சடைய நாயனார்
சடைய நாயனார் | |
---|---|
பெயர்: | சடைய நாயனார் |
குலம்: | ஆதி சைவர் |
பூசை நாள்: | மார்கழி திருவாதிரை |
அவதாரத் தலம்: | திருநாவலூர் |
முக்தித் தலம்: | திருநாவலூர் |
"என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் அடியார்க்கும் அடியேன்" - திருத்தொண்டத் தொகை.
சடைய நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்[1][2][3]. திருநாவலூரிலே ஆதிசைவ மரபிலே தோன்றியவர் சடையனார்[4]. இவர் இசைஞானியாரை மணந்து உலகமெலாம் மெய்ஞான ஒளியைப் பரப்பும் நம்பியாரூரரை மகவாகப் பெற்றுத் தந்த பெருமை உடையவர்.
நுண்பொருள்[தொகு]
- சிவதொண்டர்க்குத் தந்தையாம் பேறுபெற்றோர் சிவப்பேறு பெற்றோரே.
சடையனார் நாயனார் குருபூசை: மார்கழித் திருவாதிரை.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 63 நாயன்மார்கள், தொகுப்பாசிரியர் (01 மார்ச் 2011). சடைய நாயனார். தினமலர் நாளிதழ். https://m.dinamalar.com/temple_detail.php?id=1968.
- ↑ T N Ramachandran. "The Puranam of Sataiya Nayanar". 13 டிசம்பர் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Roshen Dalal (2011). Hinduism: An Alphabetical Guide. Penguin Books India. பக். 281. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-14-341421-6.
- ↑ மகான்கள், தொகுப்பாசிரியர் (30 ஜூலை 2010). நாயன்மார்கள். தினமலர் நாளிதழ். https://m.dinamalar.com/temple_detail.php?id=39.
- பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்