குடிசெட்லு
தோற்றம்
குடிசெட்லு | |
|---|---|
சிற்றூர் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கிருஷ்ணகிரி |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 635 105 |
குடிசெட்லு (Gudisettlu) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது அலசபள்ளி பட்டவரபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஊராகும்.
பெயராய்வு
[தொகு]குடி என்ற தெலுங்கு சொல் கோயிலைக் குறிக்கும் செட்டு என்ற தெலுங்குச் சொல் செடியைக் குறிக்கும். இந்த ஊரில் பழமையான திம்மராய சுவாமி கோயில் உள்ளது. அதைச் சுற்றி செடிகள் வளர்ந்துள்ளன. எனவே குடிசெட்லு என்னும் இப்பெயர் வந்திருக்கலாம் என்கிறார் கோ. சீனிவாசன்.[1]
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 308 கிலோமீட்டடர் தொலைவிலும் உள்ளது.[2]