்தார். இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் முனைக்காடு கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயிலில் சிவ பூசைக்கு வருடம் ஒரு முறை தெய்வமுற்று ஆடுபவரில் மக்கள் நோய் அகற்ற முற்படுகிறார் மற்றும் அதை செய்து முடித்தார். இடங்களிலெல்லாம் சரபேசுவரரைப் போற்றும் பாடல்களைப் பாடவும், பூசனை வழிபாடுகள் நிகழ்த்தவும் பொ.ஊ. 13 ஆம் நூற்றாண்டில் வழிவகை செய்தார். திருமலைநாதர் என்பவர் 14 ஆம் நூற்றாண்டில் சரபேஸ்வரர் குறித்து சரப புராணம் என்னும் தமிழ்நூலைப் பாடியுள்ளார். சரப மூர்த்தியைப் போற்றும் பிற பாடல்கள்[தொகு]
கருவிநூல்[தொகு]
அடிக்குறிப்பு[தொகு]
மேலும் காண்க[தொகு] |