பனை
| பனை மரம் | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Borassus flabellifer
|
||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப் பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.
பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு. தமிழில் உள்ள மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் புல், மரம் என்பவற்றுக்கு இடையேயான வேறுபாட்டைப் பின்வருமாறு வரையறை செய்கிறது.
- புறக் காழனவே புல்லெனப் படுமே (பாடல் 630)
- அகக் காழனவே மரமெனப் படுமே (பாடல் 631)
பலவகையான பயன்களை நெடுங்காலத்துக்குத் தருவதால் பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர்.
பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 - 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.
பொருளடக்கம் |
[தொகு] சிற்றினங்கள்
போரசசு (பனை) என்னும் பேரினத்தில் வரும் சிற்றினங்கள் [1]
- போராசசு அத்தியோபம் - ஆப்பிரிக்கப் பனை மரம் (Borassus aethiopum)
- போ. அகேசி - மேற்கு ஆப்பிரிக்கப் பனை (Borassus akeassii - Ake Assi`s Palmyra Palm (West Africa) )
- போ. ஃப்ளாபெல்லிபர் - ஆசியப் பனை (Borassus flabellifer - Asian Palmyra Palm (southern Asia and southeast Asia) )
- போ. என்னியனசு - நியூ கினி பனை (Borassus heineanus - New Guinea Palmyra Palm (New Guinea) )
- போ. மடகாசுகரியன்சிசு - மடகாசுகர் பனை (Borassus madagascariensis - Madagascar Palmyra Palm (Madagascar) )
- போ. சாம்பிரானென்சிசு - சாம்பிரானோ பனை (மடகாசுகர்)(Borassus sambiranensis - Sambirano Palmyra Palm (Madagascar) )
[தொகு] பனை காணப்படும் இடங்கள்
இது எவ்விடத்தில் தோன்றியது என்பது சரியாகத் தெரியவில்லை. ஆசிய நாடுகளில்தான் பனைகள் அதிகம் காணப்படுகின்றன. தற்காலத்தில் ஆசியாவில் இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனீசியா, மியன்மார், தாய்லாந்து, வியட்நாம், சீனா போன்ற நாடுகளிலும், கொங்கோ போன்ற மேற்கு ஆபிரிக்க நாடுகளிலும் காணப்படுகின்றன.
[தொகு] பனையின் இன்னல்கள்
- பனங்கருக்கு
- பனங்கருக்குகள்,பனைமரமேறிகளுக்கு மிகுந்த ஊறு விளைவிப்பவையாகும். கூர்மையான அந்த முட்கள் போன்ற அமைவுகள்,அவ்வேழை பனைமரமேறிகளுக்கு இன்னல் தருகிறது. மிகுந்த அனுபவசாலிகளே பனைமரமேறுவர்.தளைநாரைக் காலில் கட்டி பனைமரம் ஏறுவர்
[தொகு] காட்சியகம்
-
ஆசியப்பனை,கொல்கத்தா.
-
கிளைப்பனை,வல்லிபுரம்